இன்று எனது நிறுவனப் பெண் ஊழியர்கள் சிலர் என்னுடன் கதைத்தார்கள். அவர்கள் மிகவும் திறமையானவர்கள். பல சேவைகளை நிறுவனத்திற்குச் செய்துள்ளார்கள். இருந்தாலும் எல்லாவற்றிற்கும் சத்தம் போட்டுக்கதைப்பதால் பலர் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. நான் இந்த நிறுவனத்திற்கு வந்த காலத்தில், அவர்கள் இருவரும் இரு துருவங்களில் நின்று, ஆளாளுக்கு குறைசொல்வார்கள். எதிரும் புதிருமாக, கீரியும் பாம்புமாக என எப்போதும் எதிர் திசைகளில் நின்றார்கள். அனைவரது செயற்பாடுகளையும் அவதானித்த நான், அவர்களிடம் நீங்கள் இப்படி ஆளுக்காள் அடிபடுவதை விட கொஞ்சம் அமைதியாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கதையுங்கள். பிரச்சனைகள் குறையும் என்றெல்லாம் சொன்னேன். கேட்டார்கள். பிரச்சனைகள் குறைந்தன. நான் கூடப் பணிப்பாளராக வர இவர்களும் காரணமாக இருந்திருக்கலாம். தற்போது, பல பிரச்சனைகள் வந்து போய்விட்டன. காலம் மாறிவிட்டது..! வயதுகள் கூடிவிட்டது..! பொருளாதாரப் பிரச்சனைகள் கூடக் குடும்பப் பிரச்சனைகளும் வந்துவிட்டன..! எல்லாவிடயங்களையும் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய மனநிலைகளில் யாரும் இல்லை. இந்த நிலையில், இவர்கள் என்னிடம் நீ
கருத்துகள்
கருத்துரையிடுக