இறைவன் சிலருக்கு உயர் பதவிகளைக் கொடுப்பது அவர்களது திறமைகளைக் காட்டிலும், சமூகம், மக்கள், நாடு, மற்றும் உலகம் தொடர்பான ஒரு நியாயமான பார்வை அவர்களுக்கு இருப்பதே என்பது எனது எண்ணம். அந்த வகையில் தான் நானும் தற்போதுள்ள பதவிக்கு வந்துள்ளேன். பணம் சம்பாதிப்பதோ அல்லது சில அதிகார வலுவுள்ள மக்களின் நட்பைப் பேணுவதோ எனது நோக்கம் கிடையாது. நான் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. என்னால் இயன்றவரை யாருக்கும் தீங்கு செய்யாமலும், யாராவது தீங்கு செய்தால், இலாவகமாக அதில் இருந்து தப்பித்து, எனது வாழ்க்கைப்பயணத்தை தொடரவே விரும்புவேன். யாருக்கும் பழிப்பழி செய்ய எனக்கு விருப்பமில்லை. அந்த வழியில் செல்பவர்களுக்குத் தெரியும் அதற்கு முடிவே இல்லை என்பது..! ஆதலால், இயற்கையைப் பாதிக்காக, இறைவனுக்கு பிடித்த மாதிரி வாழ்வதே எனது விரும்பம். நேற்று இயற்கையைப் பாதுகாக்க, குறிப்பாக கடும் வறட்சியால் வாடியுள்ள தாவரங்களுக்கு நீர் விட்டுக்கொண்டிருக்க, பல தேனிகளோ அல்லது குளவிகளோ தெரியாது, கண்பார்வை குறைவு, கடித்துவலியை ஏற்படுத்தின..! கை, இடுப்பு, முதுகில் தடம் பதித்தன. கண்ணாடி அணியாததால், அவை என்ன மாதிரியான பூச்சிகள்
கருத்துகள்
கருத்துரையிடுக