இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விடுமுறை நாட்களில் அலுவலகத்தில் நின்ற அனுபவங்கள்..!

படம்
    ஏறக்குறைய 6 வருடங்களுக்கு   மேலாக பணிப்பாளராக இருந்த போதிலும், ஊழியர்கள் சமூகமளிக்காத சந்தர்ப்பங்களில் நான் வேலை செய்வது இல்லை. பொதுவாக எனது அலுவலகக் கடமை என்பது அரசு சொல்கின்ற விதிகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். உதாரணத்திற்கு 8.00 மணிக்கு ஒரு நிகழ்வு என்றால் நான் 8.00 மணிக்கு அந்த நிகழ்வில் இருக்கக்கூடிய வகையிலே திட்டங்களை மேற்கொள்வேன். அலுவலக நேரம் முடிந்தால் உடனே வீடு சென்றுவிடுவேன். அங்கும் எனக்கான வேலைகள் இருக்கும். அதனைச் செய்யாவிட்டாலும் எனது தலையே உருளும்..! யாரும் என்னை உருட்ட முடியாது. ஆனால் நானே என்னை உருட்டுவேன். நான் மற்றவர்களுக்குப் பயப்படுவதைவிட, எனக்குக் கூடப்பயப்படுவேன்..! இறைவன் எனக்குள் இருக்கின்றார் என்ற பெரு நம்பிக்கை வந்து நிறைய ஆண்டுகள் கடந்துவிட்டன..! அதேபோல் இறைவன் எல்லோருக்குள்ளும் இருக்கின்றார் என்பதும் தெரியும். அதனைப் புரிந்தால் உங்கள் வாழ்க்கை வேறுமாதிரியாக இருக்கும் என்பது நான் கண்ட உண்மை. கஷ்டங்கள் இருந்தாலும் வாழ்வில் ஒரு முழுமை கிடைக்கும். இப்படியான கொள்கைகளுடன் இருக்கும்போது, ஏப்பிரல் 6 மற்றும் 7 ஆம் திகதிகள் வேலைசெய்துவிட்டு தமிழ் ப

பிறேமலு..!

படம்
    இன்று போயா தினம். கொஞ்ச நேரம் வேலை ஒன்றும் இல்லாமல் இருக்க, நித்திரை வந்துகொண்டிருந்தது. அப்போது எழும்பிச்சென்று ஒரு பத்திரிகையைப் பார்க்கும் போது ஒரு மலையாளப்படம் 3 கோடியில் எடுக்கப்பட்டு 130 கோடி தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது என இருந்தது. அந்தப்படத்தை உடனே இணையத்தில் தேடிப் பார்த்தேன். நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு அழகான காதல் கதையாக அப்படம் இருந்தது..! முன்னைய காலங்களில் பெண்கள் ஆண்களுடன் அதிகமாகப் பழகுவதில்லை. அப்படி பழகினால்   அவர்கள், உறவினர்களாக அல்லது சகோதரங்களாகவே இருக்க முடியும். தற்போதைய காலத்தில் ஒரு பெண்ணிற்கு பல ஆண் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் யாரை அப்பெண் விரும்புகின்றார் என்பதை அவளாக வாய் திறந்து சொன்னால் ஓழிய யாரும் சொல்லிவிட முடியாது..! அது மாத்திரமன்றி, வாய் திறந்து சொன்னாலும், அதனை முழு மனத்துடன் சொல்கின்றாளா அல்லது ஒரு விளையாட்டுக்காகச் சொல்கின்றாளா என்பதைப் பொறுத்தே   அப்படியான காதலின் ஆழம் இருக்கும். இந்தப்படத்தின் கதையே அவ்வாறான சூழலில் மிகவும் சுவாரசியமாகவும், நகைச்சுவையுடனும் பின்னப்பட்டுள்ளது. ஒருவனை காதலிப்பது போல் பல இடங்களில் செயற்பாடுக

முதலும் நீ முடிவும் நீ..!

படம்
    கிஷேன் தாஸ் என்ற யூடியூப்பர் உட்பட பல புதுமுகங்கள் நடித்த இந்தப்படத்தைப் பார்த்ததற்கு முதல் காரணம், குட்நைட் படத்தில் நடித்த மீதா ரகுநாத் என்ற நடிகையின் முதல் படம்  இதுவென்பதால்..! ஆனால் நினைத்ததைவிடப் படம் சிறப்பாகவும் தரமாகவும் எனக்குத் தெரிந்தது. குறைந்த செலவில் எடுக்கப்பட்டாலும், வித்தியாசமாக கொண்டு சென்றுள்ளார்கள். 12பி படத்தைப்போல், இப்படிப் போனால் இப்படியாகும்..என்பதைச் சொல்லி எப்படிப் போகவேண்டும் என்பதைக்காட்டிய படம்..! தீர்மானங்கள் படத்தில் வேண்டும் என்றால் இயக்குனர் நினைத்தபடி மாற்றிக்கொள்ளலாம்..! நிஜவாழ்வில்   ஒன்றும் செய்ய முடியாது. சிலர் தமது முடிவுகள் தரும் வெற்றியால் தாம் சரியான பாதையில் செல்வதாக நினைக்கலாம். அது சரியாகவும் இருக்கலாம். தவறவும் இருக்க வாய்ப்புக்கள் உண்டு..! சிலர் தொடர்தோல்விகளால், துவண்ட வலிகளை உணர்ந்து, நடப்பதை ஏற்கும் பக்குவத்தை அடைந்திருக்கலாம். நல்லதோ கெட்டதோ ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள். இந்த இரண்டு நிலையிலும் அடங்காக பிரிவினரும் சாதாரண வாழ்க்கையில் பயணிப்பார்கள். வெற்றி சிலருக்கு நினைத்த மாதிரியே கிடைத்திருக்கும். சிலருக்கு வெற்றி கிடைக்காவிட

பரீட்சைப் பணிப்பாளர்..!

படம்
  என்னுடைய விருப்பம் தாண்டி, நான் திருகோணமலைக்கு மாற்றலாகிப்போகக் காரணம் முன்னைய பணிப்பாளர் நாயகம்..! அவர் என்னிடம், ஒர் உதவியாக கேட்டார் ”யாழ்ப்பாணத்தை விட்டு திருகோணமலைக்கு சென்று அங்குள்ள பணிப்பாளர் யாழ் வர உதவி செய்யவும், அத்துடன் தற்போதைய பரீட்சைப் பணிப்பாளர் ஓய்வு பெற்றதும் அதற்கு விண்ணப்பித்து, தலைமையகத்திற்கு போகவும், முயலச்சொன்னார்.” தற்போது திருகோணமலையில் வேலைசெய்து நான்கு மாதங்கள் முடிய முன்னரே பரீட்சைப் பணிப்பாளருக்கு கோரியுள்ளார்கள்..! திருகோணமலை வந்து, இன்னும் சரியாகத் தொழிற்பட முன்னரே இப்படியான நிலமை வந்தது, தர்ம சங்கடமாக இருக்கின்றது.  திருகோணமலைக்கு ஒரு பதில் பணிப்பாளரே போதும். கடந்த காலத்தில் 8 வருடத்திற்கு மேலாக அவ்வாறே நடந்தது..! தற்போதும் அதற்குப் பொருத்தமான ஒருவர், அங்கு நீண்டகாலமாகக் காத்தும் இருக்கின்றார். தற்போதைய நிலையில், முதலில் இருந்தே, நானும் திருகோணமலைக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால் இடமாற்றம் என்று வந்ததால், ஏற்று என்னால் இயன்ற அளவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன். கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு படிப்பிக்கவும் தொடங்கியுள்ளேன்..! பிள்ளைகளுடன் கதைப்பதும

செய்நன்றி மறவோம்..!

படம்
    நான் திருகோணமலை வரும்போது, எனது நண்பரும் மற்றும் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளருமான ஒருவர் வீட்டிற்கு வருவதை வழக்கமாக  வைத்திருந்தேன். அவருடைய வீட்டில் சில நாட்கள், எனது குடும்பத்துடன் தங்கிய அனுபவமும் உண்டு.! நீண்ட காலத்திற்குப் பிறகு, இம்முறை இடமாற்றம் பெற்று,  திருகோணமலை வரும்போதும், அந்த எண்ணமே இருந்தது..! பின்னர் அவரது உறவினர்  மூலம் தெரிந்தது, அவர் ஊரில் இல்லை..! கனடாவில் குடும்பத்துடன் இருப்பதாக..! அத்துடன் அவரை மறந்து விட்டேன். இனி எப்படி நேரடியாக அவரைச் சந்திப்பது..? அவர் சில வருடங்களுக்கு முன்பு மகனைப் பறிகொடுத்து மிகுந்த துயரத்தில் இருந்தார்..! அந்நேரம், நானும், மனைவி மற்றும் பிள்ளைகளும் அவரது வீட்டிற்கு வந்தோம். அவர்கள் சோகம் கேட்டுக்கவலை அடைத்தோம். அவருக்கு என்னால் ஆறுதல் மட்டுமே சொல்லமுடிந்தது. இவ்வாறாகச் சூழல், சில வருடங்கள் கடந்த பிறகு, குறிப்பாக சில நாட்களுக்கு முன்னர், ஒரு அழைப்பு வந்தது.! நான் யாழ்ப்பாணம் வரவேண்டும் என்றும் மற்றும் உங்களைச் சந்திக்க வேண்டும் என்றும் அதே நண்பரான   ஆசிரியர் கேட்டுக்கொண்டார்..!   உடனே நான் சொன்னேன்

மிஷன் சாப்டர் 1..!

படம்
    நீண்டகாலமாகப் போராடி தானும் ஒரு சிறந்த   ஹீரோ என்பதை இந்தப்படத்திலும் அருண்விஜய் நிரூபித்துள்ளார்..! படத்தில் கதை என்று பார்த்தால் விஜயகாந்த் காலத்துக்கதை..! பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலும், இந்தியாவிற்கும் உலகிற்கும் அச்சுறுத்தலை   அவர்கள் ஏற்படுத்துவதும், அதற்காக வழமைபோல் குண்டுவெடிப்புக்களுக்குத் திட்டங்கள் போடுவதும், அதற்கு எதிராக நிற்கும் அனைவரையும் அழிப்பதும் என வழமையான பாணிக்கதை என்றாலும் படம் பார்க்க விறுவிறுப்பாக இருந்தது உண்மை. அருண்விஜயின் மகளாக நடித்திருக்கும் இயல் என்ற சிறுமி அனைவர் மனதையும் கொள்ளைகொள்கின்றார்..! எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சாஜயன் என்ற ஒரு மலையாள நடிகையும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஏனையவர்களின் நடிப்பும் நன்றாக இருந்தன. அருண்விஜய்   சில இடங்களில் செய்யும் சாகசங்கள் யதார்த்தத்தை விட்டு தூர விலகியிருக்கின்றது. நான், ஆரம்பத்திலே சொன்ன மாதிரி அனைத்தும் அவரே செய்யவேண்டும் என்ற வழமையான ஹீரோ போமுலாக் கதையாகப் பயணிப்பது, கதையில் புதுமை குறைவாக இருக்கின்றது. இருந்தாலும் சில இடங்களில், ஹீரோ அடிக்கவேண்டும் என எமக்குத் தோன்றுவது இயக்குனரின் வெற்றி.

மேதகு..!

படம்
  சில திரைப்படங்கள் இலங்கையில் கிடைக்காது. இலங்கையின் அரசியல் சட்டங்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதால் அரசு அதனை ஊக்குவிக்காது. மாறாக அதனைத் தடுக்கவே முற்படும். தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை யாராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடிவதில்லை. எதுவும் எமது கைகளில் வந்துவிடும். அரசு எத்தனை தொழில்நுட்பவியலாளர்களை வைத்து அவ்வாறான விடயங்களைத் தடுத்தாலும், அதையும் தாண்டி அவ்விடயங்களை அணுகுவதற்கு உதவக்கூடிய தொழில்நுட்பங்களும் இருக்கவே செய்கின்றன..! பொலிஸ் எவ்வளவு கட்டுப்பாடுகள், சோதனைகள் என செய்தாலும், குற்றங்கள் குறைகின்றதா என்றால் கேள்விக்குறி தான்..! இது உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும். நன்மைக்கான தொழில்நுட்பங்கள் வர, அதனை முறியடிக்கவும், தீமையை ஊக்கிவிக்கவும் தொழில்நுட்பங்கள் வருவதை யார் தான் தடுப்பது..? கள்ளனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..! சரியான அறிவு எது என்பதைப் பிறர் சொல்வதை விட, அவரவர்   தமது அனுபவத்தினூடாகவும், கற்றலின் ஊடாகவும் தெரிந்து பயன்படுத்த வேண்டும். சில வருடங்களுக்கு முன்னர் திரு.த.கிட்டு என்பவர் இயக்கிய தமிழர்களின் போராட்ட

Are you ok baby?

படம்
  மனித வாழ்வியலில் தனி இயல்புகள் நீண்ட காலத்திற்கு கடத்தப்பட தேவையாகக் கருதுவது வாரிசுகளைத் தான்..! பிள்ளைகள் பெறுவது என்பது ஒரு சாதரண விடயமாகக் கருதமுடியாது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்தால் பிள்ளை வருமா என்றால் சந்தேகம் தான்..! எத்தனையோ குடும்பங்கள் பிள்ளைகள் இல்லாமல் வாழ்வினையே வெறுத்துக்கொண்டு, மீதமுள்ள வாழ்க்கையைப் பெரும் சுமையாகக் கருதி, கஷ்டப்பட்டு அதனைச் சுமந்து மறைகின்றார்கள். அதேவேளை எத்தனையோ சந்தர்ப்பங்களில் கருக்கள் உருவாகி, அவை முழுமை பெறாமல் அதுவும் இயற்கையாக நிகழாமல், செயற்கையாகத் தனிப்பட்டவர்களின் விருப்பத்திற்காக அழித்து, இறைவனின் தொழிலை காசுக்காகவும், காமத்திற்காகவும் மனிதர்கள் கையில் எடுத்து வைத்துள்ளார்கள்..! பூமியிலுள்ள அனைத்து உயிர்களும் இந்தப் பிரபஞ்சத்தில் நீடித்து இருக்க, இருக்கும் ஒரே வழி, அவற்றின் வாரிசுகள் தான்..! உதாரணத்திற்கு ஒரு பூனை நீண்டகாலம் இருக்கவேண்டும் என்றால் தன்னால் இயன்ற அளவு குட்டிகளைப் போட்டு, தான் இறந்தாலும், தனது இயல்புகளை அக்குட்டிகள் மூலம் பூமியில் இருக்க விட்டுச்செல்கின்றது..!   இந்த ஆசை மனிதர்களை மிக அதிகமாக பாதிக்கின்றது. சாதனைகள

ஜோ..!

படம்
  மௌனராகம், ராஜா ராணி போன்ற படங்களின் வரிசையிலுள்ள படம்..! 80களில் ஏற்படுத்திய தாக்கமும்,   2000களில் ஏற்படுத்திய தாக்கமும் 2020களில் ஏற்படுத்திய தாக்கமும் எனக்கு ஒன்றாகவே தெரிகின்றது..! இந்த மூன்று படங்களையும் நான் வெவ்வேறு காலகட்டத்தில் ரசித்துப் பார்த்துள்ளேன். இரண்டு பக்கங்களிலும் காதல் வந்து காயத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது..! காயப்பட்டவர்களை கட்டாயப்படுத்தி   கல்யாண பந்தத்திற்குள் தள்ள, கோபம், வெறுப்பு, பரிவு இறுதியில் அதற்குள் தேடிய காதல் முத்தாய் கிடைக்க, அனைவரும் மகிழ்ச்சி..! படமும் வெற்றி..! இளைஞர்களின் தற்போதைய நிலை இது தான். ஈகோ பார்ப்பதும், பின்னர் துடிப்பதும், வெளித்தோற்றத்தைப் பார்த்து, காதலில் விழுந்து, உள்தோற்றம் கண்டு காதலையே வெறுப்பதையும் கணவன், மனைவியாக இருக்கும், இருவரும் கடந்து வந்துள்ளார்கள்..! காலம் அவர்களை இணைத்து, குடும்பங்களுக்கும், நட்புக்களுக்கும் ஏன் அவர்களுக்கும் நம்பிக்கையை கொடுக்கின்றது..! மாநிலம் தாண்டிய காதல், அழகாகவும், அற்புதமாகவும் இருந்தது..! காதலில் ஏற்பட்ட களங்கம், காதலியைத் தற்கொலைவரை கூட்டிச்செல்ல, ஒரே குணம்கொண்ட காதலனும் தற்கொலைக்கு

குட்நைட்..!

படம்
  தமிழராகிய எமது வாழ்க்கைக்கும் ஆங்கிலேயர் வாழ்க்கைக்கும் இடையில் பல ஒற்றுமைகள், திணிப்புக்கள் ஊடாகவே வந்தன..! கடந்த 500 வருடங்களில் வந்த தாக்கங்களாகவே, நான் அவற்றைப் பார்க்கின்றேன். பிறப்பிலேயே மனிதர்கள் விலங்குகள் போலவே உருவாகிப் பிறந்தாலும், பின்னர் ஊட்டப்படும் உணவுகள் போன்று கல்வியும் பழக்க வழக்கங்களும் எம்மால் அறிய முடியாத யாரோ   சிலரின் தீர்மானங்களாகவே இருக்கின்றன..! என்ன செய்வது, ஆதீக்க குணம் கொண்டவர்களின் இவ்வாறான திணிப்புகள் ஊடாக, பல வாழ்வியல் விடயங்கள் தவறுகளாகவோ அல்லது குறைபாடுகளாகவோ பார்க்கப்படுவதும், பரப்பப்படுவதும் இன்னும் தொடர்கின்றது..! இயல்பாக இருக்கும் சில விடயங்கள், தற்போதைய நவீன மற்றும் நாகரீகப்படுத்தப்பட்ட சூழலில் குறைபாடுகளாகவே பார்க்கப்படுகின்றன..! முயற்சிகள், பயிற்சிகள் ஊடாக கல்வியையும் ஏனைய சில திறன்களையும் பெறுவது போல், இவற்றால் மாற்ற முடியாத சில இயல்புகளும் இருக்கின்றன என்ற உண்மையைப் பலரால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. இயற்கையாக வந்தாலும், அதனைக் குறைபாடாப்பார்த்து குழம்பும் கதையாக இப்படம் வந்துள்ளது..! குறட்டை (Snoring) என்பது ஒரு சாதாரண விடயம்..!   நிறம் ஒர

போர்த்தொழில்..!

படம்
  சில படங்களுக்குத் தான் நல்ல விமர்சனங்கள் வரும். அந்த வகையில் இந்தப்படத்தைப் பற்றி நல்ல, வாய் மூலமான விமர்சனங்கள் (Words of Mouth) வந்தன..! அப்பவே நினைத்தேன் படத்தைப் பார்க்க வேண்டும் என்று..! 2023இல் போட்ட திட்டம் 2024இலே தான் பலித்தது..! இன்று தான் முழுப்படத்தையும் பார்த்து முடித்தேன். படம் தொடங்கியது முதல், முடியும் வரை தரமாகவும், விறு விறுப்பாக இதுவரை பார்க்காத வகையில், உளவியல் மற்றும்   அறிவுக்கடத்தல் போன்ற அனுகுமுறைகளுடன் கூடிய சுவாரசியமான திரைக்கதை மூலம் அசோக் செல்வன், சரத்குமார், நிகிதா விமல், சுனில் சுகாடா மற்றும் மறைந்த சரத்பாபு போன்றோர் வாழ்ந்து இருந்தார்கள். அவ்வளவு யதார்த்தமாக படம் சென்றது..! கொஞ்சம் கூட   போரடிக்கவில்லை. சில காட்சிகளைப் பார்க்கப் பயமாக இருந்தன..! சரத்பாபுவின் தோற்றம் நோஞ்சான் மாதிரித் தெரிந்தாலும் உள்ளுக்குள் ஒரு பலமான மனிதன் இருப்பது போல் பயத்தை   உருவாக்கியது..!   அது மாத்திரமன்றி, அவர் செய்த கொலைகளைப் போல், அறிவுக்கடத்தலூடாக இன்னோருவர் தொடர்கொலைகளைச் செய்வதும், அதனைக் கண்டுபிடிக்கப்போய், துப்பறியும் நாயகியே மாட்டுவதும், அவரை கதாநாயகன் காப்பது

பார்க்கிங்..!

படம்
  இந்தப்படம் வீடு வாடகைக்கு விடும் நபர்கள் பார்த்துத் திருந்த வேண்டிய படம்..! இருவீடுகளை வாடகைக்கு கொடுக்கும்போது சரியான முறையில் பார்க்கிங் வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். இல்லை என்றால், வாகனம் இல்லாதவர்களுக்குத் தான் வீடு என்று சொல்லி, கொடுக்க வேண்டும். இரு சாதரணமான குடும்பங்கள் புறத்தாக்கங்கள் மூலம் நடக்கும் சூழலுக்குள் மாட்டுவதைப் பார்க்கும் போது, “வசதிகள் மனிதர்களுக்கு நன்மைகளைக் காட்டிலும் தீமைகளை ஏற்படுத்துகின்றன..” என்ற கோட்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய சூழலுக்கு, உலகம் தள்ளப்படுவது புரிகின்றது..! இளைஞர்கள் என்றால் புரிந்துணர்வு இல்லாமல் ரவுடிகள் போல் அலைவதும், வயதுகள் போனாலும் புத்தி இல்லாமல் இளைஞர்களுக்கு சவால்விட்டுக்கொண்டு திரியும், அறிவிலி ஜென்மங்கள் போல் வாழ்வதும், அந்த நபர்களுடன் கூடவாழும் மனிதர்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது..! தமக்குத் தான்   கோபம் சொந்தமானது என்பது போல நடப்பது முட்டாள் தனங்களில் உச்சமானது. அதனால் வரும் விளைவுகள், அந்த நபர்களைத் தாண்டி குடும்ப உறுப்பினர்களும் மாட்டுவது கொடுமையானது. பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கர்ப்பிணியாக