இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மறதிக்கு மரியாதை..!

படம்
  சில வருடங்களாக ஞாபகசக்தி சிதறுவதை அவதானித்து வருகின்றேன். சில சமயம் தேகப்பயிற்சி செய்யும் போது எண்ணலைத்   தவறவிட்டு, திரும்பத்திரும்ப ஒரே இடத்தில் நிற்பதை, நேரத்தை வைத்துக் கண்டுள்ளேன்..! சில சமயங்களில் எனது மகளின் பெயரை உச்சரிக்க நினைத்து தங்கையின் பெயரை உச்சரிப்பதோ அல்லது எனது அலுவக ஊழியர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது ஆளை மாற்றி உச்சரிப்பதோ, பலகாலமாக எனக்கு இருக்கும் ஒரு பிரச்சனை..! சிறுவயதில், நான் இடக்கையால் எழுதுவதே வழக்கம் என்றும், எனது தாயார் என்னை பலவந்தமாக, வலது கையால் எழுதிப்பழக்கியுள்ளார்..! இதனால், இன்றுவரை இடம், வலம் கண்டுபிடிப்பதற்கு சிறிது நேரம் எனக்குத் தேவைப்படும். எமது உடலின் அமைப்பே இறைவனின் அருளால் அமைந்தது தான். நாம் வெளியில் பார்ப்பது போல்   உள்ளேயும் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. பலசாலியாக உடலைவைத்து நினைக்கும் பல மனிதர்கள் மிகவும் மென்மையானவர்கள் என்பதை அவர்களுடன் பழகினால் தான் புரியும். அதேபோல் மென்மையானவர்கள் தோல் தோற்றம்கொண்டவர்கள், மிகவும் இறுக்கமான, கொடூரமான எண்ணங்களுடனும் இருக்கின்றார்கள்..! உருவத்தைப் போலவே உள்ளத்தைக்கொண்டவர்களும் இருக்

ஜெலிபிஷ் குஞ்சுகள்..!

படம்
                                                              Baby jellyfish stings எனது தாயார் ஏறக்குறைய 80 ஐ நெருங்குபவர். கணவர் இறந்த பின்னரும்   தனியாக எம்மை ஆளாக்கப்போராடியவர்..! முதுமையில் வழமையான உடல் உபாதைகள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன், தனித்து இயங்கவே விரும்புவர். எப்படி இருந்தாலும், இயற்கை தனது கடமையைச் செய்துகொண்டே இருக்கும். தனது வங்கி அலுவல்கள் செய்ய, அவருக்கு இப்போது எனது உதவி தேவைப்படுகின்றது. பல நாட்களாகக் கேட்டுவிட்டார் ”வங்கிக்கு கூட்டிச்செல்லும் படி..!”.   நானும் தலையாட்டிவிட்டு, எனது வேலைப்பளு காரணமாக இழுத்தடித்துவிட்டேன். நேற்று தான் எமது மாணவர்களுக்கு வைக்கும் பரீட்சைகள் முடிவடைந்தன. கடந்த ஒரு மாதமாக இணைப்பாளர் என்ற வகையில் முழுப்பொறுப்பையும் ஏற்றுச்சுமக்கவேண்டிய நிலையில் இருந்தேன். அதற்கிடையே சில முரண்பாடுகள் ஊழியர்களிடையே தோன்றியதால் அவற்றைத் தீர்ப்பதற்கும் முயன்றேன். ஒருவாறு, அவற்றில் இருந்து வெளிவர, வேறுவேலைகள் வந்துவிடும். பரீட்சைகள் நடக்கும் ஒருநாளில் லீவு எடுக்க திட்டம்போட அதுவும் முடியாமல் போய் இன்று தான் லீவு எடுக்கக்கூடியதாக இருந்தது. இந்த சந்தர்ப்ப

வடலி..!

படம்
  எனது நண்பர் அவர் மனைவியுடன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்தார்.   வழமையாக வரும்போது என்னையும், மேலும் சில பள்ளிக்கால நண்பர்களையும் அவர் சந்தித்துவிட்டுச் செல்வது வழமை.   முன்பு வரும்போது அவரது தாயார் இருந்தார். கடந்த 3 வருடங்களில் பல மாற்றங்கள்   உலகில் நடந்தன..!   யாருமே எதிர்பாராத பல சம்பவங்கள் மக்களை அச்சத்திற்குள் வைத்திருந்தன..! அதிலிருந்து மெல்ல மெல்ல மீளும் சூழலுக்கு உலகு வந்துகொண்டிருக்கின்றது. அதேபோல் பல வெளிநாட்டு உறவுகளும், தமது இரத்த உறவுகளையும், நட்புக்களையும் சந்திக்க ஊர்வந்து செல்கின்றார்கள். அது அவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக, பிறந்த மண்ணின்   ஆசியைப் பெற்ற ஒரு உணர்வை கொடுப்பதாக கருதுகின்றார்கள். இவ்வாறான சூழலில் நண்பர் வந்திருந்தார். என்னைச் சந்திக்க விரும்பினார். பணிச்சுமை கூடிய காலம் என்பதால் எல்லோரும் ஒன்று சேருவது கடினமாக இருந்தது. இருந்தாலும் முயற்சி செய்தேன். இன்று மூன்று பேர் சந்திப்பதாக இருந்தது. ஒரு உணவுவிடுதிக்கு செல்ல முடிவு செய்தோம். எனக்கு வழமைபோல் பொக்ஸ்   பொருத்தமாகத் தெரிந்தது. நண்பர் சொன்னார் ”வடலி நல்லாக இருக்கும் என்று..! ” நானும் அதற்கு கிட்

வெளிநாட்டு நண்பர்..!

படம்
  கடந்த சில நாட்களாக வெளிநாட்டுத் தொடர்புகளே அதிகம் வருகின்றன. பல நாடுகளில் இருந்து, அதிலும் குறிப்பாக கனடாவில் இருந்து, பல நண்பர்கள், உறவினர்கள் வந்து செல்கின்றார்கள்..! நேற்று, பல தடங்கல்கள் தாண்டி, நண்பருடன் சந்திக்கத் திட்டமிட, எதிர்பாராமல் நிலமை மேலும் சிக்கலாகி, இறுதியில் ஏதோ வழியில் ஒரு முடிவுக்கு வந்தது. திட்டமிட்டே வாழவேண்டும். ஆனால் போடும் திட்டங்கள் எல்லாம் பலிக்கும் என்று சொல்ல முடியாது..! எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக்கும் என்று யாருக்குத் தெரியும்..? எல்லாம் படைத்தவனுக்கே வெளிச்சம். கனடாவில் இருந்து வந்த பாலிய நண்பர் என்னைச் சந்திக்க நாள் கேட்டார். இன்று சந்திப்போம்..! நாளை சந்திப்போம்..! என்று நாட்கள் செல்ல, சந்திப்பே நடக்காது என்ற அளவில் நிலமை   வந்துவிட்டது..! என்னுடைய பாடசாலை நண்பர்கள் என்று பார்த்தால் அதிகம் ஜந்து பேர் தான் இங்கே உள்ளார்கள். அனைவரும் நன்றாக இருக்கின்றார்கள். ஆனால் தற்போதைய சூழலில் ஒருவரையும் சந்திக்க முடியவில்லை. பல நாட்கள் ஒருவருக்கு ஒருவராக ஏதாவது தவிர்க்க முடியாத சூழலால் ஒன்றுசேர முடியாது போய்விடுவது தொடர்ந்தது..! இறுதியில் நானும் அ

விரதமும் நானும்..!

படம்
    சில விடயங்கள் சமயங்களில் பிடிக்கவில்லை என்றாலும் சில விடயங்கள் தேவை என்பது புரிகின்றது. தற்போது மாணவர்களுக்கான பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. லீவு எடுப்பது கொஞ்சம் கடினம். அத்துடன் முன்னேற்பாடு செய்ய வேண்டும். இந்த நிலையில் தந்தையாரின் மோட்சத்திற்காகவும், குடும்பத்திற்கு நன்மை வேண்டியும் விரதமிருக்க அம்மாவும், மனைவியும் வேண்டினர். தந்தை இல்லாதவர்களே இந்த விரதத்தைப் பிடிக்க வேண்டும். எனது தந்தையே பொதுவாக கோவில் குளங்களுக்குப் போவது மிகக்குறைவு. யாருக்கும் தீமைசெய்யாமல் எங்களுக்கு வழங்கப்பட்ட கடமையை சரியாகச் செய்தாலே இறைவன் எம்மை விரும்புவார் என்றும், எமக்குத் தேவையானவற்றைத் தாமே செய்வார் என்றும் கூறியுள்ளார். அந்தவகையிலே தான் நானும் தற்போது சிந்திக்கின்றேன்..! பயணிக்கின்றேன்..! நேற்று லீவுக்கு முயற்சி செய்ய, அது தடைப்படுகின்றது. பின்னர், விரதம் பிடிக்காமல் வழமைபோல் செயற்படுவோம் என இருந்துவிட்டேன். நேற்றைய நாளில் காலை உணவிற்கு, பாண் வாங்குவது வழமை. ஆனால் எனக்கு மட்டுமே வாங்கவேண்டிய தேவை வந்தது. கூட வாங்கட்டா என்று மனைவியிடம் கேட்க அவரும் வேண்டாம்.. இழுபடும்.. பின்னர் எனக

வழக்குகள்..!

படம்
  நான் பணிப்பாளராக வந்த பிறகு நீதி மன்றம், சட்டத்தரணி எனத்திரியவேண்டிய ஒரு சூழல் இயல்பாக வந்தது. எனது அறிவுக்கு எட்டியவரை, கட்டிளமைப்பருவம் கடந்த பிறகு நான் அறிந்து பிழைகள் செய்தது இல்லை எனலாம். அதற்கு முதல் தவறுகள் நடந்துள்ளன. இன்றுவரை அப்படியான தவறுகள் மேலும் நடக்காமல் இருக்க, ஒவ்வொரு நாளும் இறைவனிடம்   வேண்டுகின்றேன். மனிதன் என்பவன் விலங்குக்குணம் கொண்டவன் தான். கற்ற மற்றும் பட்ட அறிவால் தன்னைச் செதுக்கி, நல்ல மனிதநேயம் படைத்த மனிதனாக மாறுகின்றான். இந்தமாற்றம் ஒவ்வொருவரிடமும் நடந்தால், நாடு நலமாகவும், முன்னேற்றம் பெறக்கூடிய வகையிலும் இருக்கும்.   ஆனால் யதார்த்தம் படிப்பவர்கள் இன்னும் சாணக்கியத்துடன் தவறுகள் செய்து வயிற்றை வளர்ப்பதும், ஏழைகளைச் சுரண்டுவதையும் பார்க்கும்போது நான் சரியான கல்வியை வழங்குகின்றோமா என்ற கேள்வியே வருகின்றது. அறிவு வர வர அடக்கமும், அமைதியும் வரவேண்டும். பேரவாவும், ஆணவமும், வந்தால், அவர்களைக் காப்பாற்றுவதே கடினம். காலமே அதற்கான படிப்பினையை வழங்கும். பிழை செய்த காலம் அறியாப்பருவம் என்பதால் மன்னித்துவிட்டு, பிழையே செய்யாத முதிர்ந்த காலத்தில் வழக்குகளுடன் என்

வாழ்வை அர்த்தமாக்குபவர்..!

படம்
    இன்று ஒரு பதட்டத்துடன் வேலைக்கு போகவேண்டி வந்துவிட்டது. வழமையாக ஏறக்குறைய 8 அல்லது 9 மணி நேரங்களுக்கு மேல் எனது நிறுவனத்தில் நிற்பதில்லை. மாலை ஒரு வெளிநாட்டு இலங்கையர் ஸ்தாபித்து நிர்வாகிக்கும், ஒரு கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு சிறப்பு அதிதியாக போகச் சம்மதித்துவிட்டேன்.  இன்று மாலை  தொடங்கி, முடியும் வரை அங்கேயே நிற்பது என்றும் முடிவெடுத்ததால் ஏறக்குறைய 15 மணிகள் வீட்டைவிட்டு வெளியே நிற்கவேண்டிய சூழல். அத்துடன் இப்படியான சந்தர்ப்பங்களில் காரில் போவது தான் வழக்கம். இன்றும் அவ்வாறே நினைத்து எல்லா வேலைகளையும் நேரத்தோடு முடித்துக்கொண்டு, விரைவில் நேரத்தோடு செல்லக் காரை ஸ்டாட் செய்தேன். அது இயங்க மறுத்தது. பல வழிகளில் முயன்றேன். முடியவில்லை. மகளும் முனைந்தார் முடியவில்லை. பின்னர் வழமைபோல் மோட்டார் சைக்கிளில் சென்றேன். அங்கு பல வேலைகள் இருந்தன. அவற்றை முடித்துக்கொண்டு, காரின் பிரச்சனை பற்றித்தேடினேன்.  அப்போது, திருட்டுக்களில் இருந்து காரைத்தடுத்து வைக்கும் நுட்பம் (Immobilizer) தொடர்பாக இணையத்தில் அறிந்தேன். பின்னர் புரிந்தது.. ”காரில் ஒரு பிழையும் இல்லை. சாவியிலுள்ள

பழைய மாணவர் ஒன்றுகூடல்..!

படம்
    இது தொடர்பான அழைப்பிதழ் ஒரு கிழமைக்கு முதலே வந்துவிட்டது. ஆனால் என்னால் போகக்கூடிய மனநிலை இருக்கவில்லை. பல விதமான மனப்போக்குகள் அலுவலகத்தில் அவதானிப்பதால் அவற்றில் ஒரு தெளிவையும், விளக்கத்தையும் கொண்டுவர முனைந்தேன். ஆனால் பலன் வந்ததாகத் தெரியவில்லை. அது மேலும் மேலும் வளர்ந்துகொண்டே போனது. சில சமயம் சிலருக்கு நன்மையாக அமையக்கூடிய காலநிலை முன்பு இருந்தது. நான் வழமையாகச் சொல்வதுபோல்,  எனது மனதிற்கு பிடிக்காவிட்டாலும் மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்துவிடுவேன். ஒற்றுமையையும், அனைவரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் எடுக்கப்பட்ட முடிவுகளே அவை. ஆனால் அம்முடிவுகளால் சிலருக்கு பாதகமான நிகழ்வுகள் நடந்திருக்கலாம்.  பெரும்பாண்மை என்ற ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நாட்டில் சிறுபாண்மையினருக்கு எவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கின்றதோ அதுபோலவே இதுவும் இருக்கின்றன. நான் பலருக்கு நண்மை என சில முடிவுகளை எடுக்க, அது சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது.  ஆனால் போகப்போக அது பெரும்பாண்மை என்ற பெயரில் ஒரு சிறுபாண்மையினரின் நன்மைக்கான முடிவுகளாகத் தெரிந்தன..! பலருக்கு பாதிப்பை ஏற்படுத்துகின

ஆளுனர் சந்திப்பு..!

படம்
  பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித்தவிக்க, அதற்குள் இருக்கும் அரச நிறுவனங்களும்  வேலைச்சுமைகளுக்குள் மாட்ட, மக்கள் வேறுவழியின்றி புலம்பெயர்ந்து ஓட காரணம் என்று நாம் கைகாட்டுவது ஊழல் வாதிகளை..! ஒவ்வொருவரும் தாம் தமது கடமைகளை நிறைவாகச் செய்தோமா என்று பார்த்தால் எத்தனை தடவை அரசையும், அரச அதிகாரிகளையும் ஏமாற்றியிருப்போம். ஒரு சாதாரண போக்குவரத்து வீதியில் கூட எம்மால் விதிகளைப் பின்பற்றி நடக்க முடியவில்லை. ஆனால் அனைவரையும் குறை கூறுகின்றோம். நாடு இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் நாமே..! பிறநாடுகளில் போய் 8 மணிநேரம் தாண்டி வேலைசெய்து, பிள்ளைகளையும், மனைவியையும் பார்க்காமலே காலத்தை ஓட்டி, எப்போது விடுமுறை வருகின்றதோ அப்போது, இலங்கை வந்து, இங்குள்ளவர்களுக்கும் ஆசைகளைத்தூண்டி, எல்லோருமாக அவதிப்படுகின்றார்கள்..! நிறைவும், வெற்றியும் பிறரிடம் இல்லை. எம்மிடமே உண்டு. ஆனால் காலம் கண்ணை மறைப்பதால் புரியாமல் செல்கின்றோம். தற்போது, தொழில்வாய்ப்புகள் குறைந்ததால் பலர் வாழ முடியாமல் தவிக்கின்றார்கள். சிலர், பலரின் வேலைகளைக்கூடப்பறித்து, அரசிற்கு வரிகட்டி, மற்றவர்களின் வயிற்றெரிச்சலுக்கு உட்படுகின

பொருளாதாரக் கொடுமைகள்..!

படம்
  நல்லவர்களையும் கெட்டவர்களையும் இனம் காட்டுவது எது..? காலமா காசா..? உலகமே மாயத்திற்குள் மூழ்கி, மாண்டுகொண்டிருக்கின்றது. உண்மைகளுக்கும் நியாயங்களுக்கும் மதிப்புக்கள் தெரிவதில்லை. மாறாக ஆடம்பரங்களுக்கும், பணத்திற்கும் மரியாதை செய்யும் மனிதர்கள், அன்பையும், உறவுகளையும் இழந்து பணத்துடன் அநாதைகளாகவே வாழவேண்டிய நிலைக்கு, ஆணவம் தள்ளிக்கொண்டே   செல்வது   வேதனையானது. நானும் வாழவேண்டும்.. கூட உள்ளவனும் வாழ வேண்டும்.. அனைவரும் வாழ வேண்டும்.. என்ற கொள்கையோடு நாம் வாழ்ந்தால் தான் இயற்கையும் வாழ்த்தும். எம்மை வாழ வைக்கும். ஆனால் தற்போது இயற்கை செய்வதைப் பார்த்தால் நாம் சரியான பாதையில் செல்வதில்லை என்பதை பல விதங்களில் புரிய வைக்கின்றது. கடந்த சில வருடங்கள் கொரோனாவால் முடங்கினோம். பின்னர் பொளுளாதாரச் சிக்கலால் முடங்கினோம். தற்போது கடும் வெப்பத்தாலும் அவிகின்றோம்..! வெப்பம் தலைக்கு ஏறி, மூளை குழம்பி எது சரி..? எது பிழை..? என்பதை புரியமுடியாமல் திணறுகின்றோம்.   சுயநலமாகச் சிந்திக்காமல் பொதுநலமாகச் சிந்திக்கும் போது சில உண்மைகள் புலப்படும். நியாயங்கள் புரியும். அவற்றை பின்பற்றுவதோடு, ஏற்கனவே குழம

வன்முறைக்கு மாறும் மாணவர்கள்..!

படம்
  கால மாற்றங்களும், வசதி வாய்ப்புக்களும் மனிதர்களை நாகரீகப்படுத்தினாலும், செயற்பாடுகளும், அதற்கான விவாதங்களும் சுற்றியிருப்பவர்களை வாட்டுகின்றது. ஒரு கல்வி நிறுவனத்தில் ஊழியர்கள் முன்மாதிரியாக நடந்தால் தான் மாணவர்களும் அவ்வாறு நடப்பார்கள். மாறாக நடப்பார்களாயின், மாணவர்களும் அவ்வாறே நடப்பார்கள். நேற்றும், இன்றும் இரு மாணவர்கள் பரீட்சை நோக்குணர்களுடன்   முரண்பட்டுள்ளார்கள். தவறுகளைச் செய்துவிட்டு, அதனை மறைக்க முனைந்துள்ளார்கள்.   ஒவ்வொரு நிலை மேல் அதிகாரிகளுடனும் கெஞ்சுவதும், மிஞ்சுவதுமாக இருந்துள்ளார்கள்.   இவ்வாறான நிலை ஏன்வருகின்றது என சிந்திக்கும் போது, எமது முன்மாதிரியான கல்வியாளர்களே காட்டுமிராண்டிகள் போல் நடந்தால், அதனைப் பார்த்து வளரும் மாணவர்கள், அந்த முறை தான் சரி எனவாழ்வார்கள்..! வாழவும் முற்படுகின்றார்கள்..! கல்வியை விட ஒழுக்கம் முக்கியம். பிழை செய்வது கூடாது என்று ஒவ்வொருவரும் உணர்ந்தால் தான் நாடு முன்னேறும். யாரும் பார்க்கவில்லை..!, ஏமாற்றலாம்..! பார்த்தாலும் பரவாயில்லை..!, என்னை யார் கேட்க முடியும்..? மற்றவர்கள் இருந்தால் என்ன..? செத்தால் என்ன..? என்று வாழ்பவர்

ஜெய்லர்..!

படம்
  பல நாட்களாகத் திரையரங்குக்குப் போக மனமில்லாமல் இருந்தது..! ஆனால் அண்மையில் வெளிவந்த ரஜினியின் ஜெய்லர் வசூல் சாதனைகள் படைத்துவருவதாகப் பத்திரிகைகளில் அறிந்த பின்னர் படத்தைப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது.   அதே ஆர்வம் மனைவிக்கும் ஏற்பட்டுள்ளதை இரண்டாவது மகள் சொல்லப் புரிந்தது..! அவளுக்கும் அந்தப்படத்தைப் பார்க்க ஆவல் இருந்துள்ளது..! தாயின் பேரில் தானும் படம் பார்க்கத் திட்டம் போட்டிருந்தாள். தாய்க்கும் ஆர்வம் இருந்தது உண்மையே..!   இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், முன்பதிவு செய்ய முற்பட அது முடியாமல் போய்விட்டது. தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாகப் படம் செல்வதால்,   புக்(Book)பண்ண முடியவில்லை. இறுதியில் இன்று பார்க்கக்கூடிய வகையில் முற்பதிவு செய்ய முடிந்தது. அதேபோல், மாலை நானும், மனைவியும், இரண்டாவது மகளும் படம் பார்க்கச் சென்றோம். கார் விடவே இடமில்லை. நல்ல காலம் நாம் போக ஒரு கார் வெளியே வந்தது. அதனால் ஒரு இடம் கிடைத்தது. ஒருவாறு நேரத்திற்கு தியேட்டருக்குள் வந்துவிட்டோம். படம் தொடங்கும் வரை ஏதோ கொறித்துக்கொண்டே இருந்தோம். படம் ஆரம்பத்தில் ரசிக்கக்கூடியதாக இருந்தது. இடைவெளைக்குப் ப

வெளிநாட்டு உறவுகள்..!

படம்
  கடந்த சில வருடங்களாக இருந்த கொரோனா வைரஸ் நோய் பரவல் சூழலால் பலர் தமது நாடுகளைவிட்டு இடம்பெயர முடியாமல் இருந்தார்கள். இந்த வருடம் கொஞ்சம் மூச்சுவிடுவதற்கு உரிய வருடம் என்று நினைக்கின்றேன். அனைத்து துறைகளும் வேகம் பெறுகின்றன.  மூன்று வருடங்களில் விட்டதைப் பிடிக்க அனைவரும் ஓடுகின்றார்கள். சிலர் பறக்கின்றார்கள்..! இது தேவையானது தான். சுமூகமாகப் போகும் எனது பயணத்திலும் சில தடங்கல்கள் இந்தவருடம் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. பல நட்புகள் பிறநாடுகளில் இருந்து வந்து, என்னைப்பார்க்க முடியாமலும் சென்றுள்ளார்கள். சிலர் எப்படியாவது பார்த்துவிடுகின்றார்கள். இன்னும் சிலர் இங்கு வருவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தும் உள்ளனர். அதேபோல் பல நெருங்கிய உறவுகளும் வருகின்றார்கள். இம்முறை அவர்களுடன் கொஞ்ச நேரமாவது செலவழிக்க விரும்புகின்றேன். அலுவலகப் பணிகள் மற்றும் வீட்டுச்சூழல் என்பன சேர்ந்து, அவ்வாறானவற்றைச் செய்ய அனுமதிக்க மறுக்கின்றது. இருந்தாலும், வரும்காலத்தையும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு உறவுகளை, அவர்களுக்குக் காட்டுவதும், அவர்களுடன் பழகுவதற்கான சந்தர்ப்பங

படப்பிடிப்பு..!

படம்
  பல நாட்களாகத் திட்டம் போட்டும் நடக்காத ஒருவிடயம் இன்று திடீரென நடந்து முடிந்துவிட்டது..! ஆம், மகளின் சாமத்தியவீடு நடந்து ஏறக்குறைய   2 மாதங்கள் ஆகின்றன. வீடியோ மிக்சிங் கொஞ்சம் செய்ய கேட்டார்கள். அவர்கள் கேட்ட நாட்கள் எல்லாம் ஏதோ தடைகள் வந்து, அதனைச் செய்ய முடியாமல் போவதே சகஜமாகிவிட்டது. நேற்று, மாலை கமேராமேனிடம்   இது   தொடர்பாகக் கேட்டேன். அவரும் சம்மதித்தார். நேற்று மாலையே பெரிய ஒரு செலவைச் செய்து, மகள்களுக்குத் தேவையான துணிமணிகளை வாங்கி, இன்று காலை தொடங்கி மாலை வர முன்னரே காங்கேசன்துறைமுக விடுதியில் மிகுதி இருந்த சூட்டிங்கை முடித்துவிட்டோம். பிள்ளைகள் படம் எடுப்பதில் தீவிரமாக இருக்க, நான் அந்தப்பொழுதுகளை ரசிக்கவும் பயன்படுத்தவும் தொடங்கினேன். கடுமையான வெயிலும், புளுக்கமும் இருப்பதால், கடலில் இறங்கி நல்ல குளியலைப் போட்டேன். போதாததற்கு, பல வகையான உணவுகளையும் உண்டு, வயிற்றைக் குளிர்ச்சிப்படுத்தினேன். கொரோனாவிற்குப் பிறகு, பல நாட்களாக விடுதியில் தங்கவேண்டிய நிலை ஏற்படவில்லை. இன்று, படம் எடுப்பதற்காகவும், உடைகள் மாற்றுவதற்காகவும் விடுதியறை ஒன்றை வாடகைக்கு எடுக்கவேண்டிய தேவை ஏற

வாத்தி..!

படம்
  ஆசையே ஆக்கம்..! ஆசையே அழிவு..! சரியான கல்வியே அழிவையும் ஆக்கத்தை   நோக்கி மாற்றமுடியும்..! கல்வியின் மேன்மையைப் புரிய வைக்க, சில மசாலாக்கள் தடவினாலும், படத்தின் மையக்கருத்து நழுவவில்லை என்பதே   படத்தின் வெற்றிக்குக்காரணம்.   வழமையாக, ரவுடிகள் போல் வந்ததால் தான் மரியாதை எனநினைத்து, அதிக படங்களில் நடித்த தனுஷிற்கு தான் இந்தப்படமும் வாய்த்துள்ளது..! முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்..! ரவுடீசத்தை விதைத்த தனுஷ் மூலமே கல்வியின் முக்கியத்துவம்   பற்றிச்சொல்லப்பட்டது பல பிள்ளைகள், குறிப்பாக அதிக தனுஷ் ரசிகர்கள் திருந்த வாய்ப்பு உண்டு. படம், தொடக்கம் முதல் முடிவு வரை தொய்வில்லாமல் சிறப்பாகச் செல்கின்றது. கல்வியை வியாபாரமாக மாற்றுவது என்பது வருங்காலத்தை அழிப்பதற்கும், இயற்கையோடு விளையாடுவதற்கும் சமம். இந்த மாற்றத்தின் விளைவுகளையே தற்போது உலகம் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. போகப் போகத்தான் வியாபாரமாக்கப்பட்ட கல்வியின் பாதிப்புக்கள் உலகெங்கும் தெரியும்.   மக்களாலும் நன்றாக உணரமுடியும்..! என்னைப் பொறுத்தவரை கொரோனாக் கூட வியாபாரக்கல்வியின் விளைவா என்ற சந்தேகம் பல முறை எழுகின்றது.

ஜயற்ற தோட்டம்..!

படம்
    இது எங்களது குடும்பக்காணி..! கந்தரோடையில் உள்ள புதைபொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு கிட்டவாகவும், பினாக்காய் ஆறுக்கு சில காணிகள் முன்னாலும் இருக்கின்ற,   தென்னை, பனை   போன்ற பல வகையான மரங்கள் நிறைந்த பசுமையான சோலைக்காடு..! சிறுவயதில் இருந்தே அந்தக்காணிக்கு சென்று வருவது எனது கடமைகளில் ஒன்று. இன்னும் சொன்னால், ஒரு காலத்தில் எம்மை வாழ வைத்ததே அந்தக்காணி தான். அந்தக்காணி, எனது அம்மாவிற்கும், மாமாவிற்கும் பங்காக, ஜயா (தாத்தா) மற்றும் அம்மம்மாவால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தக்காணியை வாங்க, தாத்தா பாட்டிக்கு உதவியவர் எனது அம்மாவின் மூத்த சகோதரர் தான். அவர் அந்தக்காலத்திலே தபால் அதிபராக இருக்கும் போது அரசு கொடுத்த மாதச்சம்பளம் ஏறக்குறைய 5 பவுண் நகை வாங்கக்கூடியதாக இருந்ததாம். அந்த அளவிற்கு அரச தொழிலில் சம்பளம் கிடைத்துள்ளது. மதிப்பும் இருந்துள்ளது. அந்தக் காலத்தில், மகன் உழைத்து, தாத்தா பாட்டி   சேர்த்த பணத்திலே இந்தக்காணியை வாங்க முடிந்துள்ளது. இன்றைய காலத்தில் ஜனாதிபதியின் சம்பளத்திலேயே அந்த அளவிற்கு நகை வாங்க முடியுமோ தெரியாது. அந்த அளவிற்கு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தக்காணி