இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாவது ஆண்டுத்திவசம்..!

படம்
    மனைவியின் தந்தையார் இறந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இன்று அவரது 2வது நினைவு தினம்.    நெருங்கிய உறவுகளோடு, திவசத்தை முடித்துவிட்டோம். போன கிழமை முழுக்க வருத்தம் பீடித்திருக்க,   லீவு எடுக்க முடியாமல் தவித்து,    இந்தக்கிழமை திங்களே திவசத்திற்காக லீவு எடுக்கவேண்டிய நிலை வந்துவிட்டது. 3வருட வேலைப்பளு ஒன்றாக அழுத்துவதால், நேரம் போவதும் தெரிவதில்லை. எப்போதும் ஒரு   பரபரப்பு மனதிற்குள் இருந்துகொண்டே இருக்கின்றது..! மேலும் இன்று எமது நிறுவனத்தில் இரண்டாம் செமஸ்டருக்கான பரீட்சைகள் தொடங்குகின்றன. அது தொடர்பான முரண்பாடுகள் வீடுவரை வந்து, நேரத்தை விழுங்குவதுடன், மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது புரிகின்றது. பணமும், பணம் சார் நடவடிக்கைகளாலும் நன்மையைக் காட்டிலும் துன்பத்தை அறுவடை செய்வதற்கான வாய்ப்பே இந்தக்காலத்தில் அதிகம் கிடைக்கின்றது. சிலர் தெரிந்தும் தவறுகள் விடலாம். தெரியாமலும் தவறுகள் விடலாம். தவறுகள் செய்தவருக்கு, தவறுகள் செய்வதே தக்க பாடம் எனச்சிலர் நினைக்கின்றார்கள். இன்னும் சிலர் அந்தத்தவறுகளை இனிமேல் செய்யாத மாதிரி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்கின்

பத்துதல..!

படம்
    சிலம்பரசன் நடித்த இந்தப்படத்தில்   ரத்தம் பல இடங்களில் தெறிக்கின்றது..! தலை துண்டாகி விழுகின்றது..! கைகள் வெட்டப்படுகின்றன..! தனியாளாக எல்லாரையும், சுட்டும், கத்தியால் வெட்டியும், குத்தியும் கொல்லும்   கதாநாயகி இல்லாத வயதான கதாநாயகனாக சிலம்பரசன் நன்றாக நடித்துள்ளார். வன்முறைகள் அதிகம் என்பதால் என்னால் பல காட்சிகளை ரசிக்க முடியவில்லை. இங்கு நல்லது செய்வதற்கு ஒரு கெட்ட முகம் தேவைப்படுகின்றது என்று   சொல்லி, நல்லதுக்காகக் கெட்டதுகள் பல செய்கின்றார். ஹீரோ இடைவேளைக்கு கிட்டவாக வந்து இறுதிக்காட்சி வரை தொடருகின்றார். இதற்கு முதலே படத்தின் இன்னொரு ஹீரோவான கௌதம் கார்த்திக் படம் தொடங்கியதில் இருந்து, இடைவேளைவரை அதிக காட்சிகளிலும், பின்னர் குறைவான காட்சிகளிலும் வந்து, நிறைவாக நடிக்கின்றார்.   இவருக்கு ஜோடியாகப் பவானி சங்கர் வருகின்றார். சில காட்சிகள் என்றாலும் மனதில் நிற்கின்றார். அதேபோல் சிலம்பரசனின் சகோதரியாக நடித்தவரும் நவீன பாசமலர் சாவித்திரிபோல்   நடித்துள்ளார். அவரது மகளாக நடித்த சிறுமியும், இடையிடையே வந்துசென்ற, சண்டைகளால் நொந்தவர்களை கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்தினார். நடிகர் ஆர

37வது பட்டமளிப்பு விழா

படம்
  சிலருக்கு இது கிடைக்கும் என்றும் இது கிடைக்காது என்றும் முதலிலேயே எழுதப்பட்டதோ தெரியவில்லை. எனக்கு அப்படித் தோன்றுகின்றது. அருகில் இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானம் படிக்க வாய்ப்பு   வரமுதலே, எனது கனவு முயற்சியைத் தொலைத்து, இந்தியா சென்று, அகதி முகாமில் பல முயற்சிகள் செய்து இறுதியில் கணிதத்தில் பட்டம் கிடைத்தது.   அதுவும் தபால் மூலம் ஒருவரின் உதவியினால் பெற்றுக்கொண்டேன். இருந்தாலும் வரும்போது தற்காலிக பட்டச் சான்றிதழ்   (Provisional Certificate) ஒன்றை வைத்தே இங்கு வேலை தேடினேன்.   கல்வியலில் பட்டப்பின் டிப்ளோமாவைப் படிக்க கொழும்புக்கு அலைந்தேன்.   அதேபோல் கணினி விஞ்ஞானத்தில் பட்டப்பின்படிப்புப் படிக்கப்   பெரதேனியா சென்றேன். மேலும் சில தகவல் தொழில்நுட்பப் பாடங்கள் படிக்க கொழும்பு சென்றேன். கல்வி என்பது எனக்கு நீண்ட தூரப் பிரயாணங்களுடாகவும், கடல் கடந்து சென்றும் படிக்கவேண்டியும் இருந்ததால், அவற்றை வைத்து, வினைத்திறனாக வாழ வேண்டும் என்று உறுதிபூண்டேன். எனக்கு, அருகில் இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு சாதாரன சான்றிதழ் கற்கைநெறிகூடப் படிக்க இறைவன் வாய்ப்பை வழங்கவில

ஆடிப்பிறப்பு..!

படம்
    ஆனி போய் ஆடி பிறந்தவுடன் பல நிகழ்வுகளுடன் மகிழ்வுகளும் வந்து சென்றன..! இலங்கையில் வழமையாக ஆடிப்பிறப்பிற்கு கூழ் காய்ச்சுவது வழக்கம். யாழ் சமூகம்   அதனை நீண்டகாலமாகச் செய்து வருகின்றது. நான்   இந்தியாவில் இருந்த காலத்திலோ அல்லது யாழ்ப்பாண மாவட்டத்தை விட்டு வெளியே இருந்த காலத்திலோ   ஆடிக்கூழ் கிடைப்பது குறைவு..! குடிப்பதும் குறைவு..! ஆனால் யாழ்ப்பாணம் வந்தபின்னர் வருடத்தில் ஒரு முறையாவது ஆடிக்கூழ் குடிக்க முடிகின்றது. இந்தவருடம் அதிஷ்டம் அடித்ததைப்போல் நான்கு விதமான ஆடிக்கூழைக் குடிக்க முடிந்தது..! ஒன்று எமது நிறுவனத்தில் நலன்புரிச்சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூழ்..! அதுவும்,   முன்பு ஒருமுறையும் பின்பற்றாத வகையில், பணிப்பாளர் அறையிலுள்ள இறைவன்களுக்குப் படைத்து, தேவாரங்கள் படி எல்லோருக்கும் நன்மை கிடைக்கக்கூடிய காலங்களாக, இனிவருவன அமையவேண்டும் என்று பிரார்த்தித்த பின்னர், எல்லோருமாகச் சேர்ந்து கூழைக் குடித்தோம். சிலர் தத்தமது   சூழ்நிலைகளால் வரமுடியாமல் போயிருக்கலாம். ஆனால் அன்று ஆங்கிலம் அல்லாத போட்டிப்பரீட்சை விடைத்தாள்கள் திருத்த வேண்டிய சூழல் இருந்ததாலும், பாதீடு 2024 இனை

மௌனத்தின் மவுசு..

படம்
  நான் இளம் வயதில் அதிலும் குறிப்பாக க.பொ.த உயர்தரம் எடுக்கும் சந்தர்ப்பத்திலே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே செல்லவேண்டிய சூழல் வந்தது. அந்நேரம், தலைநகரில் எனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது தான் புரிந்தது நாம் பண்பாடுகளில் எவ்வளவு வேறுபட்டு இருக்கின்றோம் என்பது..!   நான் வழமையாக வீட்டில் போது மேற்சட்டை போடுவதில்லை. எங்காவது வெளியே செல்வது என்றால் மாத்திரம் சட்டை போட்டுச் செல்வேன். ஆனால் அங்கே வீட்டில் இருக்கும் போதே உறவினர்கள் மேல் சட்டை போட்டு இருப்பார்கள். அங்கும் நான் போடுவதில்லை. அது ஒரு குறையாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு சமயம் எனது மாமா, இங்கு இப்படி இருப்பது தான் நல்லது. எல்லோருக்கும் பிடிக்கும் என்றார். அத்தோடு,   எனக்குத் தலைநகர் பிடிக்காமல் போய்விட்டது. ஊருக்காகவும், உலகத்திற்காகவும் நடித்து வாழ்கின்றார்கள் என்று புரிந்தது. இருந்தாலும் சூழலை ஒருவாறு சமாளித்து, எனது போக்கிலே நான் வளர்ந்தேன்.   எனது பாதையும் பொதுவான எல்லோரும் பயணிக்கும் பாதையல்ல..! அது பல மேடுபள்ளங்களைக் கொண்டு இருந்தது. இருந்தாலும் விழுவதும், எழுவதுமாகவே பயணம் இருந்ததால் பயம் என்பது இடையில் கா

மைடியர் பூதம்

படம்
    நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் போன்ற பல துறைகளில் மின்னிய பிரபுதேவா ஒரு பூதமாக நடித்து, சிறுவர்களை கவர எடுக்கப்பட்ட இந்தப்படத்தைப் பெரியவர்களும் கூடப்பார்க்கலாம். பிள்ளையில்லாமல் வாடிய   பூதராஜாவுக்கு நீண்டகாலத்திற்குப் பிறகு தவம் கிடந்து, ஒரு ஆண்பிள்ளை கிடைக்கின்றது. அவனோடு ராஜா மகிழ்ச்சியாக இருக்க, அந்த மகிழ்ச்சி புற்றுக்குள் தவம்செய்துகொண்டிருந்த, முனிவருக்கு பாதிப்பை ஏற்படுத்த, அவர்போட்ட சாபத்தால், சிறு சிலையாகப் பூமியில் புதையுண்டார் அந்த பூத ராஜா..!   பல ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு, பூமியில் ஒரு திக்குவாய் மாணவன் யாருடனும் சரியாகப்பேசமுடியாமல் திணறிக் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகின்றான். தந்தை இல்லாமல் தனித்தாயாக அந்தச் சிறுவனை வளர்க்கின்றார். இந்த நிலையில் பூதத்தின்   சிலையைக்கண்டு, அதில் இருந்து பூதராஜாவை விடுவித்து, அதன் உதவியுடன் தனது பாடசாலையிலும், சக மாணவர்கள் இடத்திலும் மதிப்பைப் பெற்று மகிழ்வுடன் வாழும் நிலையில், முனிவரின் சாபத்தின் படி வெளிவந்த பூதம் குறிப்பிட்ட நாளில், அந்த சிலைக்குள் இருந்த மந்திரத்தை விடுவித்தவர் சொன்னால் தான், தனது மகனைச் சந்திக்க

மாணவர் மனம்..?

படம்
    எனது நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்கள் ஏறக்குறைய 40 பேர் வேலைசெய்கின்றார்கள். இதில் பெரும்பாண்மையோர் விரிவுரையாளர்கள் தான். அடுத்து, போதனாசிரியர்கள். அடுத்து பயிற்சிப் பயிலுனர்கள். அடுத்து அலுவலக உதவி ஊழியர்கள், அதே அளவில் தான் எழுதுவினைஞர்கள் வகையைச்   சார்ந்த ஊழியர்கள். இதைத்தவிர வருகைதரு விரிவுரையாளர்கள் என்ற வகையிலும் ஏறக்குறைய 50 பேர்கள் வருவார்கள்.   அலுவலகப் பணியாளர்கள் மிகக்குறைவாக இருப்பதால் வேலைப்பளு என்பது எப்போதும் குறையாமல் தொடர்ந்து இருக்கும். பல முறை தலைமையகத்திற்கு தெரிவித்தும், அரசியல் தலையீடுகளும், சுயநல எண்ணங்களும், பொருளாதாரச் சூழல்களும் எம்மைச் சோதிப்பதாகவே அமைகின்றன. புதுமுக மாணவ ஆட்சேர்ப்பு, தேர்வுப்பரீட்சை,   இறுதிப்பரீட்சை மற்றும் பட்டமளிப்பு விழாவிற்கான பதிவுகள் என அலுவலகம் போனால் நிமிர முடியாது. போதாததற்கு, பொருளாதாரச் சூழலால் எமது ஊழியர்கள் முதற்கொண்டு, பல நூற்றுக்கணக்கான மாணவர்கள்   வரை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்கள். அந்த மாணவர்களில் பலர் இன்னும் பட்டமளிப்பில் கலந்துகொள்ளவில்லை. பணத்தேவையால் Transcript மற்றும் Provisional Certificate   என்பவற்றுட

சொதப்பல்..!

படம்
                                             Molded Case Circuit Breaker (MCCB) அண்மையில் எமது தலைமையகத்திற்கு புதிதாக வந்த கட்டடத்துறைப் பேராசிரியர், நிறுவனத்தில் ஏற்படும் ஒவ்வொரு சிக்கல்களுக்கும் தீர்வைப் பெறக்கூடிய குழுக்களை எங்களுக்குள்ளே அமைத்தார்..! சில  ஆலோசனைத் தேவைகளுக்கு மட்டும் பல்கலைக்கழக  பேராசிரியர்களை அல்லது கலாநிதிகளை இணைத்துள்ளார். அந்தவகையில் பொறியியல் துறை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெறமுயற்சிக்கும் குழுவிற்கு தலைவராக என்னை நியமித்துவிட்டார். நான் சொன்னேன் ”பொறியியல் துறை தொடர்பான அறிவு என்னிடம் இல்லை என்பதையும்   பொறியல் துறையைச் சேர்ந்த நபரைப்போடச்சொல்லி..”   அவர் சொன்னார் 3 நிறுவனங்கள் மட்டும் பொறியியல் துறையை நடத்துகின்றீர்கள். அதில் ஒன்றை நீர் நிர்வாகிக்கின்றீர். அப்படியானால், உமக்கு அந்தத் தகுதி உண்டு.   நீர் தலைமைதாங்கி நடத்தலாம். அதனால்   பல நன்மைகளை உமது நிறுவனத்திற்கும் பெற்றுக்கொள்ள முடியும். உம்மால் இயன்றவரை முயன்று, ஒவ்வொரு விடயத்தையும் நடைமுறைப்படுத்துவதை   உறுதிப்படுத்த வேண்டும். அது உமது நிறுவனத்திற்கு மாத்திரமல்ல, நாட்டுக்கானதும், எமது மக்

அப்பாவால் பெருமை..!

படம்
  கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இதே நாளில் எனது மகளின் சாமத்தியவீடு நடந்தது. அதே நாளில் எனது நிறுவன விரிவுரையாளர் ஒருவரின் திருமணமும் நடந்தது. தவிர்க்க முடியாத சூழலில் இரு நிகழ்வுகளும் ஒரே நாளில் வந்ததால் எமது ஊழியர்கள் சங்கடப்பட்டார்கள். முதலில் விரிவுரையாளரின் திருமணத்திற்குச் சென்று அதனை முடித்துக்கொண்டு, எனது மகளின் சாமத்திய வீட்டுக்கு வந்தார்கள். இரண்டும் ஒன்றாக வந்ததால், அவர்களால் ஒரு இடத்தில் கூட நிம்மதியாக இருந்திருக்க முடியாது. எமது ஊழியர்களுக்கு நடந்த அதே சூழல் இன்று எனக்கு வந்தது..! இரு திருமணங்களுக்கும்   போகவேண்டிய சூழல்..! இரண்டும் முக்கியமானவர்கள். ஒருவர் எனது மாணவரும், நிறுவன ஊழியரும் ஆவார்..! இன்னொருவர், எனது மாணவியும், உறவுக்காரப் பெண்ணும் ஆவார். என்ன செய்வது..? ஒடித்திரிந்து இருவரையும் சமாளிக்கும் வகையில்   நடந்தேன். இருந்தாலும் ஒரு இடத்தில் சாப்பிட்டேன். இன்னோர் இடத்தில் பலகாரப்பொதியைப் பெற்றுக்கொண்டேன்..! இந்த சமயத்தில் ஒரு வயதான நபரை, உறவுக்கார பெண்ணின் திருமண மண்டபத்தில் சந்தித்தேன்..! என்னைப்பற்றிக் கேட்டார். நான் யார்..? என்பதை எனது உறவினர்   அவருக்குச்

The Great Indian Kitchen

படம்
    2021 இல் மலையாளத்தில் வெளிவந்த படத்தின் தமிழ் மீள் தயாரிப்பான இந்தப்படத்தை எதேட்சையாக zee தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான ச ரி க ம ப பாடல் நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் பார்த்தேன். முதலில் தொலைக்காட்சியை நிறுத்த முனைந்தேன். ஆனால் படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது, எமது வீட்டு சமயல் அறை போல் இருந்தது..! தொடர்ந்து பார்த்தேன், அப்போது தான் புரிந்தது நாம் பெண்களை எவ்வளவு கேவலமான நிலையில் வைத்துள்ளோம் என்பதை..! இறைவன் பெயரைச் சொல்லி, இறைவனே வெறுக்கும் அளவில் நீண்டகாலமாக பிழையான கோட்பாடுகளையும், கொள்கைகளையும் பின்பற்றி வந்ததுடன், அது தான் சரி என்பதை நிறுவுவதற்கு எவ்வளவு காலம் மூளைச்சலவை நடந்தது என்பதை எண்ணும் போது எமது முன்னோர்கள் மேல் அனுதாபமும், அதேவேளை இவ்வாறான பிழையான கோட்பாடுகளை விதைத்த நபர்கள் மேல் கடும்கோபம் வருவதையும் தடுக்க முடியவில்லை. கலாசாரங்களைப் பேணுவதாகக் கருதப்படும் ஒரு குடும்பத்தில் திருமணம் முடித்துச் செல்லும்   ஒரு பெண், அங்கு ஒரு சமையல்காரியாகவும், வேலைக்காரியாகவும், படுக்கையில் விபச்சாரியாகவும், சுகயீனம் ஏற்பட்ட அந்தக்காலங்களில் வேண்டத்தகாத, தீட்டுப்பிடித்த

பேப்பர் ராக்கெட்(Paper Rocket)

படம்
  எனது வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் இந்தப்படத்தில் இருக்கின்றன..! மிக ஆச்சரியமான விடயம் என்னவென்றால் நான் சில படங்களை தேர்வு செய்து பார்க்கும்போது, அதனூடாக ஏதோ ஒர் செய்தியை இயற்கை உணர்த்துவதாகக் தோன்றுகின்றது. இது உண்மையில் நடக்கின்றதா..? அல்லது அப்படியான எண்ணத்தை இயற்கை  உருவாக்குகின்றதா..? என்பது தெரியவில்லை.  இத்திரைப்படம் மனதைப் பல முறை கலங்க வைத்துவிட்டது. இயக்குனர் தமிழக முதல்வரின் மருமகள்,  பல் முகம் கொண்ட உதயநிதியின் மனைவியான கிருத்திக்கா என்பவர் தான். சாதாரண இயக்குனர்களை விட தான் ஒரு வித்தியாசமான பார்வை கொண்டவர் என்பதை இந்தப்படத்தினூடாகக் காட்டியுள்ளார். பல நபர்களின் உளவியல் அடிப்படையிலான பிரச்சனைகளும், அதற்கு டொக்டர் சொன்ன அறிவுரையும், Group Session என்பதன் ஊடாக ஏற்படும் அறிமுகங்களும், அவர்களுக்கான தீர்வுகளும் எனப்படம் பிரச்சனைகளும், தீர்வுகளும் என்ற வடிவில் செல்வதால் எல்லோருக்கும் ரசிக்க முடிகின்றதா என்பது ஒரு கேள்விக்குறி தான். ஆனால் படத்தில் இருக்கும் பல உளவியல் பாடங்கள் எனக்கு வேண்டியதாக உணர்கின்றேன். மரணம் என்பது   பற்றி அதிகம் அலசப்பட்டது இந்தப்படத்தில் தான் என்பத

மறதிக்கு மருந்து..!

படம்
  பொதுவாக மறதியை கடவுள் எனக்குத் தந்த கொடை என்று தான் நான் நினைப்பது வழக்கம்..! பல விடயங்களை மறக்க முடியாமல் தவித்த காலங்களும் உண்டு. அதிலிருந்து மீளக் கடவுள் கொடுத்த ஒரு மருந்தே மறதி..! பின்னர் விரிவுரையாளராக வந்தபிறகு, ஒரு விடயத்தை நினைவுபடுத்தி வைக்க நான் எடுத்துக்கொண்ட முயற்சி சொல்லிமாளாது. நடுச்சாமங்களில் இருந்து, ஒவ்வொரு விடயமாக மூளைக்கு ஏற்றுவது என்பது   கிட்டத்தட்ட ஒரு தரவுக்களஞ்சியத்தில் இருந்து இன்னோர் நினைவகத்திற்கு அல்லது தரவுக்களஞ்சியத்திற்கு தரவு அனுப்பும் செயலை ஒத்தது. ஏறக்குறைய இந்தவாழ்க்கை முறையில் 25 வருடங்கள் கடந்திருப்பேன். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஒரு விடயத்திற்காகக் காத்திருப்பேன். பழையதை மறந்துவிடுவேன். இப்படி நீண்டகாலமாக எனது மூளையைப் பயன்படுத்தியதால், ஒரு விடயத்தை மறப்பது என்பது மிக இலகுவான காரியமாகிவிட்டது..! இன்னோர் புதிய விடயத்தில் அதிக கவனம் எடுக்கும் போது முன்னையது மறந்துவிடுகின்றது..! இப்படிப்பழக்கப்பட்ட மூளையை வைத்துக்கொண்டு, சில வேலைகள் செய்வது கடினம் என்பதை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன். ஊதாரணத்திற்கு அப்படியான   அண்மையில் நடந்த சம்பவம், தன்

குன்றில் ஏற்பட்ட பதட்டம்..!

படம்
  இன்று இரவு ஒரு வெளிநாட்டு அழைப்பு வந்தது. அது வழமையாக வரும் அழைப்பு அல்ல. கதைக்கும்போது “என்னை தெரிகின்றதா..?“ என போனை எடுத்தவர் கேட்டார். சிறு குழப்பம் இருக்கும் நிலையில், போனில் நாட்டின் பெயர் விழுந்ததால் கண்டுபிடித்துவிட்டேன். அவரும் சந்தோசப்பட்டார். ஏன் கதைப்பதில்லை எனக்கேட்டார்..? எல்லாவற்றிற்கும் நேரமே சிக்கலாக இருக்கின்றது என்று சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொண்டாரோ இல்லையோ தெரியாது, உண்மையான காரணம் கடந்த சில வருடங்கள் எனக்கு யாருடனும் கதைக்கத் தோன்றவில்லை..! உலகே கஷ்டத்தில் இருக்கும்போது நமக்கு வரும் கஷ்டங்களை மற்றவர்களிடம் சொல்லி அவர்களையும் ஏன் கஷ்டப்படுத்த வேண்டும். அதனால் பல நெருங்கிய உறவுகளுடன் கூடக்கதைப்பதில்லை..! இந்த நிலையில், இணைப்பைத் துண்டித்து, என்னுடைய வாட்சப் எண்ணை எடுத்து, பின்னர் அதனூடாக இணைப்பில் வந்தார் அந்த வயதில் அண்ணன்   போன்ற நண்பர். பல விடயங்களை கதைத்து மகிழ்ந்தோம். அதில் முக்கியமானது, நான் இந்தியா சென்று மதுரையிலுள்ள ஒரு அகதிமுகாமில் அவருடனும், மேலும் பல இளைஞர்களுடனும் இருந்த காலத்தில்,   ஒரு   நாள் ஆழமான குன்றில் நீந்தும்போது நடுவில் களைத்துத் தடுமாற

தலைமையக முகாமைத்துவ குழு கூட்டம்

படம்
    இன்று, காலை வேலைக்குப்போகும் போதே   எமது நிறுவனம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும். அதற்கு நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த   தலைமையக முகாமைத்துவ குழு கூட்டம் இன்று இணையவழியில் நடப்பதாக இருந்தது. நானும் சரியாக காலை 9.00இற்கே அலுவலகத்தில் நிற்கக்கூடிய வகையில் வந்தேன்.   கூட்டம் மதியத்திற்குப் பின்னர் என்பதால், என்ன என்ன விடயங்கள் எல்லாம் சேகரிக்கவேண்டுமோ அவற்றை எல்லாம் எடுத்து வைத்திருக்க வேண்டும்   என்ற   எண்ணத்துடன் வந்து, அதற்கான வேலைகளையும் செய்துமுடித்தேன். போனவாரமும் இதற்கான சில தயார்படுத்தல் வேலைகளைக் குழுக்கள் உதவியுடன் செய்தேன். வேலைப்பளுவால், போன வெள்ளிக்கிழமையே பல வேலைகளை முடிக்க முடியாமல் வைத்துவிட்டு வந்தேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, இன்று அவற்றையும் முடிக்க நினைத்தேன். அதற்கு இடையில் எனது நிறுவன விரிவுரையாளர்   ஒருவரின் தாயார்   மறைந்ததால் அவர்வீட்டுக்கும் சென்றுவர தீர்மானித்தேன். தீர்மானித்தபடி மரணவீட்டிற்குச் சென்றுவர, மேலும் பல வேலைகள் காத்திருந்தன.,! அவற்றைமுடித்து மணியைப் பார்க்க மதியம் 12.30 ஐ தாண்டியிருந்தது. நான் வழமையாக வீட்டில் இ

விடுதலை -1

படம்
  தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களின் படங்கள் யதார்த்தங்களோடு ஒட்டிப்பயணிக்கும். அந்த வகையில் கதையின் நாயகனாக பரோட்டா சூரி நடித்திருக்கும் இந்தப்படத்தின் கதையும் அமைந்துள்ளது. ஒரு இனத்தின் போராட்டத்தை சமகாலத்தில் இருந்து அவதானித்த எமக்கு இதைவிடப் பெரிய அனுபவங்கள் இருக்கின்றன..! ஒரு மலைக்கிராமத்தில் இருக்கும் சிறு காவல் படையை வைத்து, இந்தக்கதை பின்னப்பட்டுள்ளது. எமது ஊரில் நடந்தது நான்கு அரச படைகளின் தாக்குதல்களில் இருந்தும், போராட்ட இயக்கங்களின் தாக்கங்களில் இருந்தும், தப்பித்தே ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்க்கையும் நகர்கின்றது..! படைகள் பெரிதாக இருந்தால் என்ன சிறிதாக இருந்தால் என்ன சில உணர்வுகள், பொதுவாகப் படையினர் மேல் கோபத்தைக் கொண்டுவருகின்றன.   மக்களுக்குள் பதுங்கி இருந்து, மக்கள் போராட்டத்தை மேற்கொண்டால், கேடயங்களான மக்களே பலிகடா ஆவர்கள் என்பதை இக்கதை கண்முன்னே கொண்டுவருகின்றது. போராட்டங்கள், சண்டைகள் என்பவற்றில் நீதி நியாயங்களை விட, அந்தந்தக் கணத்தீர்மானங்களே வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கின்றன.   அன்பால், அநியாயம் என்று தெரிந்தும், வழியின்றி, நன்மைக்காக நிற்கும் வாத்தியா

சுமை தாங்கி..!

படம்
  இன்றைய விடுமுறை நாளிலும் செயற்படுத்தப் பல திட்டங்கள் போட்டு வைத்திருந்தேன். ஆனால் அவை ஒன்றையும் செய்ய முடியவில்லை..! இருந்தாலும் இந்நாளை எப்படியாவது பயனுறுதிமிக்க வகையில் பயன்படுத்த நினைத்தேன். அதனைச் செயற்படுத்த அம்மா வீட்டிற்கும், எனது நண்பரின் குடும்பம் வெளிநாட்டில் இருந்து வந்ததால், அவர்களைப் பார்க்கவும் சென்றேன்.   கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு வருடங்களுக்குப் பின்னர் பார்க்கும் போது மாற்றங்கள் தெரிந்தன. குறிப்பாகப் பிள்ளைகள் வளர்ந்து இருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் தமிழ் பேசவும், புரியவும் கூடியதாக இருப்பது மிகவும் சந்தோசமாகவும், நாமும் அவர்களுடன் கதைக்கக்கூடியதாகவும் இருந்தது. அவர்கள் பிரெஞ்சு மொழியில் படிப்பதால், அவர்களால் நன்றாக அந்தமொழி பேசமுடியும். ஆனால் நமக்கு அது சுத்தமாகத் தெரியாது. அந்த சமயத்தில், அங்கிருந்த பல நடுத்தரக் குடும்பத் தலைவிகளுடன் கதைக்க முடிந்தது. ஒருவர் தானும் அரச வேலைசெய்து குடும்பத்தைக்கவனிக்கின்றார். இன்னொருவர், கணவருக்குத் துணையாகத் தனது சேவையைச் செய்வதுடன், பிள்ளைகளையும்   பார்த்து, அவரது தொழிலையும் கவனிக்கின்றார். இன்னொரு பெண், தன்னந்தனியாக, கணவர