இற்றைக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் விலங்காக இருந்த மனிதன் சத்தங்களூடாக தொடர்பாடலில் இறங்கிய காலத்தில், சத்தம், அதற்கான ஒரு குறிவடிவம், அவற்றிற்கு என்று ஒரு அர்த்தம் என்ற அடிப்படையில் ஒரு மொழியை உருவாக்கினான். இதனை அந்தக்கால மனிதர்கள் ஏற்றுக்கொண்டு பழகினார்கள். பேசினார்கள். தாம், மற்றைய விலங்குகளைவிட மேன்மையானவர் என்ற உண்மையைப் புரிந்து கொண்டார்கள். மொழி வந்ததால், அதன் அடிப்படையில் அறிவு வருகின்றது. சிலரால் அந்த மொழியைக் கற்பதிலோ, அல்லது அறிவைப் பெருக்குவதிலோ சிக்கல் ஏற்படுகின்றது. இதன் காரணமாக சிலர் அறியாமையுடன் இருக்க நேருகின்றது. அறிவுள்ள மக்கள் மற்றவர்களை கட்டுபடுத்த பல சூழ்ச்சிகளும் செய்கின்றார்கள். அதனூடாக ஆளும் வர்க்கங்களும், அடிமை வர்க்கங்களும், இடைப்பட்ட வர்க்கங்களும் உருவாகின்றன. இவ்வாறாக ஆளும் வர்க்கங்களின் செயற்பாடுகளில் வெறுப்புற்ற, அல்லது விரக்கியுற்ற மக்கள், வேறுவிதங்களில் ஒன்று சேர்கின்றார்கள். தமது கஷ்டங்களைப் பகிர்கின்றார்கள். இதனால் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக இவ்வாறானவர்கள் திரள்கின்றார்கள். அதனைத் தவிர்க்க வன்முறைகளை ஆளும் வர்க்கம் பிரயோகிக்க, தப்பி