இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நேர முகாமை..!

படம்
  இன்று காலை 7.00 மணிக்கு நண்பரின் வீட்டில் நிற்கக்கூடியதாக எனது கடமைகளைச் செய்து, அவர் வீட்டிற்கு வரும்போது சொன்னார் ”கொஞ்ச நேரம் மெனக்கடவேண்டியிருக்கும் பராவாயில்லை தானே என்று..! ” நானும் வேறுவழியின்றி, பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, எத்தனை மணிக்கு கீரிமலைக்குப் போகக் கூடியதாக இருக்கும் எனக்கேட்க   ”7.30 அல்லது 8.00இற்குள் போகலாம்..” என்றார். ஆனால் 8.00 மணி தாண்டும்போது தான் புரிந்தது தற்போது போகும் எண்ணமில்லை.   நண்பரின் தமையனும் எனது நண்பரே. அவரும் சொன்னார் ”சடங்குகள் செய்வதற்கு, சோறு, பொங்கல், வெண்பொங்கல், ரொட்டி போன்றன இன்னும் செய்யவில்லை. செய்துகொண்டு தான் போகலாம்..”   நான் நினைத்தேன் இன்று 10.00 மணிக்குக் கூடப் போகமுடியாது போலும் என்று..! மனைவி சரியாக காலை 11.00 மணிக்கு சாமத்திய வீட்டுக்குப் போகக்கூடிய வகையில்   வரச்சொன்னார். வேறுவழியில்லாமல் நண்பருக்கும், அவரது அண்ணருக்கும் போகும்போது மட்டும் உங்களுடன் கீரிமலைக்கு வருவேன். ஆனால் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்ததும் இடையில் வெளிக்கிட்டு போய்விடுவேன்.   கீரிமலையில் இருந்து வரும்போது, நீங்கள் அமர்த்திய குளிர்சாதன வசதியுள்ள குளு கு

அறுந்த தாலிக்கொடி..!

படம்
  நேற்று மாலை வேலையால் வந்து எனது வீட்டிலுள்ள பின்வளவு மரங்களுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் போது மனைவி சொன்னார் மகள் பஸ்ஸில் வரும்போது ஒரு விபத்து நடந்ததாகவும், மோட்டார் வண்டியையும், தலைக்கவசத்தையும் பார்க்கும்போது அப்பா மாதிரி இருந்தாகச் சொல்லி பயப்பட்டார், என்றும், அவர் பின்வளவில் மரங்களுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றார் நீ பயப்படாமல், வேறோர் பஸ்ஸைப் பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர் என்று தான் சொன்னேன், என எனக்கு சொன்னார். நானும் சிரித்துக்கொண்டு, மகளின் பாசத்தை நினைத்து வியந்தேன். இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் தண்ணீர் பாய்ச்சுவதிலேயே குறியாக இருந்தேன். சில மணிகள் கடந்ததும், தேநீர் அருந்திவிட்டு, சின்ன மகளுடன் சேர்ந்து கார சாரமாக பாணும் சாம்பாறும் சாப்பிட்டோம்.   அதனால் வயிறு சற்று ஊதியது போலிருந்தது. பின்னர் எனது வீட்டிற்கு வந்து, ஏதோ வீடியோ பார்க்கும் போது நெஞ்சிக்குள் ஏதோ இட்டுமுட்டாக இருந்தது. தண்ணீர் குடித்துவிட்டு, இங்குமங்கும் அலைந்தபோதும் அவ்வாறே இருந்தது.   “நெஞ்சுக்குள் நோகின்றது படுக்கப்போகின்றேன் என்று..“ சின்ன மகளிடம் மெல்லிய குரலில் சொல்லிவிட்டு மொட

பொறுப்புக்கூறல்

படம்
    கொரோனா காலத்தில் கனடாவிலுள்ள அம்மாவின் மூத்த தமையனான பெரியமாமா எனக்குப் போன் பண்ணி, எனக்கு கிட்டவாகவுள்ள தனது வீட்டைப் பார்க்கும் படியும், அங்கே  அவரது உறவினர் விற்ற வீட்டுடன் கூடிய காணியில் மதில் கட்டுகின்றார்கள் என்றும், அவர்கள் அதனைச் சரியாகச் செய்கின்றார்களா என்பது பற்றி அறியவும் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் பதிலாக, எனது கால் வருத்தத்தைப் பற்றியும், எனது வேலைச்சுமை பற்றியும் சொல்லி என்னால் முடியாது என்று முகத்தில் அடித்ததுபோல் சொல்லிவிட்டேன். இருந்தாலும் பின்னர் அவர் சொன்ன வேலையைச் செய்தேன். ஆனால் அவருக்கு அது தெரியாது. அவருக்கு குறித்த வேலையை என்னால்   செய்ய முடியும் என்று முதலில் சொல்ல மனம்வரவில்லை. அப்படிச் சொன்னால் நிச்சயம் அந்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும் அந்தச்சூழலில் அதனைச் செய்ய எனக்கு தயக்கமும் மனச்சோர்வும் இருந்தது உண்மை. அத்துடன் அவரது பிள்ளைகளும் என்னுடன்   இந்தவிடயங்கள் பற்றிக்கதைப்பதில்லை.   மேலும் அவரது மூத்த பிள்ளைக்கே அந்த வீட்டுடன் கூடிய காணியை வழங்கியிருந்தார். அவரது மனைவியின் பல உறவுகள் அந்த இடத்தைச் சூழ்ந்து இருக்கின்றார்கள். நான் தேவையில்லாமல்

முரணான ஆசைகள்

படம்
    உறவுகளுக்குள்  நடக்கும் அரசியலே நாட்டின் அரசியலுக்கும், உலகின் அரசியலுக்குமான அடித்தளமாகும். சொத்துக்கள் என்பது ஆண் பிள்ளைகளிற்கும்   அவர்களின் ஆண் வாரிசுகளுக்கும் என்று, மன்னர் காலங்களில் கருதப்பட்ட வழக்குகள் இன்றும் காணப்படுவது அதிசயம். அப்பாவிகளையும், முட்டாள்களையும் உறவுகளே ஏமாற்றுவது வேதனையானது. ஆனால் அதில் பலிகடாக்களாகும் முட்டாள்களை என்ன சொல்வது? ஆசையே உலக நிலைப்பிற்கும், இயக்கத்திற்கும், அழிவுக்கும் காரணம். பணம், பொருள், நிலம் இவை அனைத்தும் மனிதர்களிற்கு, மிகவும் தேவையான வேண்டப்பட்ட விடயங்களே தான். ஆனால் அவை வேடிக்கையாகவும்,   விநோதமாகவும் பறிக்கப்படுவதைப் பார்த்தால் உறவுகள் மேலே கவலை தான் வருகின்றது. சின்ன வயதில் இருந்தே, நிஜம் தெரியாமல், பெரிய எண்ணத்துடன் வாழ்ந்த ஒரு பெண்,   அவரின் இளமை முடிய, துணையின்றி   அவர் அவதிப்பட்டும்,   சமூகத்தையும், சூழலையும் பார்த்து மரத்துப் போயும் வாழும் நிலைக்கு மாறிய அவரை, நல்ல நிலைக்கு திரும்ப மாற்ற முடியாமல், அந்நிலையிலே தொடரவும், அதற்கு உதவுவது போன்று அவரது சொத்துக்களை மடக்குவதும், உறவுகள் செய்யும் காவாலித்தனம். தந்தை ஸ்தா

இரத்த தானமும் எனது லீவும்..!

படம்
    வவுனியா சென்று வர இரண்டு நாட்கள்   தேவைப்படலாம் எனநினைத்து, இரண்டு நாட்களுக்கு லீவு போட்டுவிட்டேன். அத்துடன் இன்றைய நாளில் எமது நிறுவனத்தில் இரத்த தானம் செய்ய மாணவர்கள் முயன்றதால், அதுவும் முள்ளிவாய்க்கால் சூழலை நினைவு கூரும் தருணம் என்பதால் தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்க்க நினைத்தேன். மூன்று இன மாணவர்களும் இங்கே படிக்கின்றார்கள். எமது நிறுவனமோ அரசின் உதவியாலே இயங்கும்   ஒரு நிறுவனமே தவிர ஒரு பல்கலைக்கழக தன்மைகளுடன் கூடியது அல்ல. அதனை மாணவர்களும், எமது ஊழியர்களும் உணர்ந்தார்களா என்பதே தெரியவில்லை. மாறாக பல்கலைக்கழகத்துடன் போட்டிபோடும் நிலையிலே இருக்க விரும்புகின்றார்கள்.   தகுதியை வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் மற்றவர்கள் செய்வதை எல்லாம் நாமும் செய்யவேண்டும் என்று நினைப்பது, எமக்கான தனித்துவ அடையாளங்களை தொலைத்துவிடும். ஜனாதிபதியின் நேரடி உத்தரவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகமும்,   கல்வி அமைச்சின் கீழ் வருகின்ற பல நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் எமது நிறுவனத்தில் ஒரு நிரந்தர அல்லது உறுதியான பணிப்பாளர் நாயகத்தைக் கூடப்பெறமுடியாத சூழலில் இருக்கும் எமது தலைமையகத்தின் வலுவிற்குள்,

முதியோர் பயணம்..!

படம்
  அண்மையில் நான் வவுனியாக போகவேண்டிய சூழல் வந்தது. என்னுடன் வந்தவர்கள் எனது அம்மாவும்,  அம்மாவின் தம்பியும். அதேபோல் வவுனியாவில் இருந்தவர்கள் அம்மாவின் தங்கையும், அம்மாவின் அண்ணனும்..! இவர்கள் அனைவருமே ஏறக்குறைய 70 வயதைத் தாண்டியவர்கள். இவர்களில் நான் தான் சிறுவன். ஏறக்குறைய 50 ஐ தாண்டியவன்.   2020 கொரோனா வந்ததன் பின்னர் நான் நீண்ட தூரம் குறிப்பாக யாழ் மாவட்டம் தாண்டி வெளியே, குறிப்பாக எனது காரில் போகவில்லை. எனக்கு வந்த வருத்தம் நீண்டதூரப் பயணம் எனக்கு சாத்தியப்படாது எனப் பயமுறுத்தியது. இருந்தாலும்   தொடர் தேகப்பயிற்சிகளாலும், இயற்கையின் கிருபையாலும் நீண்ட தூரம் பயணம் செய்யலாம் என்ற நம்பிக்கை, இந்தப்பயணத்தின் மூலம் தற்போது வந்துள்ளது. அதுவும் நான் தனியே காரை ஓட்டிச்செல்லமுடியும் என்ற துணிவும் வந்துள்ளது. நீண்ட காலமாக இருந்த ஒரு குழப்பம் என்னவென்றால், என்னால் நீண்ட தூரம் கரை ஓட்டமுடியாது. அதற்கு எனது இடக்கால் ஒத்துழைக்காது என்பது தான். அந்த எண்ணம், இந்தப்பயணத்தின்   மூலம் மறைந்துள்ளது. நான் தனியே இந்தக்காலுடன் காரை ஓட்ட முடியும். அதுவும் தனியே தொலை தூரத்திற்கு ஓட்ட முடியும். இ

நாய் சேகர் Return..!

படம்
    பல வருடங்களாக வைகைப்புயல் வடிவேலு படங்கள் வருவதில்லை. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது அரசியல் பேசி அமைதியானவர், மீண்டும் ஆட்சி மாறியபின்னர் படங்களில் தலைகாட்டத்தொடங்கியுள்ளார். அவர் நாயகனாக நடித்த படம் தான் நாய் சேகர்.  அண்மையில் சதீஸ் நடித்து இதேபெயரில் ஒரு படம் வந்தது. அந்தக்குழப்பம் வரக்கூடாது என்பதற்காக பெயரில் சிறு மாற்றம். அது நாய் சேகர் Return..! படத்தின் கதை ஒரு நாயால் அதிஷ்டம் பெற்ற ஒரு குடும்பம், நயவஞ்சகன் ஒருவனால் நாயை இழந்து, ஏழ்மைக்கு வருகின்றது. நாயைப் பெற்றவன் அதிஷ்டம் பெற்று, பணக்காரனாக வாழ, மீண்டும் அந்த அதிஷ்ட நாயைக் கைப்பற்றிப் பணக்காரன் ஆவதே கதை. உழைப்பை நம்பி வாழும் மக்களிடையே நாயை நம்பி வாழ சொல்லும் இந்தக்கதையில் வரும் அனைத்துக் காமெடிக்கதாபாத்திரங்களும் இடையிடையே சிரிப்பை வரவழைப்பது உண்மை. இருந்தாலும் சீரியஸ் இல்லாமல் படம் செல்வது கதையுடன் ஒட்ட மனம் வரவில்லை. விஜய் டிவி காமேடி நடிகர்கள், பிக்போஸ்   சிவானி, ஆனந்தராஜ்,பழைய நடிகை சச்சு போன்றவர்கள் நடித்துக்காட்சிகள் மாற உதவினார்கள்.   காட்சிகளின் ஒளிப்பதிவு பார்க்க நன்றாக இருந்தது. சுராஜ் என்பவர்,

எல்லைப் பிரச்சனை..!

படம்
    நாட்டிலும் சரி, வீட்டிலும் சரி இதே பிரச்சனை தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. எமது நாட்டில் மாத்திரமல்ல.  இந்த நோய் முழு உலகையும் ஆட்டிப்படைக்கின்றது. நாளை நாம் இருப்போமா என்பதைக் கூட சரியாகக் கூறமுடியாத நாம் வருங்காலத்தைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வது என்னைப்பொறுத்தவரை அநாவசியமானது. எனது குடும்பத்திலேயே இந்தப்பிரச்சனையால் உறவுகளுக்குள் தொடர் பகை நிலவுகின்றது. ஒருத்தரோடு ஒருத்தர் கதைப்பதில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்பதும், சட்டத்தின் துணையை நாடுவதும், அரச அலுவலகங்களில் நேரத்தைச் செலவழித்து, நிம்மதியின்றி அலைவதும் வாடிக்கையாகப் போய்விட்டது. சொந்தக்காணிகளை விட்டு எத்தனையோ பேர் வெளிநாடுகளில் குத்தகைக்கும், நீண்ட கால வாடகைக்கும் பணங்களைச் செலுத்தி, காலத்தைக்கடத்தி வருகின்றார்கள். பிறந்த நாட்டிலேயே நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ முடியவில்லை என்றால் எங்கே தான் அது கிடைக்கும். என்னைப் பொறுத்தவரை, அயலோடு அளவாகப் பழகவும் கதைக்கவும் வேண்டும். பகைவராமல்  பார்த்துக்கொள்ள வேண்டும். ”குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்பதை உணர்ந்து நடக்க வேண்டும். அதே போல ஒருவரையும் குறைகூறக்கூடாது. எம்முட

மொட்டை மாடி..!

படம்
  நான் வீடுகட்டும்போது ஒரு மொட்டைமாடியை விருப்பத்துடன் கட்டினேன். எனக்கு இரவில் பிடித்தமான ஒரு இடமாக அது இருக்கின்றது. மழைகாலம் தவிர்த்து, அநேகமாக அங்கு போவதும், இரவில் முதலாம் பாகம் நித்திரை அங்கே கொள்வதும் ஒரு வழமை. அதனால் எனக்கு எப்போதும் இயற்கையுடன் இணைந்த திருப்தி கிடைப்பதுண்டு. சிலருக்கு எனது இந்தக் கூற்று, முரணாக இருக்கலாம். ஆனால் அது எனக்கு 100 சதவீதம் தேவையானதாக இருக்கின்றது. சில சமயம் அந்த இடத்திலே நீண்ட உறக்கத்திற்குக் கூடப் போக மனம் வரும். அப்படியே இயற்கை என்னைக்கட்டிப்போடும். ஆனால் இதுவரை விடியும்வரை அங்கே உறங்கியது கிடையாது. இயற்கை மாறுவதும், சூடு குறைந்து குளிர்வருவதும், அமைதியாக இருந்த சூழல், ஆரவரமாக மாறுவதையும்,   வாகனங்களினதும், விலங்குகளினதும், பறவைகளினதும்   ஒலிகளைக் கேட்கக்கூடிய வகையில் சூழல் மாறுவதையும் அமைதியான பின்னிரவில் ரசிக்க முடியும். வெப்ப காலங்களில் பொதுவாக நான் நித்திரையை இரு பாகங்களாக மாற்றியே உறங்குவது வழமை. மேலும் மின்விறிசி பயன்படுத்துவதை அதிகபட்சம் தவிர்க்கவே விரும்புவேன். மின்சாரத்தினை சேமிப்பதைத் தாண்டிலும், உடல் உலர்வதை தடுப்பதையே மிக முக்கியம

முகாமைத்துவக் கூட்டம்..!

படம்
    இன்று காலையே Projector தெளிவில்லை என்றும் அதனை உடனே மாற்றித்தரும்படியும் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர் இறுக்கமான சூழ்நிலையில் கேட்டுக்கொண்டார். அதற்கு ஏற்பாடு செய்யும்போதே Vaiva இற்கான மாணவர்கள் கையெழுத்தைப் பெற வரிசைபோட்டார்கள். அதேநேரம் புகைப்படம் எடுக்க ஒரு துறைமாணவர்கள் தயாராக வேண்டிக்கொண்டார்கள். இவற்றை முடித்து வெளிவர, கல்விசார் ஊழியர்கள் யாவரும் ஒற்றுமையாகக் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை என்னிடம் தந்தார்கள். அதனை, வாசித்து பின்னர் தலைமையகத்திற்கு அனுப்பக் கேட்டுக்கொண்டார்கள்.  அவர்களுக்கும் எனக்கும் இடையில், அக்கடித விடயங்கள் தொடர்பாகச் சில கருத்தாடல்கள் நடந்தன. அவர்கள் நினைக்கின்றார்கள் ”தங்களுடைய சேவையை விட ஏனைய சேவைகளைப் பணிப்பாளர் பெரிதாகக் கருதுவதாக..” தங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காது காலம் தாழ்த்துவதாகவும், முன்னுரிமைப்படுத்துவதில் தவறுகள் இடம்பெறுவதாகவும், சில சேவைகளை தவிர்க்கலாம் என்பது போலவும், மாணவர்களைப் போராட்டங்கள் செய்யக்கூடிய வகையில் வழிநடத்தத் தவறுவது போலவும் கருதுகின்றார்கள். நான் வழமைபோல் எதையும் மறைக்காமல் உண்மையாகவே கதைத்தேன். நம்பினார்களோ இல்லையோ தெரியா

ஊழியர் கூட்டம்..!

படம்
    நான் யாழ்ப்பாணம் வந்த காலத்தில் இருந்து ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சிறிய பனிப்போர் இருந்துகொண்டே இருந்தது. அந்தக்காலத்தில் மூன்று பணிப்பாளர்களின் கீழ் வேலைசெய்யக்கூடிய வாய்ப்பையும் யாழ் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் தந்தது. நான் கடந்த காலங்களில் பட்ட பாடங்களால், யாருடனும் முரண்படாமல் எனது வேலையை என்னால் இயன்றவரை யாரையும் ஏமாற்றாமல் செய்யவே முனைந்திருக்கின்றேன். மிகவும் குறைவான நாட்களே லீவே எடுத்துள்ளேன். அருகிலுள்ள கோயில் திருவிழாக்களுக்குக் கூட போவதைத் தவிர்த்து எனது கடமையை செய்துள்ளேன். அதன் பரிசாகவே எனது தற்போதைய பதவி வந்துள்ளது என நம்புகின்றேன். யார் ஆண்டாலும், ஆளாவிட்டாலும் எனது கடமையை தவறாமல் செய்யவே நான் முனைவேன். எனது கணக்கை இயற்கைக்கே காட்டுகின்றேன். பிரபஞ்சம் என்னை அவதானிப்பதாக நம்புகின்றேன். அதனை ஏமாற்ற எனக்கு விருப்பம் கிடையாது. அதேபோல் பிரபஞ்சமும் என்னை ஏமாற்றாது என்ற நம்பிக்கையும் எனது வாழ்க்கைப்பாடத்தில் வந்துள்ளது. இவ்வாறே தொடர்வேன்..! இந்த மனநிலையில் நான் இருக்கும்போது, இன்று ஊழியர் கூட்டம் எமது நிறுவன நூல்நிலையத்தில் நடந்தது. நாட்டின் பொருளாதார

உயிர் சமநிலை

படம்
  “சான்றினேஸ்” என்ற ஒரு  அறிவான அழகன், ”சினோடியா” என்ற நாட்டில் வசிக்கின்றான். அவன் அங்குள்ள இளம் அழகிய பெண்பிள்ளைகளைக் கடத்தி, தனது காம இச்சைக்குப் பயன்படுத்தி, அதன் பின்னர் கொன்று அவர்களின் தடயங்களைக் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அழிக்கின்றான்.   இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம், சான்றினேஸ் அந்நாட்டிலுள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பேராசிரியராகவும், அத்துறையில் நிபுணராகவும் இருந்து சேவையாற்றி வருகின்றான். அவன், செல்வச்செழிப்போடு வாழக்கூடிய வசதிகள் அவனுக்குப் பரம்பரையாகவே வந்துள்ளன.   அத்துடன் அவன் திருமணம் செய்யாமலே வாழ்கின்றான்.   சினோடியாவில் யாரும் விந்துத்தானம் செய்யலாம். அந்நாட்டில் அதற்கான அனுமதியும் வழிமுறைகளும் இருக்கின்றன.   அத்துடன் அந்நாட்டில் ஆண்களோ பெண்களோ திருமணம் செய்யாமல் தனித்து வாழவும் சட்டம் அனுமதிக்கின்றது.   அதேபோல் துணையில்லாமல் குழந்தைகள் பெறவும் வசதிகளும் சட்டங்களும் போதிய அளவில் அந்நாட்டில் இருக்கின்றன..! அவ்வளவு நாகரீகம் மிக்க நாட்டில்   சான்றினேஸ் விந்துத்தானத்தில் நாட்டில் முதல் நிலை மனிதராகக் கௌரவிக்கப்பட்டான். இந்த நில

Car Service

படம்
  நான் 2021 இற்குப்பிறகு எனது காரினை Car Service செய்ய நினைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம்,  காரைப் பயன்படுத்துவதற்கான சூழல்  மிகக்குறைவு என்பதும், இன்னும் குறிப்பிட்ட தூரங்களைக்கூட கடக்கவில்லை என்ற எண்ணமும் தான். இருந்தாலும் ஒரு வாகனத்தின் சரியான பாவனைக்கு, அதன் உற்பத்தி நிறுவனம் பரிந்துரைத்த முறைகளின் படியே வாகனத்தைப் பராமரிக்க வேண்டும்.   2023இல் அது தொடர்பான எண்ணம் வந்ததும், எங்கே செய்யலாம் என தேடியபோது வழமையான இடத்தைவிட்டு வேறு ஒரு புதிய இடத்தில் செய்வோம் எனநினைத்து, அதற்கான ஆயத்தங்களைச் செய்தேன். முடிவாக இன்று அதனைச் செய்துமுடித்தேன். கிட்டத்தட்ட அரைநாளை எனது காருடனே   செலவழித்தேன். இதற்கு முதலுள்ள   Service களின்போது, நான் காரைவிட்டுவிட்டு வீட்டுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ சென்றுவிடுவேன். பின்னர், வேலை முடிந்ததும் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு வாகனத்தைக் கொண்டுவருவேன். இறுதியாகச் செய்த போது, பல தவறுகளை எனது வாகனத்தில் செய்து இருந்தார்கள்.   அது தவறுதலாகவும் இருந்திருக்கலாம், அல்லது வேண்டும் என்றும் செய்திருக்கலாம். மீண்டும் ஏன் அப்படியான சிக்கலுக்குள் மாட்டுவான் எனநின

உணவுத் திருவிழா

படம்
  நாடு பொருளாதார இறுக்கச் சூழலில் இருக்கும்போது தான் மக்களுக்கு உணவின் முக்கியத்துவம் புரிகின்றது..! காற்று, நீர், உணவு என்பது உயிர்களின் அடிப்படைத்தேவை. இயற்கையே இவற்றை இலவசமாக வழங்கியது. ஆனால் ஆசைகளாலும், ஆணவங்களாலும் அவை எல்லோருக்கும் இலவசமாக கிடைக்காமல் போய், இப்போது காசு கொடுத்தே வாங்கவேண்டியுள்ளது. மனிதர்களுக்கு மாத்திரமே இந்த துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமே அறிவு என்னும் அன்பை அழிக்கும் பேராயுதமே. இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஆதிகாலத்தில் இருந்தே வருகின்றது. இதனடிப்படையில்   தான் பொருளாதாரமும், வணிகமும் வளர்ச்சி பெற்றன. அந்த வளர்ச்சியின் அடிப்படையிலே ஏற்றத்தாழ்வுகளும் தோன்றின. உலகமும் பிளவு பட்டது. உலகமே பெரும் சிக்கலாகவும், மனித வர்த்தக மையமாகவும் மாறியது. அம்மாற்றம் இன்று வரை மனிதன் என்ற உயிரை மட்டும் அதிகமாக ஆட்டிப்படைக்கின்றது. இந்தச் சூழலில் எமது நிறுவன சில கற்கைநெறி மாணவர்கள் உணவுத்திருவிழா செய்ய அனுமதி கேட்டார்கள். நானும் அனுமதியைக் கொடுத்தேன். இரு நாட்களும் மிகச்சிறப்பாகச் செய்தார்கள். முதன் நாள் நான்   பங்குபற்றி, உணவுத்திருவிழாவை ஆரம்

பணிப்பாளர் நாயகம் விலகல்..!

படம்
  என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, நான் பணிப்பாளராக வந்த காலத்தில் இருந்து எமது தலைமையகத்திற்கு ஒரு நிலையான, மனவுறுதியுள்ள, எந்தப் பிரச்சனைகளையும் சமாளித்து, நிறுவனத்தை வழிநடத்தக்கூடிய ஒரு தலைமை வந்து அமையவில்லை என்பது ஒரு தொடரும் பெரும் கவலையாக மாறியுள்ளது..! உலகே கொரோனா, காலநிலை மாற்றம், உலகப் போர் பதட்டம், பொருளாதார வீழ்ச்சி என்று திண்டாட, இவ்வாறான நிகழ்வுகளும் எமது நிறுவனத்திற்குள் வர, முடிவுகள் எடுப்பதற்கே தடுமாற வேண்டியுள்ளது. என்னைப்பொறுத்தவரை, ஒரு பதவிக்குச் சென்றுவிட்டால், இயற்கையால் எமக்குத்தரப்பட்ட வசதி வாய்ப்புக்களையும், அறிவையும் பயன்படுத்திப் போராடி பதவிக்கு நியாயமாக இருந்து, நிறுவனத்தை சுமூகமாக வழிநடத்திச் செல்வதையே நான் விரும்புவேன். அதற்காகவே எனது பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவேன். அது முடியவில்லை என்றால் ஒரு குறித்த காலத்திற்குப் பிறகு, என்னால் எதுவும் செய்யமுடியாது என்பதை ஒத்துக்கொண்டு, விலகிவிடுவேன். அல்லது மாற்றம் பெற்று, வேறு ஒரு நிறுவனத்திற்குச் சென்றுவிடுவேன். இவ்வாறே, எமது தலைமையகத்திற்கு வரும் பணிப்பாளர் நாயகத்தினையும் எதிர்பார்க்கின்றேன். அண்மையில் எமது

பொன்னியின் செல்வன் பகுதி 2

படம்
  ஏற்கனவே எனது   அம்மா மற்றும் மனைவி குடும்பத்தாருடன் இரு முறை பொன்னியின் செல்வன் பகுதி 1 இனைப்பார்த்தேன்.   இன்று பகுதி 2 இனை மனைவி குடும்பத்தாருடன் பார்த்தேன்.   அதற்காக சில நாட்கள் முன்பே bookmyshow இல் Tickets இனை முன்பதிவு செய்து, பெற்றுக்கொண்டேன்.   படம் அரங்கு நிறைந்த காட்சியுடன் நகர்ந்தது..! வழமையான மணிரத்தினத்தின் தாக்கங்கள் பல இடங்களில் தெரிந்தன.   பல காட்சிகள் கல்கியின் நாவலில் இருப்பதைவிட மாற்றப்பட்டு இருந்தன. படமே நாவலின்   தழுவல் என்றும்,   வரலாறு அல்ல எனவும் சொல்லப்பட்டதால், குழப்பமில்லாமல் படத்தைப் பார்க்க முடிந்தது. படம் தொடங்கி, முடியும் வரை போரடிக்காமல் இருந்தது.   எனது பிள்ளைகள், மனைவி, அவரின் சிறிய தாயார் என எல்லோரும் படம் சிறப்பாக இருந்ததாகக் கூறினார்கள்.   நாவலில் பல காட்சிகளும், கதாபாத்திரங்களும் மாற்றப்பட்டது   பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஆனால் நாவல் பற்றியும், கதாபாத்திரங்கள் பற்றியும் எனக்குத் தெரிந்ததால், கவலை இ ருந்தது. என்ன செய்வது, இதாவது படத்தில் வந்ததே என்று சந்தோசப்பட்டேன்.   இதனை 5 பாகங்களாகத் திரைப்படமாக எடுக்க யாராவது முன்வந்தால் நன்றாக இருக்கும்.

பல்லைக்காட்டுவதும், பல்லைக்கடிப்பதும்..!

படம்
  இரண்டு விதமான கொள்கைகளுடன் இப்பூமியிலுள்ள மக்கள் செயல்படுகின்றார்கள்.  அதில் ஒரு விதமான மக்கள் நல்லதையே செய்யவும், நல்ல எண்ணத்துடனே மற்றவர்களைப் பார்க்கவும் பழகவும்  விரும்புவது மட்டும் அல்லாமல் மற்றவர்களும் தம்மிடம் அவ்வாறு தான் நடப்பார்கள் என்ற எண்ணத்துடன், தமக்குப் பல்லைக்காட்டும் மக்களைக் கருதுகின்றார்கள். சுருக்கமாகச் சொன்னால் நல்லவர்களுக்கே மக்கள் மதிப்பையும், மரியாதையும் உண்மையாகக் கொடுப்பார்கள் என்பதை வெளிப்படுத்தவே முகமலர்ச்சியுடன் சிரிப்பை வழங்குவார்கள். அதனையே நான்  நல்லவர்களுக்கு மக்கள் பல்லைக்காட்டுவார்கள் என்றேன். இன்னோர் வகையினர், உண்மையாக, நேர்மையாக, நிம்மதியாக நடக்கவேண்டும் என்ற கொள்கையில் பயணிக்காமல், தாம் நினைத்தமாதிரியான வாழ்க்கையை வாழ எதனையும் செய்ய தயாராகவே இருக்கக்கூடிய மனநிலைக்குத் தம்மைத் தயார்படுத்தி, அதற்கேற்ப கெட்டவனாகவோ அல்லது ரவுடியாகவோ அல்லது சுயநலவாதியாகவோ அல்லது ஏமாற்றுப்பேர்வழியாகவோ அல்லது பணத்தாசை, பெண்ணாசை, பதவியாசை, மண்ணாசை போன்ற பல ஆசைகளால்  பீடிக்கப்பட்டவர்களாக இருந்து, தாமும்அவதிப்பட்டு, மற்றவர்களையும் அவதிப்படுத்தத் தயங்காதவர்களை, மக்கள் க

காரும் சுடலையும்..!

படம்
    இறைவன் இருக்கும் இடம் எங்கே என்று கேட்டால் இந்து சமயத்தில்உள்ளவர்கள், கோவிலில் அல்லது   எமக்குள் அல்லது எல்லா இடத்திலும் எனப் பல்வேறுமாதிரிச் சொல்வார்கள்.   அப்படிப்பார்க்கும் போது எனக்கு இறைவன் சுடலையில் இருப்பதாகத் தோன்றுகின்றது. அங்கே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவம் ஒன்று இருக்கின்றது. ஒரு உடல் எரியும்போது தான் மனித வாழ்க்கையே புரிகின்றது.   சைவக்கடவுளான சிவபெருமானை சுடலைக்கடவுளாகக் கொள்வார்கள். சுடலையிலே ஆடுவதாகக் கூறுவார்கள். சாம்பலை பூசிச் சுடலைப்பொடி பூசியன் என்பார்கள். அப்படிப்பட்ட சிவபெருமானே விரும்பக்கூடிய இடத்திற்கு அண்மைக்காலமாக அடிக்கடி போய்வரக்கூடிய வாய்ப்பு எனக்கு வருகின்றது.   எனக்கு மாத்திரமல்ல. எனது காருக்கும் அதேமாதிரி நடக்கின்றது. கடந்த மூன்று வருடத்தில் எமது சூழலிலுள்ள 3 முக்கிய சுடலைகளுக்கு எனது காரும், நானும் பல முறை போய்வரவும், அத்துடன் கீரிமலைக்குப் போகவும் சந்தர்ப்பங்கள் வந்தன. அது ஒரு ஆச்சரியமான விடயமாக எனக்குத் தோன்றுகின்றது. நான் கார் வாங்கும் போது மனைவியிடம் கேட்டேன் “நீரும் வந்து, உமக்குப்பிடித்த நிறத்தைத் தெரிவு செய்யும்படி” ஆனால் அன்ற

விபரீத ஆசை

படம்
  மெலோனியா என்ற நாட்டில் வாழ்ந்த சாரங்கியன் என்பவன்  சிறந்த உடலழகைக்கொண்டவன். அறிவிலும் சிறந்தவன் என்று கருதப்படுகின்றான். அந்நாட்டில்,   மக்கள் இயற்கையை வெல்வதற்காக பல ஆய்வுகளைச் செய்கின்றார்கள். வரும் காலம் சிறப்பாகவும், அழகாகவும், அறிவாகவும் இருக்க பல திட்டங்களைத் தீட்டுகின்றார்கள். அதில் முடிவாக வருங்காலச்சந்ததிகளின் தோற்றம் இவ்வாறாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்ப செயற்பட முனைகின்றார்கள். அந்த முயற்சியில், சாரங்கியனும் வருங்கால சந்ததி உருவாக்கத்தின் ஒரு கர்த்தாவாக மாறுகின்றான். அந்நாட்டில் புதிதாக வந்த ஒரு சட்டம் அதற்கு உதவுகின்றது.   அது விந்தணுத்தானம் செய்யலாம் என்பதும், யாரும் அதனைப் பயன்படுத்தலாம் என்பதுமே அது. நாட்டில் பலர் பயன்படுத்துகின்றார்கள். எல்லோரும் நினைத்த மாதிரி சில வருடங்களில் அந்நாட்டு இளம் சந்ததி அழகான அறிவான சந்ததியாக வந்து உலகுக்கே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கின்றார்கள்.     தொடர்ந்து வரும் காலத்தில் அந்நாட்டின் புகழ் பரவுகின்றது. உலகில் அழகானவர்கள் உள்ள நாடு என்ற பட்டியலில் முதலிடம் பெறுகின்றது.   அந்நாட்டின் மேல் பல அயல்ந