இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருகோணமலை பஸ் சேவை..!

படம்
  நான் இங்கு வந்து ஏறக்குறைய 6 மாதங்களுக்கு மேலாகின்றது. ஆரம்பத்தில் காரில் வந்தாலும், பின்னர் அரச பேருந்திலே   பயணிக்கின்றேன்.   போகும்போதும் வரும்போதும் எமது நிறுவனத்தை தாண்டித்தான்   செல்லவேண்டும். அதனால் பஸ்ஸில் பயணிப்பது இலகு என்றாலும், ஒவ்வொரு முறையும் திருகோணமலையில் இருந்து யாழ்வரும்போது சீட் கிடைப்பது கடினம்.   நின்று தான் வரவேண்டும். வவுனியா தாண்டுவதற்குள் எப்படியாவது சீட் கிடைத்துவிடும். யாழில் இருந்து வரும்போது புக்பண்ணி வருவதால் சீட் எப்படியும் கிடைக்கும்.   இருந்தாலும் இவ்வாறு யாழிற்கும், திருகோணமலைக்கும் செல்லும் பஸ்களின் தரம் மிகவும் குறைவாகவே இருக்கும். சீட்கவர்கள் கிழிந்து கேவலமாக இருக்கும். சீற் கம்பிகளும் சரியான முறையில் வெல்டிங் செய்யாதபடியால் உடைவது போலிருக்கும்..! நேற்று, யாழில் இருந்து வெளிக்கிடும்போதே கடும் சனம். மூச்சுவிட முடியவில்லை. போனகிழமை இரு நாட்கள் லீவு வந்ததால், மக்கள் தூர இடங்களுக்கு சென்றுவந்துள்ளார்கள். அதனால் வழமையை விட அதிக கூட்டம்..! இந்த நிலையில் புக்பண்ணி வந்தாலும் மக்களின் கஷ்டங்களைப் பார்த்தால் நாங்களும் தொடர்ந்து இருந்து வருவதில் சங்கடங்கள்

பச்சிலர்..! (Bachelor)

படம்
  சில வருடங்களாக, இந்தப்படத்தைப் பார்க்கவேண்டும் என்று நினைத்தாலும், இன்று தான் அதற்கான சூழலமைந்தது. திருமணம் முடிக்க முதல், ஆடும் ஆட்டங்களும் அதனால் வரும் ஆர்ப்பாட்டங்களும், அவமானங்களும் சேர்ந்து, அறிவாளியாக மாறும் மனிதர்களே உலகில் அதிகம்..! குடி, கும்மாளம் எனக் கூத்தடிக்கும் இளைஞர்களும், நாகரீக வாழ்க்கைக்குத் தயாரான நவீன பெண்களும் சேர்ந்து, குளிர்நாடுகளில் தோன்றும் கலாசாரங்களை, வெப்பநாடுகளிலும் கொண்டுவந்தால் பல குழப்பங்கள் வந்து தான் ஆகும்..! எமது நாடுகளின் வாழ்க்கை முறைகள் வேறு. பெண்களைத் தாயாகவும், குடும்பத்தலைவியாகவும், குடும்பங்களின் மையமாகவும், வாழ்க்கையின் ஆதாரமாகவும், சில இடங்களில் கடவுளாகவும் விளங்குவதை நீண்டகாலமாக உணர்ந்து வருகின்றோம்..! ஆங்காங்கே சிறு சிறு தப்புகள் செய்து, தமது வாழ்வை அழித்துக்கொள்ளும் பெண்களையும் பார்த்திருக்கின்றோம். காதலிப்பது போல் நடித்து,  பெண்ணை லாவகமாக ஏமாற்றி, தமது இச்சைகளை தீர்த்துவிட்டு, தவிக்கவிட்டுச் செல்லும், ஆண்களையும், அவர்கள் வாழ்க்கையும் பார்த்திருக்கின்றோம். காதல் என்று உணராமல், ஒரே இடத்தில் வாழும் சூழல் ஏற்படும் போது, ஏற்படும் கரிசணங்கள்

அயோத்தி..!

படம்
    இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ராமர் கோவிலுடன் தொடர்புடைய ஒரு இந்து ஆச்சார குடும்பத்தின் தலைவன், பெண்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை..! அதேபோல் தென்னிந்தியர்களையும் கேவலமான மனிதர்களாகவே பார்க்கின்றான்..! அவனின் குடும்பத்தில் மனைவி, பருவ வயது மகள் மற்றும் ஒரு சிறு மகன் இருக்கின்றார்கள். அவன் வீட்டிலும் மனைவி பிள்ளைகளிடம் அன்பாக இருப்பதில்லை.   “பான்பராக்”   போட்டுக்கொண்டு, தன்சார்பிலேயே அனைத்தையும் பார்க்கின்றான். மனைவி பொறுத்துப்போனாலும், மகளுக்கும் மகனுக்கும் அவனது இயல்புகள் பிடிக்கவில்லை. தள்ளியே இருக்கின்றார்கள். இந்த நிலையில், இராமேஸ்வரத்திலுள்ள ராமரைத் தரிசிக்க விரும்புகின்றான்.   மனைவி மற்றும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு ரெயிலில் பிராயாணம் செய்கின்றான். அயோத்தியில் இருந்து மதுரை வந்ததும், தவிர்க்க முடியாத சூழலில், டக்ஸி மூலம் ராமேஸ்வரம் போக குடும்பத்தினரை வற்புறுத்திக் கூட்டிச்செல்கின்றான். அந்நேரம் மகள் உடலுபாதையைக் கழிக்க சந்தர்ப்பம் கேட்ட, மறுத்து தனது கோபத்தை வெளிப்படுத்தி, அவளையும் அடக்கிவரத் தூண்டிக் கஷ்டப்படுத்துகின்றான்..!   டக்ஸியில் ஏறினாலும் அதன் சாரதி

ஸ்டார்..!

படம்
  நடிப்பு என்பதைத் தொழிலாக செய்யவிரும்பும் ஒருவரின் தொடர் முயற்சியே கதை..! இங்கு, வாழ்க்கையிலே நூற்றிற்கு தொன்னூறு வீதமானவர்கள் நடித்துத்தான் வாழ்கின்றார்கள்..! சினிமாவில் நடிக்க முயற்சிக்காவிட்டாலும், நிஜத்தில் திறமையான நடிகர்களாகவே பெரும்பாலானோர் இருக்கின்றார்கள்..! நிஜமாக, நடிக்காமல் உண்மையாக இருந்தால், இந்தப்பூமியில் வாழ்வது கஷ்டம் எனப்பலர் நினைக்கின்றார்கள். குறிப்பிட்ட ஒருசிலரே, நிஜத்தில் நடிக்காமல் வரும் துன்பங்களையும், துயரங்களையும் தாங்கிக்கொண்டு, இயற்கையினதும் இறைவனினதும் இறுதி முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். இந்தப்படத்தைப் பொறுத்தவரை தந்தை லால், நடிக்க ஆசைப்பட்டு அது முடியாமல் போக, பிள்ளையை சிறுவயதில் இருந்தே தூண்டிவர, அவனுக்கும் அது ஒரு பேராசையாக எழ, தானும் வாழமுடியாமல், வந்தவர்களையும் வாழவிடாமல் போக, ஒரு இடத்தில் “கட்” சொல்லி முடிகின்றது கதை..! படத்தில் இரண்டு காதல்கள் வருகின்றன. ஒன்று முறிந்ததற்கான காரணம் மேலோட்டமாக இருந்தது. ஆழம் போதாது..! இரண்டாவது காதல் கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் அதனையும் தொடர முடியாமல் கவின் வெளியேறுவது, கவினுக்கு ஏதோ நோய் என்

ரத்தினம்..!

படம்
    நடிகர் விஷாலின் படங்கள் என்றால் சண்டைகளுக்குப் பஞ்சம் இருக்காது. அதேபோல் இயக்குனர் ஹரியின் படங்களும் விறுவிறுப்புக்கு பாங்கம் இருக்காது. அவர்களின் வழமையான சூத்திரத்தின் அடிப்படையிலேயே இந்தப்படமும் அமைந்துள்ளது. இதன் காரணமாக, இவர்கள் இருவர்களின் படங்களிலும் எனக்கு ஆர்வம் குறைவு. இருந்தாலும் நீண்டகாலத்திற்குப் பிறகு ஏதாவது புதுமையாகச் செய்திருப்பார்களா என்று பார்த்தால், எல்லாப்படங்களின் சேர்மானமாகவே இந்தப்படமும் இருப்பது ரசிக்க முடியவில்லை. ஒரே ஒரு ஆறுதல்..! இந்தப்படத்தில் ஹீரோ ஹீரோயினை காதலிக்க முடியாத வகையில் கதையைக்கொண்டுபோயுள்ளார் இயக்குனர்..! ஆகவே காதல் பாட்டுக்கள் இல்லை. சோகப் பாட்டுக்களே அங்காங்கே இருந்தன. படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை ரத்தம், சதை, கை, கால், தலை, உயிர்கள் என அறுத்து வீசுகின்றார்கள். இறைச்சிக்கடையில் வேலைசெய்தவர்கள் கூட இப்படி அறுக்க மாட்டார்கள். படத்தின் தொடக்கத்திலேயே கொள்ளையடிப்பதற்காக ஒரு பஸ்ஸையே மலையில் இருந்து விழுத்துகின்றார்கள்..! பின்னர், விழுந்த பஸ்ஸில் ஒன்றிரண்டி பேர், தப்பி உயிர்பிழைக்க, அவர்களின் காதுகளையும், கைகளையும் அறுத்துக்க

ரோமியோ..!

படம்
  தனது மகளின் இறப்பின் பின் விஜய் அன்ரனி நடிப்பில் மீண்டும் கவனம் எடுத்து மாறுபட்ட கதைக்களமுள்ள படங்களில் நடித்துவருவது பாராட்டிற்கு உரியது. நம்பி பார்க்கலாம் என்ற வகையிலே அவரது படங்கள் இருக்கும்..! அந்த வகையில் இந்தப்படமும் இருக்கின்றது. ஆனால் சில குழப்பமான கட்சிகள் வருவதால், எல்லோருக்கும் பிடிக்குமா என எண்ணத்தோன்றுகின்றது. கதைப்படி சற்று வயது அதிகமான கதாநாயகன், தன்னைவிட 10 வயது குறைவான பெண்ணைக்கண்டதும் திருமணம் செய்ய விரும்புகின்றார். ஆனால் பெண்ணின் பூரண சம்மதம் அறியாமல், ஏதோ வேறோர் ஆசையில் அவளும் சம்மதிக்க, திருமணம் நடக்கின்றது. அதன் பின்னர் தான் புரிகின்றது, பெண்ணிற்கு தனது கனவுத்தொழிலான நடிப்பில் நட்சத்திரமாக   ஜொலிக்க வேண்டும் என்பது..! இதனால் கட்டிய கணவனை ஒரு பொருட்டாக மதிப்பது கிடையாது, மாறாக, அவரைவிட்டு விலகத் துடிக்கின்றார்..! அத்துடன் தனது இலட்சியத்தை அடைய முனைகின்றார். மனைவியின் இந்த நடவடிக்கையால் தடுமாறிய ஹீரோ, இன்னோர் வழியில் தன்னை யார் என்று சொல்லாமல் மறைத்து, ஒரு ரசிகனாகக் கைபேசியூடாக   அறிமுகமாகி, கட்டிய மனைவியுடன் உரையாடுகின்றான்..! காலப்போக்கில், அருகிலுள்ள கணவ

டார்லிங்..!

படம்
  இந்தப்படத்தை நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஏதோ தள்ளிப்போய்விட்டது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னர், 2015இல் வெளிவந்த திரில்லர் படம். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக அறிமுகமான படம். ஒரு பங்களாவில் தற்கொலை செய்யச் சென்ற குழு, கொள்கைமாறி, காதலில் விழ, அதற்குள் இன்னொரு காதல் ஜோடி, அந்த பங்களாவிற்குள் கொல்லப்பட்டு இறந்து, அதற்குப்பழிவாங்க, ஆவியான பெண் காதலி, தற்போதைய பெண் காதலியின் உடலுக்குள் புகுந்து செய்யும் சேட்டைகளும், அதனால் உண்டாகும் காமெடிகளும், கடைசியில், புதிய ஜோடியை வைத்து பழைய ஜோடியை அழித்த கயவர்களை கண்டறிந்து, அவர்களை பொலிசிடம் கொடுக்காமல் தாமே தண்டனை கொடுப்பதாகப் படம் முடிகின்றது. அந்த நேரத்தில் இது ஒரு பெரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமாரும் இசையமைப்பாளர் தாண்டி ஒரு ஹீரோவாக கொலிவூட்டில் வலம் வருகின்றார். இந்தப்படத்தில் நடித்த அனைவரும் தமது சிறப்பான நடிப்பால் மக்களைக் கவர்கின்றார்கள். படத்தில் வரும் இன்னொரு ஹீரோ கலையரசன், படத்தின் முதலிலும், கடைசியிலும்   வந்து படத்தை முடித்து வைக்கின்றார்.   நிக்கி க

மோட்டார் வண்டியின் பகீஸ்கரிப்பு..!

படம்
  கடந்த வாரம் நாங்கள் எதிர்பாராத விடயங்கள் பல நிகழந்தன..! அம்மாவின் வருத்தம்..! மகளின் பரீட்சை முடிவு..! பரீட்சைப் பணிப்பாளர் நேர்முகத்தேர்வு..! எனப்பல வேறுபட்ட உணர்வை நான் அடைந்திருந்தேன். எனக்கு அந்த உணர்வுகளைக் கடந்து போகவே விருப்பம்.   அதை முகம்கொடுத்துக்கடக்க முயன்றேன். அந்த   முயற்சி இன்னும் தொடர்கின்றது..! இந்த சமயத்தில் மகளுடன், எனது தாயார் வீட்டிற்கு செல்ல வெளிக்கிட மோட்டார் வண்டி “ஸ்ராட்” செய்ய மறுத்தது. பல முயன்றும், களைத்தது தான் மிச்சம்..! மகளும் கூட முயன்றாள்..! பின்னர் அம்மா வீட்டிற்கு மகளும், நானும் காரில் போய் அம்மா சொன்ன வேலைகளை முடித்து, பரீட்சை முடிவுகளுக்குப் பிறகு மகளையும் கூட்டிச்சென்று ஊக்கப்படுத்தத்தொடங்கினேன். நாம் நினைப்பது எல்லாம் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் நடக்கும் என்ற நம்பிக்கையில் முயல்வதுவே   எமது கடமை..! மகளைச் சாதாரணமாக மாற்றுவது எனபது ஒரு சவாலான விடயம் என்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். மாலை திருகோணமலை போகவேண்டும். ஆனால் வண்டி பழுதாகிவிட்டது. ஞாயிறு என்பதால் கடையும் பூட்டு..! பின்னர் மனைவியின் தயவில் மோட்டார் சைக்கிளில் வெளிக்கிட்ட

வடநாட்டு கலாசாரம்..!

படம்
    இந்திய தொலைக்காட்சிகளும், திரைப்படங்களும் பல இந்திய பிரதேச கலாசாரங்களை எம்மையறியாமலே எமக்குள் புகுத்திவிட்டன..! அதனூடாக பல தொழில்களும் வந்துவிட்டன. இதை குறை என்று சொல்லாவிட்டாலும் கால மாற்றத்தால் வந்த விளைவு என்று எடுத்துக்கொள்ளலாம். எமது நிறுவனத்திலும் அண்மைக்காலமாக, வட இந்தியர்கள் ஹொலிப்பண்டிகை கொண்டாடுவது போல் எமது பிள்ளைகளும் கொண்டாட விரும்புகின்றார்கள். அதற்கு, தற்போது அவர்கள் தெரியும், கற்றல் செயற்பாடுகள் முற்றாக முடியும் இறுதி நாளில்,   வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவுவதுடன், கலர் கலந்த தண்ணீரையும் சக நண்பர்கள் மேல் தெளிப்பார்கள். இச்செயற்பாடு அவர்களுக்குப் பெரும் சந்தோசத்தைக் கொடுக்கின்றது. வாழ்க்கையில் கொண்டாட வேண்டிய தருணங்களில் கொண்டாடத்தான் வேண்டும். நானும் அதனை மறுப்பதற்கு இல்லை. இருந்தாலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கலாசார அம்சங்களைப் பிரதிபலித்தால் எமது கலாசார விழுமியங்கள் காப்பாற்றப்படும் அல்லது நாம் வட இந்தியர்களின் கலாசாரத்தைப் பின்பற்றுவது போல், எமது கலாசாரத்தையும் உலகிலுள்ள யாராவது மக்கள் கூட்டம் பின்பற்றக்கூடிய வகையில் அவற்றைப் பிரபல்யப்படுத்த வேண்டு

எதிர்மறைப் புகழ்..!

படம்
    பொதுவாக வாழ்க்கையில் நடக்கும் நல்ல விடயங்களோ அல்லது கெட்ட விடயங்களோ அவற்றைப்பற்றி கொஞ்சம் இயற்கை ரீதியாக நான் அலசுவது உண்டு.                                       இம்முறை மகளின் பெறுபேறுகள் நான் நினைத்ததையும் தாண்டி அமைந்தது ஆச்சரியமானது என்றாலும் அது பல நன்மைகளையும் தருகின்றது..! மகள் சொன்னது போல் தான் நன்றாகச் செய்யவில்லை என்றாலும் மூன்று பாடங்களில் பாஸ் சித்தியாவது அடைந்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறாததால், மீள் பரீட்சிப்பிற்கு விண்ணப்பம் போட விரும்புகின்றார். இவர் மாத்திரமன்றி இம்முறை நாடு முழுவதிலும் 27000பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்..! அதேவேளை பல கிராமப்பாடசாலைகளிலும் நல்ல பெறுபேறுகள்   வந்துள்ளன..!  கொரோனாவும், வீட்டில் இருந்து படிக்கக்கூடிய ஜூம் ஊடான கல்வியும்,  சுயமுயற்சியும் பலருக்கு நம்பிக்கை அளித்துள்ளது..! அலைச்சலற்ற ஆரோக்கியமான உண்மையான கல்விக்கு கொரோனா உதவியது, காலவோட்டத்தில் நடந்த பெருமாற்றம்..!  என்னைப்பொறுத்தவரை, இந்தப்பெறுபேறு எனக்கு வருத்தத்தை அளித்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு, மகளைத் திரும்ப எழுதுவதற்கு தூண்டவும், துணையாக இருக்கவு

லவ்வர்..!

படம்
    இம்முறை திருகோணமலையில் இருந்து வரும்போதே சற்று குழப்பமான மனநிலையில் வீடுவந்தேன். முதலில் மகளை ஆறுதல் படுத்திப்பின்னர் எனது நேர்முகத்தேர்வை முடித்து, அதன்பிறகு அந்தியேட்டியில் பங்குபற்றி, இம்முறைப் பயணநோக்கத்தை நிறைவுசெய்தாலும், ஒரு திரைப்படம் என்றாலும் பார்த்து மனதை புத்துணர்ச்சிப்படுத்த விரும்பினேன். நேரமே கிடைக்காமல் இருந்தது. இருந்தாலும் நேற்று இரவு 10 மணிக்கு கிட்டத் தொடங்கி, காலை 8 மணிக்குள் இந்தப்படத்தைப் பார்த்து முடித்தேன்.   படத்தில் பல சம்பவங்கள் என் வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்டு வந்தது ஆச்சரியம்..! குடிகாரத்தந்தை..! வேலைசெய்யும் தாய்..! அக்கறையுள்ள லவ்வர், நல்ல சில நண்பர்கள் என இருந்தாலும், இந்த படத்தின் கதையே காதலிக்கும் காலத்திலேயே ஒருவருடைய முழுக்குணமும் தெரியவர, எப்படிக்காதலைத் தொடர்ந்து கலியாணம் வரை கொண்டுசெல்வது..? இந்தக்காலத்து சந்ததிகள் பலர் இந்தப்பிரச்சனைக்குள் மாட்டித் தவிப்பதை பல தடவைகள் எனது நிறுவனத்திற்குள்ளேயே பார்த்துள்ளேன்..! காதலைக் கலியாணம் வரை கொண்டுசெல்லாத தவறை நானும் செய்துள்ளேன். யாரைக்குறை கூறுவது என்று தெரியாவிட்டாலும், நாம் சரியாக இ

ஒன்றை விட்ட அண்ணன்..!

படம்
  நீண்டநாட்களாக திருகோணமலையில் இருக்கும் எனது ஒன்றைவிட்ட அண்ணன் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று நினைத்தேன். இடையில் ஒரு முறை ஒரு Gift ஜயும் வாங்கிக்கொண்டு, எனது காரில் அவரது வீட்டிற்கு கிளம்பினேன். போன நேரம் மாலை 7.00 மணிக்கு கிட்டவாக இருக்கும். ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன் அந்த வீட்டிற்கு அடிக்கடி போவது வழக்கம். அந்த எண்ணத்தில் ஒரு வீதியால் போனேன். ஏதோ தவறுதலாக   வந்ததுபோல் எல்லாம் தெரிந்தன. பிறகு தான்   உண்மை புரிந்தது பாதை மாறி வந்துவிட்டதாக..! பின்னர் கஷ்டப்பட்டு அந்தவீதியில் காரைத் திருப்பிக்கொண்டு, இன்னொரு வீதிக்கு வந்து, அதிலிருந்து இன்னோரு வீதியால் ஆரம்பத்தில் போன வீதிக்கு சமாந்தரமாகவுள்ள வீதியில் பயணித்தேன். இது தான் அண்ணன் இருக்கும் வீதி என்பதை ஓரளவிற்கு நிச்சயப்படுத்திக்கொண்டு மேலும் சென்றேன். இடையிலுள்ள கட்டடங்களைப் பார்த்ததும் எனக்கு குழப்பமாகப் போய்விட்டது. இந்த வீதியாலும் அதிக வாகனங்கள் வந்துகொண்டிருந்தன. வீதியும் அவ்வளவு பழகியதைப் போல் தெரியவில்லை. ஒரு கோவிலுக்கு முன்னாலுள்ள சிறிய வீதியில் இறங்கித் திரும்ப அவர்களின் வீடு வரவேண்டும். ஆனால் அந்தக்கோவிலையே காணவ

ஓபிண் டே (Open Day)..!

படம்
    இதுவரை காலமும் எமது நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை என்பது சாதாரண விளம்பரங்கள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் போன்றவற்றோடு நின்றுவிடும். அந்த விளம்பரங்களுக்கே நாம் நினைக்கும் அளவை விட அதிகம் பிள்ளைகள் வந்து படிப்பார்கள்..! கொரோனா வந்த பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புக்கள் மாணவர்களை கல்வியின் பால் ஈர்க்கத்தவறி விட்டது. பணத்தேவையால் தொழிலே அவர்களுக்கு முக்கியமானதாகத் தோன்றுகின்றது. சின்னவயதில் இருந்தே கஷ்டப்பட்டு படிப்பித்த பெற்றோரை மேலும் சங்கடத்திற்குள் தள்ள மனமில்லாமல் பல மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தி வேலைகளுக்குச் செல்கின்றார்கள். சிலர் நாட்டை விட்டே போகின்றார்கள். இது இவ்வாறு இருக்க, எமது அரசின் கொள்கைகளும் இலவசங்களை குறைக்க விரும்புகின்றது..! ஒரு பொருள் இலவசமாக கிடைக்கின்றது என்றால் அதன் மாதியாரை புரியாமல் பலர் அதனை வீணடிக்கின்றார்கள். காசுக்குப் படித்தால் தான் அதன் மதிப்பு புரியும் என்ற வகையில் அரசின் போக்குகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம், பல்கலைக்கழகத்தில் படிக்கத் தகுதியிருந்தும்,   இலங்கைப் பல்கலைக்கழகத் தெரிவுக்கான வெட்டுப்புள்ளிகளைப் பெறமுடிய

எண்ணங்கள் செய்யும் சாகசம்..!

படம்
    இயற்கை என்னுடன் ஏதோ ஓர் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாக நான் அடிக்கடி உணர்கின்றேன். இது எல்லோருக்கும் பொருந்தும் என்றாலும் எல்லோரும் அவ்வாறு நிகழ்வுகளைப் பொருத்திப்பார்ப்பதில்லை. ஆனால் நான், அதனைச் செய்வதுண்டு..! நேற்று,   திருகோணமலை நன்னடத்தைச் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஒரு கூட்டத்திற்கு என்னை அழைத்திருந்தார்.   அதில் சூழ்நிலைகள் காரணமாக தொடர்ந்து படிக்க முடியாது போகும் மாணவர்களுக்கு “என்ன வழிகள்..?” இருக்கின்றன என்பதும் அவர்களுக்கு “எப்படி நிறுவனங்கள் உதவுகின்றன..?” என்பதும் அதுமாத்திரமன்றி, கா.பொ.த சாதரண தரம் தாண்டி உயர் தரம் படிக்க முடியாதவர்களுக்கான “வசதி வாய்ப்புக்கள் என்ன..?” என்பதும், அதையும் தாண்டி பல்கலைக்கழகங்கள் கிடைக்காதபிள்ளைகளுக்கு “எப்படியான வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றன..?” என்பதும்   தொடர்பான கலந்துரையாடல்கள் அங்கே இடம்பெற்றன. அதில் பல்கலைக்கழகம் செல்லத் தகுதியான புள்ளிகள் இருந்தும், பல்கலைக்கழகம் போக முடியாத மாணவர்களுக்கு எங்களுடைய நிறுவனம் இருக்கின்றது என்பதும் அதில் படிப்பதற்கு உயர்தரத்தில் 3 பாடங்களும் சித்தியடைய வேண்டும் என்று