தற்கால மாணவர்களின் மனங்களில், நற்பண்புகளைத் தாண்டி, யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை தான் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கமே பெரிதாக இருப்பதாக எண்ணத் தோன்றுகின்றது. ஒரு கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், போட்டி அடிப்படையில், விரும்பிய கற்கைநெறி கிடைத்ததும், மகிழ்ச்சி அடைகின்றார்கள். அதைவிட இன்னும் சிறப்பான ஒரு வாய்ப்பு வரும்போது, கிடைத்ததைவிடுத்து, அடுத்த வாய்ப்புக்குப் போகத்தவிக்கின்றார்கள்..! ஒரு முறைகூடச் சிந்திப்பதில்லை தம்முடைய இவ்வாறான செயற்பாட்டால் சமவயதை ஒத்த எவ்வளவோ அப்பாவி ஏழைமாணவர்கள் பாதிப்படைகின்றார்கள் என்பதை..! தமக்கு பிடித்து இருந்தால், அதுவும் இருப்பதைவிட சிறப்பானதாக எந்தவிதமான இலவச வாய்ப்புக்களையும், மேலே சொன்னமாதிரியான மாணவர்கள் வைக்கோல் பட்டறை நாய்கள் மாதிரி எண்ணம் கொண்டு, அதை அடையவே செயற்படுகின்றார்கள். ஒன்று கிடைத்தால், அதில் கொஞ்சக்காலமாவது நிறைவுடன் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியவில்லை என்றால் என்ன என்று சொல்வது..? பல மாணவர்களுக்கு தங்களின் நடவடிக்கைகளால் மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை உணரக்கூட முடியவில்லை என