இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பல்லு நோவு..!

படம்
    இந்த வாரம் தேர்தல் வருவதாலும், சில நாட்கள் அரச லீவுகள் இருப்பதாலும், ஊரில் நிற்கக்கூடியதாக இருந்தது..! பொதுவாக இப்படியான காலத்தில் தான், எனக்கு  வருத்தங்கள் வருவதுண்டு..! ஒரு விரலில் ஏற்பட்ட காயம், தற்போது மேல்தோல் வந்தாலும்,  இன்னும் வலி இருக்கின்றது..! அதேவேளை  சிவப்புச்சின்னக்குளவி கடித்து, வீங்கிய விரலும் கையும் இன்னும் முற்றாக மடிக்கக் கடினமாக இருக்கின்றது..! அதேவேளை சில வாரங்களாக பல்லிலும் வலி ஏற்பட்டு, வருத்தி வருகின்றது..! இவ்வாறு, பல காரணங்கள் இருப்பதால், இம்முறை மேலும் இருநாட்கள் சுகயீன லீவை சொல்லிவிட்டு, உடலிலுள்ள உபாதைகளை குறைக்க முனைந்தேன்..! அதன்படி நேற்று ஒரு பல் மருத்துவரை அணுகி, பல்லைப் பிடுங்கிவிடச் சொன்னேன்..! வலி தாங்க முடியவில்லை. மனைவி சொன்ன மருந்தைப் பல நாட்களாகப் போட்டு சமாளித்தாலும், நேற்று வேலைநாள்..! வைத்தியர்கள் வருவார்கள். கண்டிப்பாகக் காட்டவேண்டும் என்று நினைத்து, அவ்வாறே செய்து முடிக்க முனைந்தேன். ஆனால் வைத்தியர், பல்லில் சூத்தை இருக்கின்றது என்றாலும், தற்காலிகமாக அடைத்துப் பார்த்துவிட்டு, பிரச்சனையில்லை என்றால், நிரந்தரமாக அடைக்கலாம் என்றும்,

சனி வேலை..!

படம்
    நீண்ட நாட்களுக்குப் பிறகு வார இறுதியில் வேலைசெய்ய நினைத்தேன். அதுவும் பல தடவைகள் இழுபட்டு வந்து, இன்று தான், அதுவும் ஒரு நாள் தான் செய்ய முடிந்தது..! வரும் வாரம் தேர்தல் வருவதால்,   பல மாற்றங்கள் நாட்டில் ஏற்பட வாய்ப்புண்டு. எமது தார்மீக ஜனநாயக்க கடமையை ஆற்றவேண்டிய தேவையும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் உண்டு. நானும் அந்தக்கடமையாற்ற வார கிழமை முழுக்க யாழிலே நிற்கத் தீர்மானித்துள்ளேன். இந்த சமயத்தில் எமது நிறுவன வெள்ளிவிழா கடமைகளையும், பாடவிதானக் கடமைகளையும்   தவறாது செய்யவேண்டியது எமது பொறுப்பு. அந்த வகையில் காலை மரம் நடுகையை எமது நிறுவனத்தில் கணக்கியல் மாணவர்களைக்கொண்டு   நடாத்தினோம். அதேபோல் வெள்ளிவிழாவை முன்னிட்டு அதிஷ்டஇலாபச்சீட்டினையும் விற்கத் தொடங்கினோம். வேறும் பல   நியாயமான வழிகளில் பணம் சேர்க்கவும், பொருட்கள் சேர்க்கவும், தேவையானவர்களுக்கு அவற்கை கொடுத்து உதவவும் தொடங்கியுள்ளோம். அதுமாத்திரமன்றி, அதற்கான பொறுப்புக்கூறலையும், கூற அனைத்தையும் முறையாகப் பின்பற்ற, இருக்கும் எமது குறைவான ஆளணிகளைப் பயன்படுத்தி, எவ்வளவு நிறைவாகச் செய்யமுடியுமோ அவ்வளவு நிறைவாகச்   செய்ய

PT Sir..!

படம்
    “உடற்பயிற்சி ஜயா” என்ற தமிழைப் பயன்படுத்தினால் சற்று பழமையாகத் தெரியும் என்பதற்காக இவ்வாறு தலைப்பு வைத்தார்களோ தெரியவில்லை..! கிப்பொப் தமிழா ஆதியின் படங்களும் ஏறக்குறைய விஜய் அன்ரனி படங்கள் போல் சற்று வேறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களாக வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. பெரிய நடிகர்களின் படங்களின் சூத்திரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதால் என்னைப் போன்றவர்களுக்கு அவர்களின் படங்களில் ஈர்ப்பு குறைவு. ஆனால் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள், வேறுபட்ட கதைக்களங்களில் நடிப்பதால் படம் சரியில்லாவிட்டாலும் ஏதோவோர் புதிய அனுபவம் கிடைத்த ஒரு நிறைவு இருக்கும். மாறாக பெரிய நடிகர்களின் படங்களுக்குப் போனால், எல்லாம் ஓரே மாதிரியாக இருப்பதால் வெறுப்புத் தான் வருகின்றது..! இந்தப்படத்தின் கதை என்று பார்த்தால், பெண்களுக்கு ஏற்படும் தவறுகளுக்கு காரணம், பெற்றோர் மற்றும் சமூகம்..! “பொதுவாக மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்..?” என்ற   கோணத்தில் சிந்தித்து, தங்களுடைய தரங்களை, தங்களாகவே கீழே இறக்குகின்றார்கள்..! இது தவறு..! எந்தச் சூழலிலும் முன்னின்று போராடும் பெண்களைப் பாராட்டாமல் விட்டாலும், கொச்சைப்படுத்தக்

பரீட்சை பணிப்பாளர் நேர்முகத்தேர்வு..!

படம்
  கடந்த பல வாரங்களாக திருகோணமலை உயர்தொழில்நுட்ப நிறுவனத்திற்கு காரில் போகவேண்டிய தேவை வந்தது. அதே நேரம் பரீட்சை பணிப்பாளர்  தெரிவுக்கான நேர்முகத்தேர்விற்குரிய ஆவணங்களையும் சான்றிதழ்களையும் ஒரு  பாக்கில் போட்டு, அங்கும் இங்குமாகக் காவிக்கொண்டு திரிந்தேன்..!  ஆனால் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வரவில்லை. அதே நேரம் அந்த எண்ணம் நிராகரிக்கப்பட்டதாகவும் மீண்டும் சரியான சந்தர்ப்பத்தில் அழைப்பதாகவும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்தார். அதன் பின்னர் நான் காரில் போகவில்லை. அந்த பாக்கையும் கொண்டுசெல்லவில்லை. ஆனால் க.பொ.த உயர் தரப்பரீட்சை முடிவுகள் வந்த நேரம், மகளிடம் இருந்து, கவலையான செய்தி வரும்போது, இந்தச்செய்தியும் வாட்சப்பில் வந்தது..! “மகள் பரீட்சையில் தோல்வி..! பரீட்சைப் பணிப்பாளர் பதவிக்கான தேர்வு..!” ஒரே குழப்பம்..! ஒன்றும் சிந்திக்க முடியவில்லை. நடப்பது நடக்கட்டும், வழமைபோல் நமது முயற்சியைச் செய்வோம், பலன் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி ஏற்போம் என்ற மனநிலையில் செயல்களை ஆற்றினேன். தனியாகத் திருகோணமலையில் இருந்ததால்,   மகளைப் பற்றிய கவலையே அதிகமாக இருந்தது. எப்படியும் மனத

ஜனாதிபதித் தேர்தல்..!

படம்
  பொதுவாக யார் ஆண்டாள் என்ன..? ஆள்பவர், சரியாக நாட்டை ஆண்டாள் நான் எப்போதும் அவர்கள் பக்கம் நிற்பேன். அதற்கான நம்பிக்கை, அவர்களது ஆட்சியில் இருந்திருக்க வேண்டும். அண்மைய கால அரசியல் மிகவும் நெருக்கடியானது..! ஆட்சியாளர்களைத் தாண்டி இயற்கையும், உலக வல்லரசுப் போட்டிகளும் பல வித தாக்கங்களை நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றன..! அதன் விளைவாக நாம் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன..! இவை சாதகமானதாகவும் இருக்கலாம், பாதகமானதாகவும் இருக்கலாம். ஆனால் மக்களின் வாழ்வியல் தரத்தையும், பௌதீகநிலையினையும் பொறுத்து, பாதிப்புகள் வேறுபடுகின்றன. தற்போதைய ஜனாதிபதி, கடந்த தேர்தலில், வெற்றிபெறவில்லை. ஆனால் இயற்கையும், பொருளாதாரத் தாக்கங்களும் ஏற்படுத்திய அரசியல் கலகத்தின் விளைவாக ஜனாதிபதியாகிவிட்டார்..! அதுமாத்திரமன்றி, இன்றுவரை அவரால் இயன்றவரை நாட்டைப் பாதிப்பு இல்லாமல் கொண்டு செல்ல முடிந்திருக்கின்றது. இந்த இடத்தில் பாதிப்பு இல்லாமல் என்று சொன்னது, சராசரி மக்களின் வாழ்வியலை விட, மேம்பட்ட மக்களுக்கே இந்தவிடயம் மிக உண்மையாக இருந்திருக்கும். ஆனால் பலர், வறுமையின் பிடியிலும், துன்பத்திலும், ச

ரகு தாத்தா..!

படம்
    சில படங்கள் எந்த ஆரவாரமில்லாமல் வந்தாலும் மக்களின் மனதைத் தொட்டுவிடும்..! அதற்கு காரணம், அந்த படத்தின் உள்ளடக்கமும், அதனை மக்களுக்கு கொடுத்த விதமும் தான்..! இந்தப்படத்தைப் பொறுத்தவரை, எதேட்சையாகப் பார்க்கும் போதே படத்தின் காட்சிகள் ஏதோவோர் விதத்தில் என்னைக் கவர்ந்துவிட்டன..! இந்தப்படத்தின் கதை என்று பார்த்தால், 60பது, 70பதுகளில் இருந்த ஆண்களின் இயல்பையும், பெண்களின் இயல்பையும் தழுவியே பின்னப்பட்டுள்ளது. திருமணத்திற்கு அவசரப்படாமல் இருக்கும் பெண்ணுக்கு, ஒரு அழுத்தத்தைக்கொடுத்து, திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதும், அந்த திருமணம் நடந்தால், வாழ்வே நரகமாகிவிடும் என்று உணர்ந்த நாயகி அதனை நிறுத்த, முற்படுவதே கதை..! கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ஹீரோவாக இருந்து வில்லனாக மாறிய ரவீந்திரா விஜய்   போன்ற எல்லோரது நடிப்பும் பிரமாதம். குறிப்பாக நாயகனாக நடித்தவரின் இயல்பும் சிறப்பாக இருந்தது..! ஆடை வடிவமைப்புக்கள், காட்சிகள், மன இயல்புகள் அனைத்தும் பல வருடங்களுக்கு முன்நோக்கிச் சென்றதால் என்னால் அவற்றை இணைத்துப் பார்க்கக் கூடியதாக இருந்தது. விரும்பிச்செய்வதற்கும், திணிப்பதற்கும்

பூனையின் செயல்..!

படம்
    இரவு, இருவர் பிறந்த தின வீட்டுக்கொண்டாட்டம் முடித்துப் படுத்தது தான் விடிந்த பின்னரே எழுந்தேன். வழமைபோல் கடமைகளைச் செய்தாலும், சில விடயங்களைச் செய்யமுடியாது போய்விட்டது. சிவப்புக்குளவியின் குத்தல், கையை மடக்க இயலாத அளவிற்கு வீங்க வைத்துவிட்டது..! அதனால் உடற்பயிற்சி தவறியது. அதேபோல், வேறும் சில விடயங்கள் தவறிவிட்டது. போனவாரத்தில் இருந்து, ஒரு பல்லுக்குள் ஏதோ ஒன்று போய் அடைக்க, அது வலிக்கத்தொடங்கி, பின்னர் அதை எடுத்ததன் பின்னர் இன்னும் வலி கூடியுள்ளது. எனக்கு லீவு வந்தால், இப்படியான பிரச்சனைகள் எல்லாம் டக்கு டக்கு என்று வந்துவிடும்.! வேலைநாட்களில் இப்படியாக வருவது மிகக்குறைவு..! உடற்பயிற்சி செய்யாத அலுப்புடன், தேநீரைப் பருகிவிட்டு இருக்கும் போது, சிறிய புடையன் பாம்பு ஒன்று, பழைய வீட்டிற்குள் வர, எமது பூனையார் தனது வீரத்தைக்காட்டி, எமக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார்..! தெரியாத்தனமாக யாரையாவது கடித்து இருந்தால், நிலைமை கடும் ஆபத்தாக மாறியிருக்கும்..! பூனையாருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்ல வேண்டும். அது தனது கடமையைச் சிறப்பாகச் செய்வதாக உணர்கின்றேன். அடிக்கடி குட்டிகள் போ

August 16, 1947..!

படம்
  இந்தியா சுதந்திரம் கிடைக்க சில நாட்களுக்கு முன்னர், ஒரு கிராமத்தில் நடந்த கதையாக சித்தரிக்ப்பட்டிருக்கும் இந்த கதை உண்மையில் மிகச்சிறப்பாக அனைத்து உணர்வுகளையும் கொடுக்கக்கூடியதாக அமைத்ததற்காக இயக்குனர் N.S.பொன்குமாரைப் பாராட்டலாம். இந்தியாவில் சுதந்திரம் கிடைத்தாலும் ஒரு ஆங்கிலேயன், தனது ஆளுமையைப்பயன்படுத்தி, மக்களை அவ்வளவு கொடூரமாக கொன்றும், தனது மகன் மூலம் பெண்களின் கற்புக்களைச் சூறையாடியும், மக்களை வருத்தியும் வந்தான். இந்த ஆங்கிலேயனின் கேடுகெட்ட மகனை, ஆங்கிலேயர்களின் கொடூரத்தால் தாயைப்பறிகொடுத்த தனயன், வெட்டிக்கொன்று, அம்மக்களை வீரமாக இருக்கத்தூண்ட, இறந்தவனின் தந்தை தான் பெரிய பருப்பு மாதிரி, ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்தாலும், தனிப்பட்ட நபர்களின் நாசகாரச் செயலுக்காகவும், பணத்திற்காகவும், பதவிக்காகவும், அந்தப்பகுதிக்கு மக்களுக்கு, சுதந்திரம் கிடைத்ததை மறைத்து, தனது அராஜகத்தைத் தொடர, அதனை முறியடிக்க எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தாலும், அதனைத்தடுத்து, சுதந்திரம் கிடைத்த விடயம் ஊருக்குள் பரவாமல் இருக்க, அவ்விடயம் தெரிந்தவர்களைக்கொன்றும், நாக்கை அறுத்தும் ஆட்டம் போட, இறுதியில் அ

சேர்ந்த பிறந்த நாள்..!

படம்
  நேற்று 4.00 மணிக்கு வெளிக்கிட நினைத்த நான், பின்னர் பஸ்கள் இல்லாமல் சிக்கல்படக்கூடாது என்பதற்காக 3.15இற்கே வெளிக்கிட்டேன். காலை அலுவலகத்திற்கும் 7.00இற்கே சென்றுவிட்டேன். பகுதிநேர வகுப்புக்கள் காலை 7.00 இற்குத் தொடங்குகின்றன. பஸ் சரியாக 3.30 இற்கு வந்தது. நிறையக்கூட்டம். ஏறவே சிரமப்பட்டேன். இருந்தாலும் ஆச்சரியம், கொஞ்ச நேரத்தில் சீற் கிடைத்துவிட்டது. இது அதிஷ்டம் போல் இருந்தது. பலர் நின்றுகொண்டிருக்க, பிந்தி ஏறிய எனக்கு சீற் கிடைத்தது ஒரு அதிஷ்டம் தான். இருந்தாலும், நானும் நீண்ட நேரம் அந்த சீற்றில் இருக்கவில்லை. யுத்தத்தில் காலை இழந்த ஆமி ஒருவர் ஏறும்போது, அவருக்கு அதனைக் கொடுத்தேன்.   கெப்பிட்டிக்கொலாவில் இறங்கும் போது, எனக்கு நன்றி சொல்லி இறங்கினார். நல்லவர்கள் எங்கும் இருக்கின்றார்கள். சூழல், நம்மை ஒருவருக்கொருவர் எதிரியாக மாற்றுகின்றது. யாரைக் குறை சொல்ல..? படைத்த இயற்கையைத் தான் சொல்ல வேண்டும். அதனைத் தொடர்ந்து, சீற்றில் இருந்து வந்ததால் பின்பகுதி வலித்தது..! 8.20இற்கு யாழ் வந்துவிட்டேன். வீடு வர மேலும் 25 நிமிடங்கள் எடுத்திருக்கும். வழமையான கடமைகள் செய்யும் போது, வயிற்றில

தங்கலான்..!

படம்
    பா.ரஞ்சித்தின் படம் என்றால் அதில் அடிமைத்தனத்தை உருவாக்கிய பல வரலாற்றுக் கருத்துக்கள் இருக்கும். சாதியக் குறியீடுகள் இருக்கும். அடிமட்ட மக்களின் வாழ்வியலின் கஷ்டம் இருக்கும். காட்சிகள் முழுவதும் உணர்வுகள் எங்கும் பரந்து இருக்கும். தங்கம் தேடும் கதை என்றாலும், இந்தப்படத்திலும் இவை அனைத்தும் இருக்கின்றன..! ஆங்கிலேயர் காலத்து,   அடிமட்ட மக்களின் வாழ்வியலை அந்தக்காலத்திற்குப் போன மாதிரியே காட்சிப்படுத்தியுள்ளார்கள்..! உண்மையில் எல்லாப் பாத்திரங்களின் படைப்புகளும் சிறப்பாக இருந்தன. ஆனால் இரவுக்காட்சிகள் போல், பல காட்சிகள் வருவதால், சற்று தெளிவில்லாமல் இருப்பதாகத் தோன்றியது. அதேபோல் மொழி, தமிழ் என்றாலும் சில பேச்சுவடிவங்களைப் புரியச்சற்று கடினமாக இருந்தது. ஆங்கிலேயர்களின் சுரண்டலைப் பார்க்கும்போது, இன்னும் ஆங்கில நாட்டில் இருந்து இழந்ததை மீண்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணமும், எம்மை வருத்தியதற்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் அடிமைப்பட்ட நாடுகளில் பிறந்த அனைவருக்கும் இருக்கும். அந்த எண்ணத்திலேயே படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களைப் பார்க்கும் போதே, வெள்ளைதோல் என

ஈர்ப்பு அறுதல்..!

படம்
  சுகுமார் தனது மனைவி ராகினி மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளுடன் ”காஸ் மாண்ட்” என்ற ஒரு மலைப்பிரதேசத்தில் சில நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கவென்று சென்றார்கள். போகும்போது வழியில் ஒரு விபத்தைப் பார்த்ததும் பிள்ளைகளில் ஒருவர் தந்தையிடம் ஏன் இப்படி எல்லாம் நடக்கின்றது என்று கேட்டாள்..? இதற்குப் பதில் சொல்வது கடினம், நாம், எமக்குத் தரப்பட்ட கடமைகளைச் சிறப்பாகச் செய்தாலே போதும். அவ்வளவு தான்..! மீதி எல்லாம், இந்தப் பிரபஞ்சத்தில் புதிர் மாதிரித் தான்..! சில சமயம் நாம் தொட்டதெல்லாம் வெற்றியாக மாறும். சில சமயம் எதிர்மாறாக நடக்கும். இவற்றைப்பற்றி சரியாகத் தெரிந்தவர், இந்த பூமியின் தன்மைகளை முற்றாக உணர்ந்தவர் என்று யாரும் இருக்க முடியாது. இயற்கையும் அதனை அனுமதிக்காது. அப்படி ஒருவர் இருந்தால், அவர் தான் இந்தப் பூமியின் அல்லது எல்லாவற்றையும் அடக்கிய இந்தப் பிரபஞ்சத்தின் முதலாளி அல்லது கடவுள் அல்லது முகாமையாளர் எனச்சொல்ல முடியும். மனைவி ராகினி ஏன் தேவையில்லாமல் இப்படிக்கதைத்துக்கொண்டு இருக்கின்றீர்கள்..? நாம் இந்தப்பூமியில் வாழ்வது கொஞ்சக்காலம் தான். அதனைச் சந்தோசமாகக்   கொண்டாட வேண்டுமே தவிர

தள்ளி உட்காருங்கோ..!

படம்
  இன்று காலையே யாழ் போவதா அல்லது அடுத்த கிழமை போவதா என குழம்ப வேண்டிய சூழ்நிலை வந்தது..! இருந்தாலும் ஒருவாறு போவதாக முடிவு செய்து, அதற்கேற்ப செயற்பட்டேன். ஏறக்குறைய மாலை 2.45இற்கு வெளிக்கிட்டு அலுவலகத்தை விட்டுவெளியேறினேன். கடந்த கிழமை சரியாக மாலை 2.45 அடிக்கும் வரை காத்திருந்து, பிங்கர்பிறிண்ட் மெசினில் கைவைத்துத் திரும்ப, பஸ் போய்விட்டது..! பின்னர் ஏறக்குறைய முக்கால் மணித்தியாலம் காத்திருந்து பஸ் பிடித்து வீடுபோய் சேர இரவு 9.00 மணியாகிவிட்டது..! அதனால் இம்முறை 2.40இற்கே பிங்கரை வைத்துவிட்டு, பஸ் தரிப்பிடம் வந்தால், பஸ்ஸைக்காணவில்லை. ஏறக்குறைய 3.00மணிக்கு கிட்டவாக அந்த சின்ன பஸ் வந்தது. ஆனால் உள்ளே ஏறமுடியாத அளவு கூட்டம்.   ஒரு ஹோல்ட் வரை தொங்கிக்கொண்டு வந்து, அடுத்த ஹோல்டில் கூட்டத்திற்குள் நெரிபட்டு ஏறினேன். பஸ் மொரவேவ தாண்டியதும் ஒரு பெண் இறங்க, அந்த இடத்தில் இருக்கச்சென்றேன். அருகில் இன்னொரு பெண் இருந்தார். அவர் “என்னைத் தள்ளியிருங்கள்..” என்றார்.    எனக்கு என்ன சொல்வதென்றே விளங்கவில்லை..? நான் எங்கே தள்ளியிருப்பது..! மற்றைய பக்கம் நிலைக்குத்தான ஒரு இரும்புக்குழாய் தான் இருந்த

பொம்மை நேசம்..!

படம்
    சங்கர் சிறுவயதில் இருந்தே பல நல்ல குணங்களைக் கொண்டவன்..! யாரையும் புண்படுத்துவதில் துளியும் விருப்பம் இல்லாதவன். தானுண்டு, தன்வேலையுண்டு என்று வாழ்பவன். பொழுதுகளை வீணடிக்காது ஏதாவது ஆக்கங்கள் செய்யத்துடிப்பவன். அவ்வாறே, பல ஆக்கங்களையும் செய்து வைத்துள்ளான்..! காலங்கள் உருண்டோடின..! சங்கர்,   அவனது 25 வயதைத் தாண்டும்   நிலையில், ஒரு பஸ் தரிப்பிடத்தில் ஒரு பெண்ணைக்கண்டான்..! அவள், அவனது இதயத்தில் போய் நேரடியாகக் குடியேறிவிட்டாள்..! அவனால் அதனைத் தடுக்க முடியவில்லை. சில நாட்கள் அந்தப்பெண்ணுக்குப் பின்னால் திரிந்தாலும். தனது காதலைச் சொல்லச் சங்கடப்பட்டு, சொல்லாமலே வந்துவிட்டான். காலங்கள் சென்றன..! சங்கர் அந்தப்பெண்ணைப் பார்க்கச் சென்றான் அவளைக் காணவில்லை..! சங்கருக்கு அவளை மறக்க முடியவில்லை. சில நாட்கள் ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தது போல் இருந்தான். பின்னர், தன்னைச் சுதாகரித்து, அதிலிருந்து மீண்டு,   தனது கைவண்ணத்தைப் பயன்படுத்தி, சிலிக்கனில் அவளை ஒத்த ஒரு தோற்றம் கொண்ட ஒரு பொம்மையை உருவாக்கி,   அந்தப்பொம்மை மேல் அலாதியான பிரியத்தை வைத்திருந்தான்..! காலம் போகப் போக அவனது பெற்றோர் மறை

மீண்டும் கொண்டாடிய பிறந்த நாள்..!

படம்
  எமது காலத்தில்   பல நிகழ்வுகள், புதுவழிகளில் தேவைகளின் அடிப்படையில், நடக்கின்றன..! சிலவற்றை   குறித்த உண்மையான அந்த நாளில் நடாத்துவது என்பது முடியாத சூழ்நிலைகளில், அதே கொண்டாட்டத்தை தள்ளிவைத்துக்கொண்டாடக்கூடிய   புதிய சூழலுக்கு   நாம் வந்ததே பெரிய சமூகமாற்றம் தான்..! கால வேகமும், பொருளாதாரச் சூழலும் அவ்வாறாக எம்மை மாற்றியுள்ளது. முன்பு இவ்வாறு நடப்பதை, பெரியவர்கள் அனுமதிப்பதில்லை..! பருவத்தே பயிர் செய் என்பது போல் அந்தக்காலத்தில், அந்த அந்தக் காரியங்களை முடித்துவிடுவார்கள்..! சில இடங்களில் சாமத்திய வீடுகளை சேர்த்து வைத்து நடத்துகின்றார்கள்.   பிறந்த தினக்கொண்டாட்டங்களைச்   சேர்த்து   சில மண்டபங்களில் நடாத்துகின்றார்கள். சில இடங்களில் திருமணங்களைக்கூடக்   கூட்டமாக நடாத்துகின்றார்கள்..! காலம், சரியான அல்லது நியாயமான காரணங்கள் இருந்தால், அவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்துவிடும். எனது பிறந்த தினம்   செப்ரெம்பர் 5 இல் வந்தது. அன்று நான் திருமலையில் இருந்ததால், பல விதமான கொண்டாட்டங்கள் நடைபெற்றன..! பல பரிசில்களும் வந்தன..! ஆனால் எனது நிரந்தர அலுவலக ஊழியர்கள் அதற்கான விழாவை, இன்று இம்மா

அமைச்சின் செயலாளர் கூட்டம்..!

படம்
  சில விடயங்கள் சில காலத்தில் வரும்போது எரிச்சல் ஏற்படும்..! நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாட்டில் யார் அடுத்த ஜனாதிபதி என்ற பரபரப்பான இந்தச்சூழலில் எமது தலைமையகம் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது..! அது எமது கல்வியமைச்சின் செயலாளருடனான கூட்டம்..! அத்துடன் நமது பாதீடுகள் தொடர்பாகவும் விளக்கங்கள் கோரப்படலாம் என்ற ஒரு கதையிருந்தது. உண்மையில் கூட்டத்தில் என்ன கதைக்கப்போகின்றார்கள் என்ற தெளிவு ஒருவருக்கும் ஏற்படவில்லை. நான் முதலே, போவதா அல்லது விடுவதா என்ற இரட்டை மனநிலையில் இருந்தேன். சிலவேளைகளில் உடலில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் போவதில்லை என்றும், உடல் ஆரோக்கியமாக இருந்தால் போவது என்றும் தீர்மானித்து இருந்தேன். தேவையில்லாமல் பொய்கள் சொல்லக்கூடாது என்பதை இயன்றவரை கடைப்பிடிக்க நினைக்கின்றேன். இன்னொரு காரணமும் உண்டு. அது, இயற்கை மேல் எனக்கு அதிக பயம் உண்டு..! நான் என்ன சொல்கின்றேனோ அது பல முறை பலித்துவிட்டது.   உதாரணமாக இன்று காய்சல் என்று சொல்லி, லீவு எடுத்தால் அன்று எதாவது உடலில் உபாதைகள் வந்து, சொன்ன காரணம் உண்மையாகும் படி சூழல் இயங்குவதாக, நான் எனது அனுபவத்தில் உணர்ந்துள