பல்லு நோவு..!
இந்த வாரம் தேர்தல் வருவதாலும், சில நாட்கள் அரச லீவுகள் இருப்பதாலும், ஊரில் நிற்கக்கூடியதாக இருந்தது..! பொதுவாக இப்படியான காலத்தில் தான், எனக்கு வருத்தங்கள் வருவதுண்டு..! ஒரு விரலில் ஏற்பட்ட காயம், தற்போது மேல்தோல் வந்தாலும், இன்னும் வலி இருக்கின்றது..! அதேவேளை சிவப்புச்சின்னக்குளவி கடித்து, வீங்கிய விரலும் கையும் இன்னும் முற்றாக மடிக்கக் கடினமாக இருக்கின்றது..! அதேவேளை சில வாரங்களாக பல்லிலும் வலி ஏற்பட்டு, வருத்தி வருகின்றது..! இவ்வாறு, பல காரணங்கள் இருப்பதால், இம்முறை மேலும் இருநாட்கள் சுகயீன லீவை சொல்லிவிட்டு, உடலிலுள்ள உபாதைகளை குறைக்க முனைந்தேன்..! அதன்படி நேற்று ஒரு பல் மருத்துவரை அணுகி, பல்லைப் பிடுங்கிவிடச் சொன்னேன்..! வலி தாங்க முடியவில்லை. மனைவி சொன்ன மருந்தைப் பல நாட்களாகப் போட்டு சமாளித்தாலும், நேற்று வேலைநாள்..! வைத்தியர்கள் வருவார்கள். கண்டிப்பாகக் காட்டவேண்டும் என்று நினைத்து, அவ்வாறே செய்து முடிக்க முனைந்தேன். ஆனால் வைத்தியர், பல்லில் சூத்தை இருக்கின்றது என்றாலும், தற்காலிகமாக அடைத்துப் பார்த்துவிட்டு, பிரச்சனையில்லை என்றால், நிரந்தரமாக அடைக்கலாம் என்றும்,