இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மருமகனின் திருமணம்..!

படம்
  நித்திரையே கொள்ளமுடியவில்லை. விடிய திருகோணமலை போகவேண்டும்..! அங்கே எனது மச்சாளின் மகனின் திருமணம் நடைபெற இருக்கின்றது. மணிக்கூட்டைப் பார்க்கின்றேன் மணி நடு இரவு 12.40. சரி இன்னும் இரண்டு மணித்தியாலம் படுத்துவிட்டு எழும்புவோம். அதிகாலை 2.30 மணிக்கு எழும்பினால் அனைத்துக்காலைக்கடன்களையும் முடித்துவிட்டு, எனது காரில் அல்லது மோட்டார் சைக்கிளில் அச்சுவேலி போய், அங்கு இருக்கின்ற அன்ரிவீட்டில் அதை நிறுத்திவிட்டு, அவர்களுடன் வானில் திருகோணமலை போவதே திட்டம்..! நித்திரை வர மறுத்தது..! எழுந்து பார்க்கின்றேன்   மணி அதிகாலை 1.40..! மீண்டும் திரும்பி   திரும்பி படுக்க முயல்கின்றேன். கண் மூடமுடியவில்லை..! பொறுமையிழந்து 1.40இலே எழுந்து,   2.30இற்கு வைத்த அலாமை நிறுத்திவிட்டு, காலைக்கடமைகளை முடித்தேன். 3.30 இற்கு வெளிக்கிடக்கூடியதாக இருந்தது. நடு இரவு மோட்டார் சைக்கிளில் போவது சற்று பயமாக இருந்தது. குறிப்பாக நாய்களுக்கும், கள்ளர்களுக்கும் இடையில் மறித்துக் குறுக்கிடலாம்..! மகளை எழுப்பி கேற்றை திறக்கச் சொல்ல, அவள் குழம்பி ஏதோ செய்ய, அவளைப் பேசிவிட்டு, காரில் வெளிக்கிட்டேன். நான் அவர்களு

குட்டிக்கதையினது புரிதல்..!

படம்
  இன்று செவ்வாய் கிழமை. எமது ஆங்கிலத்துறை மாணவர்களால் “புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்விற்கு“ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழமையாகப் பொருளாதாரக்கஷ்டத்தில், இவ்வாறான நிகழ்வை நிறுவனச்சூழலில் வைப்பதை வலியுறுத்தி வந்த நான், இம்முறை வெளியே செல்ல அனுமதித்தேன்..! அண்மையில், ஒரு துறையில் படித்த பாடமே இந்த முடிவை எடுக்கத்தோன்றியது. நினைத்ததுபோல் நிகழ்வுக்குச் சென்றேன். வழமைபோல் கௌரவித்தார்கள். துறைத்தலைவர் உரையில் ஒட்டகம், அதன் குட்டி தொடர்பான ஒரு குட்டிக்கதை சொன்னார்..! படைக்கப்பட்ட சூழலும், வாழும் சூழலும் மனித முயற்சிகளால் மாறும் போது ஏற்படும் பாதிப்புக்களை அக்கதை எனக்கு உணர்த்தியது..! இலகுவாக வாழவேண்டிய நிலையில், கஷ்டப்பட்டு வாழ வேண்டிய சூழல் உருவாகின்றது. மாணவர்களின் தரமான ஆடல், பாடல் மற்றும் நாடகத்திற்குப் பிறகு எனது பேச்சு வந்தது. அதில், வழமைபோல் சில கருத்துக்கள் சொல்லி, எமது திறந்த வெளிச்சிறைச்சாலை வாழ்க்கை முறையை பற்றிச்சொன்னேன்..! ஆசைகளாலும், ஆணவத்தாலும் ஏற்பட்ட மாற்றத்தால், வந்த அவதி நிலையே எமது நிலை என்று   அங்கிருந்தவர்களுக்கு உணர்த்த முயன்றேன். ஆனால் அது நடந்ததா..? அல்லது வ

அரசின் வரி..!

படம்
  நாடு பொளுளாதாரத்தில் வீழ்ந்து இருக்கும் சூழலில் அரச உத்தியோகத்தர்கள் நிலை, மிகவும் கேள்விக்கூறியாகவே உள்ளது. சாதாரண வாழ்விற்கே தற்போது அதிக பணம் தேவைப்படும்போது, சமூக அந்தஸ்தைப்பேணும் நோக்கில் செயற்பட்டால் மனவருத்தமே மிச்சமாகும். தனியார் நிறுவனங்களிலும் இந்நிலைப்பாடு இருந்தாலும், ஓரளவிற்கு தாம் நினைத்ததை அடைய முகாமை செய்யமுடியும். வருமானம் வரும் என்றால் இலாபத்தை ஊழியர்களிடம் ஒரு சரியான விகிதத்தில் பங்கிட முடியும். அரச நிறுவனங்களில், அதுவும் எம்மைப் போன்ற அரச பணத்தில் தொழில்நுட்பவியல் கல்விச்சேவைகளைச் செய்யும் நிறுவனங்கள், அரசின் திறைசேரிப்பணத்தையே நம்பியிருக்க வேண்டிய சூழலில்,   நாட்டின் வந்குரோத்து நிலை, நிறுவனங்களின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது..!   அரசு அதிக வரிகளை விதிக்கின்றது..! அரச ஊழியர்களின் சம்பளமும் குறைவு..! இந்த நிலையில் அதிக வரி   செலுத்தவேண்டிய நிலைவரும் போது,   ஊழியர்களின் நிலை கவலைக்கிடம் இது தான்..! நான் 50 வயதைத் தாண்டியதால் ஆரோக்கியத்தையும் ஒரு பணவருவாயாகக்கருதி,   எனது உழைப்பிற்கு ஒரு வரையறையை வைத்துள்ளேன். வரவுக்கு ஏற்ற செலவு. தேவைகளை இ

யாத்திசை..!

படம்
  நேற்று உறவினரது திருமணத்திற்காக லீவு எடுத்ததால், இன்று அலுவலகத்தில் வேலைகள் அதிகமாக இருந்தன. ஒரு கட்டத்தில் போதும் என்று நினைத்துக்கொண்டு வீடு வந்துவிட்டேன்..! அப்படியிருந்தும் ஏதோ சோர்வாக இருந்தது. தம்பியும், அவரது மகனும் வந்திருந்தார்கள். அவர்களுடன் கதைத்து, அவரது புலமைப்பரீட்சை சாதனையைப் பாராட்டி, சிறு அன்பளிப்புடன் அனுப்பி வைத்தேன். இந்த சமயத்தில்,   மூத்த மகளுக்கும் எனக்கும் ஒரு சண்டையே வந்துவிட்டது..! புரிந்துணர்வுக் குறைபாடுகள் எமக்கும் உண்டு..! 2000இற்குப் பிறகு வந்த இந்தத் தலைமுறையினருக்கு அது இன்னும் கூட உண்டு..! பெரியவர்கள் மன்னித்துச் செல்வதே பெருந்தன்மைக்கு அழகு..! அதையே நானும் பின்பற்றினேன். எனது மனநிலையை (Mood) இன்னும் மாற்ற பென் ரைவில் இதுவரை பார்க்காத ஒரு படம் இருந்தது. அதன் பெயர் யாத்திசை..! சரி பார்ப்போம் என்று உட்கார்ந்து பார்த்தால், படம் கற்காலத்தில் நடப்பதுபோல் ஒரே ரத்தமும் சதையுமாக இருந்தது. நடிகர்கள் நன்றாக நடித்திருந்தாலும் யாரையும் எமக்குத் தெரியாது..! அதேபோல்    காட்சிகளும் விசித்திரமாகவே இருந்தன. எல்லாவற்றையும் விட முக்கியமானது இது எந்தமொழிப்படம்

மார்க் அன்டனி..!

படம்
  தமிழ் படங்கள் இப்போது கற்பனையான பல விடயங்களில் கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது. கதையில் உண்மைத்தன்மை கேள்விக்கூறியாக இருந்தாலும், நடிப்பாலும், காட்சியமைப்பாலும், இசையாலும் படத்தைத் தூக்கி நிறுத்தியுள்ளார்கள். இந்தப்படத்தின் கதை தான் என்ன..? Time Traveler Concept இல் ஒரு போன் கோல் மூலம் தற்காலத்தில் இருந்து கடந்த காலச்சூழலுக்கு போன் செய்து, இப்ப இருக்கும் தவறுகளைத் திருத்த முயற்சிக்கும் ஒரு நபரின் முயற்சியை ஆரம்பத்தில் சிறிது குழப்பமாக இருந்தாலும் பின்னர், மிகச்சிறப்பாகவும், நகைச்சுவையாகவும், சொல்லுகின்றது இந்தப்படம்..! புரட்சித்தளபதி நடிகர் விஷால் ஹீரோவாக இருந்தாலும்   நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூரியாவின் மாறுபட்ட நடிப்பு படத்தில் ஒரு ஈர்ப்பைக் கொண்டுவந்துள்ளது. இருவரும் இரட்டை வேடம் என்பதால் படமே கொண்டாட்டம் தான். இது போதாது என்று ரித்து வர்மா நாயகியாகவும், சுனில் தொடங்கிப் பல நடிகர்கள் தமது சிறப்பான நடிப்பையும் வழங்கி படத்தின் தரத்தை உயர்த்திப் பிடித்துள்ளார்கள். இயக்குனர் செல்வராகவன் ஒரு விஞ்ஞானியாக   நடித்து, இரு கால கட்டங்களை இணைக்கும் ஒரு போனைக்கண்டுபிடித்து, இந்த விசி

இந்தியா தோல்வி..!

படம்
    இலங்கை தோற்றபோது கூட நான் ஆட்டத்தைக் கவனிக்கவில்லை. ஆனால் இந்தியா தோற்கின்றபோது   இரு அணியினரின் ஆட்டத்தையும் கவனித்தேன்..! இந்தியாவில், அதுவும் நாட்டின் பிரதமரே வேலைவெட்டி எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளால் உலகப்கோப்பை கிரிக்கெட்டை பார்க்க மைதானத்தில் இருக்க, அவரோடு சேர்ந்து, மைதானத்தில் இலட்சக்கணக்கில் மக்கள் நேரடியாகப் பார்க்க, இவர்கள் போக மிகுதிச்சனத்தொகை தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்கள் வாயிலாக போட்டியைப் பார்த்துக்கொண்டிருக்க,   50 ஓவரில் 240 ஓட்டங்களுடன் அனைவரும் சுருள, அவுஸ்ரேலியா அணி ஆறு விக்கெட்டுகளால் ஆறாவது தடவையாக 241 ஓட்டங்கள் பெற்று வெற்றிபெற்றது ஆச்சரியமானது அல்ல..! போட்டி என்றாலே வெற்றி அல்லது தோல்வி தான்..! இதுவரை இந்தியா 2 முறை உலகக்கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. அதேபோல் அவுஸ்ரேலியா 6 முறை கைப்பற்றியுள்ளது. 1இற்கு 3 என்ற விகிதத்தில் வெற்றிக்கான வாய்ப்பு அறியப்பட்டுள்ளது. இனிவரும் போட்டிகளில் மூன்று மடங்கு முயற்சி இந்திய அணிக்குத் தேவை. இங்கு குறிப்பாக ஆட்கள் தேர்வில் இருந்து, அவர்களுக்கான தயார்படுத்தல்கள் வரை அதிகூடிய கவனம் தேவை..! முதல் முறை உலகக்கோப்பையை

புலமைப்பரிசு முடிவு..!

படம்
  எமது ஊரில் கல்விக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். குறிப்பாக பெற்றோர் தமது பிள்ளைகள் 5ம் வகுப்புப் புலமைப்பரிசுப் பரீட்சையில் சித்திபெற அதீத பிரயத்தனப்படுவார்கள். அதற்காக அம்மாக்களும், அப்பாக்களும் அலையாய் அலைவார்கள்..! இவை ஒரு விதத்தில்   ஆரோக்கியமானது என்றாலும் பாதகங்களும் இருக்கின்றன. இப்படியான கால கட்டத்தில் எனது படிக்காத தம்பியின் மகனும் இம்முறை   பரீட்சையில் தோற்றினான். எப்படிச் செய்தாயா..?   என்று   நான் கேட்க, “ 160 புள்ளிகள் எடுக்கலாம் என்று சொன்னான்..!” நேற்றிரவு 12.40 இற்கு ஒரு அழைப்பு..! கடும் நித்திரையில் இருந்த எனக்கு ஓரே பதட்டமாக இருந்தது. யார் இந்த நேரத்தில் எடுப்பது..? கோபம்   கூட வந்தது..! பொதுவாக வேலை நேரங்கள் தவிர ஏனைய நேரங்களில் வரும் பெயர் தெரியாத   போன் கோல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அப்படிக்கொடுத்தால், ஏனைய நேரமும் நிம்மதியிழந்து தவிக்கவேண்டிவரும். இரவு வந்த கோலிலும் பெயரில்லை. புது எண்ணாக இருந்தது. எனது கொழும்பிலுள்ள தம்பி, ஒரு திருமண நிகழ்வுக்காக ஊருக்கு வருகின்றார். முதலில் அவர் தான் வந்துவிட்டார் என நினைத்து அவ

லியோ..!

படம்
    அண்மைக்காலமாக வந்த விஜய் படங்களை நான் விரும்பிப் பார்ப்பது கிடையாது. அதற்கு முக்கிய காரணம் கதையைவிட பொழுதுபோக்கு விடயங்களில் கூடிய கவனத்தை விஜய் எடுப்பதே..! திரைப்படம் என்றாலே பொழுதுபோக்குத் தான்..! சிலர் மாத்திரம் படங்களூடாக வாழ்க்கையையும், புதிய அனுபவங்களையும், உலகத்தையும் அறிகின்றார்கள். அப்படிப்பட்ட படங்களைத் தேடிப்பார்ப்பதே என் வழக்கம். இந்த லியோ படத்தின் விமர்சனங்களையும், சில ரசிகர்களின் மீம்ஸ்களையும் பார்த்து இதுவும் வழமையான படம் என்று தான் நினைத்தேன். லோகேஸ் கூட சரியாக கதையை எழுதவில்லை என்றே நினைத்தேன். 25 நாட்களைக் கடந்துவிட்ட நிலையிலும் திரையரங்கிற்குச் செல்லவில்லை. இன்று எனது ஊழியர் அந்தப்படத்தைப் பென்ரைவ்வில் தந்தார். பார்த்தேன். உண்மையில் நன்றாக இருந்தது. ரசித்தேன்..!   விஜயின் பல பரிமாணங்கள் படத்தில் தெரிந்தன. சண்டைக்காட்சிகள் அதிகம் என்றாலும், ரத்தம் படம் முழுக்கத் தெளித்தாலும் அது சரி என்றே தோன்றியது.   சில காட்சிகள் நம்ப மறுத்தாலும், அதனையும் வித்தியாசமான ஒரு காட்சியாக பார்க்க முடிந்தது. கழுகு, சிறுத்தைப்புலி போன்ற மிருகங்களே நன்றாக நடிக்கும் போது, மனித ந

கப்டன்..!

படம்
    ஒரு இராணுவத்தளத்தில் இருக்கும் ஒரு அணி, கட்டிற்குள் ஏதோ ஒரு விநோத விலங்கிடம் மாட்டுவதும், அந்த நிகழ்வில் சிலர் இறப்பதும், அந்த விலங்கின் தன்மை சாதாரண சென்ஸார்களில் படாத வகையிலான தோற்றத்தைக் கொண்டாக இருப்பதாகவும், அதனைப்பற்றிய ஆய்வுக்குக் கிளம்பும் போது, ஏற்படும் சிக்கல்களும், அதனை தீர்க்க ஹீரோ போடும் சண்டைகளுமாக படம் இருக்கின்றது. ஆங்கில்படம் போல் எடுத்திருப்பது தமிழ் படங்களின் தரம் கூடியுள்ளது என்பதை உணர்த்தியது. தொழில்நுட்பங்கள் ரசிக்கும் படி அமைந்திருந்தன. நடிகர்களும் தமது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு உயிர்கொடுத்துள்ளனர். அந்த விநோத விலங்கும், அதன் கூட்டங்களும், அவை இறக்கும் போது அல்லது மயங்கும்போது சிலந்தி மாதிரி ஒன்று வெளியேறித் தப்புவதும், அதிலிருந்து மேலும் அதே மாதிரியான விலங்குகள் தோன்றுவதும் ஆச்சரியமாகவும், காட்டூன் படங்கள் போன்றும் இருந்தன. உண்மையில் ஒவ்வொரு உயிரின் இறப்பின் போது அல்லது ஆழ்ந்த உறக்கத்தின்போது இவ்வாறான ஒரு சக்தி வெளியேறுவதும், பின்னர் திரும்ப வருவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றது. அந்த சக்தி வரவில்லை என்றால் உயிர் இல்லை என்கின்றோ

நம்பிக்கையீனம்..!

படம்
  இன்று எனது நிறுவனப் பெண் ஊழியர்கள் சிலர் என்னுடன் கதைத்தார்கள். அவர்கள் மிகவும் திறமையானவர்கள். பல சேவைகளை   நிறுவனத்திற்குச் செய்துள்ளார்கள். இருந்தாலும் எல்லாவற்றிற்கும் சத்தம் போட்டுக்கதைப்பதால் பலர் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. நான் இந்த நிறுவனத்திற்கு வந்த காலத்தில், அவர்கள் இருவரும் இரு துருவங்களில் நின்று, ஆளாளுக்கு குறைசொல்வார்கள். எதிரும் புதிருமாக, கீரியும் பாம்புமாக என எப்போதும் எதிர் திசைகளில் நின்றார்கள். அனைவரது செயற்பாடுகளையும் அவதானித்த நான், அவர்களிடம் நீங்கள் இப்படி ஆளுக்காள் அடிபடுவதை விட கொஞ்சம் அமைதியாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கதையுங்கள். பிரச்சனைகள் குறையும் என்றெல்லாம் சொன்னேன். கேட்டார்கள். பிரச்சனைகள் குறைந்தன. நான் கூடப் பணிப்பாளராக வர இவர்களும் காரணமாக இருந்திருக்கலாம். தற்போது, பல பிரச்சனைகள் வந்து போய்விட்டன. காலம் மாறிவிட்டது..! வயதுகள் கூடிவிட்டது..! பொருளாதாரப் பிரச்சனைகள் கூடக் குடும்பப் பிரச்சனைகளும் வந்துவிட்டன..!    எல்லாவிடயங்களையும் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய மனநிலைகளில் யாரும் இல்லை. இந்த நிலையில், இவர்கள் என்னிடம் நீ

தோல்வியின் பின் வெற்றி..!

படம்
  அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், எமக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான தன்நம்பிக்கையும் தோல்வியைக் கொண்டுவரலாம் என்பதை அண்மையில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாது சென்ற நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் தோல்வியில் இருந்து அறிய முடிகின்றது..! வெற்றி தோல்வி என்பது எல்லாத் துறையிலும் ஏற்படுவது தான். நாம் நினைத்த மாதிரி எதுவும் தொடர்ந்து நடக்கும் என்று நினைப்பது உண்மையில் தவறு தான். ஆனால், சிலருக்கு வரும் தொடர்வெற்றிகளால் வரும் அளவுக்கு அதிகமான தன்நம்பிக்கை, அவர்களின் செயல்களில் பெரும் நம்பிக்கையைக்கொண்டுவரும்..! அப்படி இருக்கின்ற சந்தர்ப்பத்தில், அவர்களுக்கு ஏற்படும் தோல்வி பெரும் பாடத்தையே கற்றுத்தரும்..! இணைய ஊடகங்களில் ஒவ்வொரு நடிகர்களின் படங்கள் வரும்போது, அவர்களைப் பிடிக்காத மற்ற நடிகர்களின் ரசிகர்கள் செய்யும் செயல்கள், பெரிய வெறுப்பையும்,   அந்த அதீத ஆசைகொண்ட நடிகர்களின் உண்மை முகத்தை அறியாமல், ஏதோவோர் குருட்டு விசுவாசத்தில் செயற்படுகின்றார்கள். IMDb rate (Internet Movie Database) என்பது ஒரு திரைப்படத்தைப்பற்றிய ரசிகர்களின் தனிப்பட்ட கருத்துக்களின் சராச

தோல் வியாதி..!

படம்
  பொதுவாகத் தற்கால வைத்தியர்கள் என்றாலே பணம் கறப்பவர்கள் என்ற எண்ணமே மனதில் முதலில் வருகின்றது..! வைத்திய சேவையைக் காட்டிலும் பணத்தையும், பகட்டையும் வைத்தே அவர்களின் கடமைகள் இருப்பது  கவலையளிக்கின்றன..! மருத்துவ வியாபாரம் என்பது மிகவும் இலாபம் கொழிக்கும் ஒரு துறையாக உலகில் மாறியிருப்பது என்னைப்பொறுத்தவரை அழிவுகளுக்கான அறைகூவலாகவே என்சிறிய அறிவுக்குப் புரிகின்றது. வைத்தியர்கள் மேலுள்ள பயத்தால் வைத்தியசாலைகளை நினைப்பதே இல்லை. இறைவனும், இயற்கையும் அதனைப் புரிந்துகொண்டு இயன்றவரை மருத்துவமனைகளை நாடாமலே என்னை வைத்திருக்கின்றன..! ஏதாவது வருத்தம் வந்தால் அம்மாவிடம் அல்லது மனைவியிடம் அல்லது பிள்ளைகளிடம் சொல்லுவேன். அவர்கள் சொல்லும் வழி முறைகளைப் பின்பற்றுவேன். பெரும்பாண்மையான வருத்தங்கள் மாறிவிடும்..! இந்த மாதிரியான சூழலில் அண்மையில் கொழும்பிற்கு இருமுறை அடிக்கடி போகவேண்டிய சூழல் வந்தது. வெளியே சாப்பிடவும், தங்கவும் நேரிட்டது. இதனால் ஏதாவது அலர்ஜி வந்ததா என்று தெரியவில்லை. உடலில் பருக்கள் சில வந்தன..! குறிப்பாக முகத்தில் வந்தது, சில நாட்களில் காய்ந்து, காணாமல் போனது..! அதேவேளை மார்ப

மகளின் கோரிக்கை..!

படம்
  இன்று முடிக்கப்பல திட்டங்கள் இருப்பதால் மனத்தில் பதட்டம் தோற்றிக்கொண்டது. எல்லாவற்றையும் எப்படியாவது முடிக்க வேண்டும்..! எனது இரண்டாவது மகள், இன்று மதியம் ரிப்போட் கொடுப்பார்கள். கிளாஸ் ரீச்சர் வரச்சொன்னார் வந்து, ரீச்சருடன் கதைத்துவிட்டு சைன்பண்ணிவிட்டுப்போகச் சொன்னார். முகாமைத்துவ மாணவர்கள், குறூப் போட்டோ எடுப்பதற்காக, யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து, எமக்கு எல்லாம் குளோக் (Cloak) வாங்கி வந்துள்ளார்கள். அதை அணிந்துதான் இம்முறை படம் எடுக்க, அந்தத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தெஹிவளை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனமும் அந்த வழமையைப் பின்பற்றுவதால் நானும் ஒத்துக்கொண்டேன். நல்ல விடயங்களை, மற்றவர்களுக்கு அதனால் பாதிப்பு இல்லை என்றால் ஒத்துக்கொள்ளலாம் எனநினைப்பவன் நான்..! இதனிடையே மட்டக்களப்பு தொழில்நுட்பவியல் பணிப்பாளர், அங்குள்ள பல நிறுவனத்தலைவர்களுடன் யாழ்ப்பாணம் வந்ததாகவும், எமது நிறுவனத்தைப் பார்க்க விரும்புவதாகவும் கேட்டார்..! நானும் பார்க்கலாம் என அனுமதி கொடுத்ததால், இதோ இதோ வாரேன் என்று என்னைப் பதட்டப்படுத்தினார். இதற்கிடையே பல மாணவர்கள் தமது பட்டச்சான்றிதழை எடுப்பதற்கும்

திடீர் அழைப்பு..!

படம்
  இன்று சனிக்கிழமை. நாளை தீபாவளி..! வீடும், வளவும் குப்பையாக இருந்தது. விடுமுறை வந்தால் வீட்டையும், வளவையும் பராமரிப்பதே பெரிய வேலையாக இருக்கும். இருமணிநேரம் கடுமையாக வேலைசெய்தால், அவ்வளவு தான். பின்னர் அன்று முழுவதும் ஓய்வெடுப்பதே தற்போதைய நிலை..! அதிகவேலை செய்தால் பின்னர் நாளை ஒன்றும் செய்யமுடியாது. மருத்துவரை நாடாமல், நானும் எனது உடலும் என்ற ரீதியில் உடலும் உளமும் சொல்வதைச் செய்வதே எனது அறிவின் வேலையாகக் கருதுகின்றேன். உடல் வேண்டாம் என்று சொல்லும்போது, அறிவு ஏற்றுக்கொள்ளாமல் அதிகவேலைகளைச் செய்வதால், எழுவதே கடினம் எனப்பல தடவைகள் உணர்ந்துள்ளேன்.   ஏதோவோர் சமநிலைக்கு அமைவாக எனது வேலைகளைச் செய்வதே தற்போது வழமை. இந்த நிலையில் பாக்குமரங்களில் இருந்து விழுந்த பாக்குகளை கொசுக்களும், அட்டைகளும் பதம் பார்த்தன. பார்க்க அருவருப்பாக அவை இருந்தன. அவற்றைப்பொறுக்கி காய வைக்க முனைந்தேன்.   அதற்காக விழுந்த ஏறக்குறைய 100 பாக்குகளைப்பொறுக்கினேன். தொடர்ந்து பலமுறை குனிந்து எழுந்ததால் தலைசுத்தியது.   அத்துடன் வேலைக்கு ஒரு தற்காலிக ஓய்வைக்கொடுத்துவிட்டு, போய் சிறிதுநேரம் படுத்தேன். ஒரு போன் கோல் வந்

உல்டா..!

படம்
  இன்று காலை வழமைபோல் எழுந்து எனது கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் போது மூத்த மகள் அப்பா என்னை உடனே தனது ரியூட்டறிக்கு கொண்டு சென்றுவிடும்படி..! வழமையாக அப்படிக் கேட்காதவள் இன்று கேட்கும் போது எப்படி மறுப்பது..? இன்று காலை கடும் மழை பெய்துகொண்டிருந்தது. நேற்றிரவு தொடங்கிய மழை விட்டபாடில்லாமல் தொடர்ந்தது. உடனே நானும் சரி என்று வெளிக்கிட்டு, அவளையும் காரில் ஏற்றிக்கொண்டு செல்ல, சரியாகக் காலை 7.00 மணியாகிவிட்டது..! அவளது வகுப்பும் தொடங்கியது..! நானும் அப்படியே அலுவலகம் சென்று அங்குள்ள காலை நடைமுறைகளை அவதானித்தேன். எனது மகளுக்கு மேக்கப்செய்த பெண் பிள்ளை அங்கே பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்ற வந்திருந்தார். பார்க்க கவலையாக இருந்தது. தந்தையின் கவனிப்பில்லாமல், தானும் தாயும் சேர்ந்து தமது வாழ்க்கையைத் தீர்மானிப்பதும், அதில் வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு, தாண்டிச்செல்வதும் எவ்வளவு சவாலான காரியம்..! அந்தப் பெண் அதனைச் செய்தார். அவரைப் பாராட்டி, மேலும் ஊக்கத்தை வழங்கினேன். வாழ்க்கைக்கு முக்கியம் முயற்சியே..! இந்தக்கருத்தை பல முறை அவருக்கு விளக்கி, கவலைப்படாமல் இறைவன் மேல் பாரத்தை

டயரி (டைரி)

படம்
  திரீல் படமாகவும், அதே நேரம் Time Traveler concept இல் வரும் Creation Recapture என்ற ஒரு புதிய வடிவத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் உண்மையில் ஒரு வித்தியசமான அனுபவமாக இருந்தது. பொலிஸ் ரெயினிங்கில் கொடுக்கப்பட்ட ஒரு அசைன்மென்ட்டிற்காக துப்புத்துலக்க வெளிக்கிட்டு, இவை எல்லாவற்றிற்கும் ஒரு பிரபஞ்ச சம்பந்தம் இருப்பதாகக் காட்சிகளை நகர்த்தி, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காட்சிகள் வருவதும், அதனூடாக உண்மைகளைக் கண்டறிவதும் கனவும், நிஜமும் கலந்தது போன்ற ஒரு உணர்வைப் படம் தந்தது. அது மாத்திரமன்றி, படம் சில இடங்களில் திகில் படங்களைப்போல் மிரட்டியும், சில இடங்களில் துப்புத் துலக்கும் பொலிஸ் படங்கள் போல் குற்றவாளிகளை விரட்டுவதாகவும் இருந்தது. பார்க்கும் போது, சில இடங்களில் அமாண்யசக்தி இருப்பதாகவும், பஸ்ஸே ஒரு “பேய் பஸ்” போல காட்சி அமைக்கப்பட்டிருப்பதும் வித்தியாசமாக இருந்தது. துப்பே இல்லாத கேஸை வைத்து, அந்தகேஸோடு சம்பந்தப்பட்ட அனைத்து துப்புக்களும் அழிக்கப்பட்டதை, ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கதையை அமைத்துள்ளார் இயக்குனர்   இன்னாசி பாண்டியன் ( Innasi Pandiyan ) பொதுவாக இப்படியான கதைகளில்