இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முசுறுகள் (Red/Fire Ants) ..!

படம்
    சிலருடன் இயற்கை விரும்பி விளையாடுவது வாடிக்கை..! ஏன் என்று தெரியவில்லை..? பொறுத்தார் பூமியாழ்வார் என்பது போல் என்னையும்  இயற்கை  நினைத்துவிட்டதோ என்பது தெரியவில்லை..? ஆனால் விளையாட்டு தொடர்கின்றது..! ஆனால் சில சமயம் இயற்கையின் எண்ணங்களை என்னால் நிறைவேற்ற முடியாது போகின்றது..! நான் எல்லா உயிரினங்களையும் நேசிக்க விரும்பினாலும், என்னைக் கடிக்கும் நுளம்பைத் தூக்கிக் கொஞ்ச என்னால் முடியவில்லை..! அப்படியே கடித்துவிட்டுப் போகட்டும் என அன்பாய் இருக்கவும் இயலவில்லை. கடித்த நுளம்பை அடித்துக்கொன்றால் தான், நானே ஒரு பயனுள்ள மனிதாக எனக்குத்தோன்றுகின்றது. இன்று எனதுவீட்டிலுள்ள செவ்வரத்தை மரங்களில் நிறைய முசுறுகள் கூடுகட்டி வசித்து வந்தன. பல நாட்களாகப் பார்த்தாலும் அவற்றை அழிக்க மனம் வரவில்லை. அந்தச் செவ்வரத்தை மரங்களில் பூக்கள் கூட ஆய்வதில்லை. ஆனால்   அவை பெருகிப்பெருகி கைவைத்தாலே பாய்ந்து ஏறிக்கடிக்கும் அளவிற்கு வந்துவிட்டன..! மனைவியும், பிள்ளைகளும் என்னைப்போல் பொறுத்து இருந்தார்கள். அவற்றை அழிக்கும்படி என்னிடம் ஒன்றும் குறைசொல்லவில்லை. நான் யாழில் நிற்கும் நாளில் ஏதாவது அவர்களால் முடிய

மயக்கம் (Faint)..!

படம்
  சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் பரவாயில்லை என்ற ரீதியிலும், சில நாட்கள் ஏன் தான் வந்ததோ என்று வேதனைப்படும் அளவுக்கு வந்துவிடுவது வழக்கம். இன்றைய நாள் எனக்கு 3வது வகையைச் சார்ந்ததாக அமைந்துவிட்டது. பொதுவாக மருத்துவமனையை நாடவிரும்பாத எனக்கு, அங்கு எப்படியாவது போகவேண்டும் என்று இயற்கை அழுத்துவதாகத் தோன்ற வைத்த ஒரு நாள் இன்றைய நாள்..! வழமைபோல் பரபரப்பாக அங்கும் இங்கும் இயங்கிக்கொண்டிருக்கும்போது, எனது இடக்கையினது ஆள்காட்டிவிரலானது கதவுக்குள் மாட்டுப்பட்டு நகத்திற்கு அருகாமையிலுள்ள சதை பிடுங்கி எடுக்கப்பட்டுவிட்டது..! இது நடக்கும் போது மதியம் 12.45 இருக்கும். தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு செயற்திட்ட மதிப்பீடு நடந்துகொண்டிருக்க, பதிவாளர் இடம் மாறியதால், அந்த வேலையையும் இடையிடையே கவனிக்க   அங்கும் இங்கும் அரக்கப் பரக்கத் திரியும்போது, கைவிரல் கதவினுள் மாட்டிவிட்டது. பலர் அங்கே இருந்ததால், அந்த இடத்தில் நிற்காமல் அவசரத்தில் இழுத்துக்கொண்டு வர   ரத்தம் கொப்பளித்துப் பாய்ந்தது..! அப்போது தான் உண்மையான நிலை எனக்குப் புரிந்தது. உடனே அக்கவுண்ட் பிரிவுக்குச் சென்று   பஞ்சையும்

வலி..!

படம்
    இன்று எப்படியாவது வீட்டிற்குப்போக வேண்டும்.   அதேவேளை நேற்றைய சம்பவம் பல சாதாரண வேலைகளைச் சிரமமாக்கியது..! இடக்கையில் காயம் என்றால் அடிப்படை வேலைகளே செய்ய முடியாது. ஆனால் நேற்று இரவு கட்டிய மருந்தோடு, கைக்கு ஒரு பொலித்தீன் பையைச் சுற்றிக்கொண்டே ஒவ்வொரு வேலையையும் குளியலறையில் செய்தேன். உள் உடுப்புக்களைத் தோய்க்கும்போது கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஒருவாறு சமாளித்தக்கொண்டு, இரவு வாங்கிய பணிஸ்களின் மிச்சத்தை காலை உணவாகச் சாப்பிட்டுவிட்டு வைத்திய நண்பர் சொன்ன மருந்துகளைப்போட்டுக்கொண்டு எனது அலுவலகக் கடமைகளைச் செய்தேன். இன்று, தலைமையக முகாமைத்துவக் கூட்டம் நடந்தது. பிந்தித்தொடங்கி, முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. ஏறக்குறைய மதியம் 12.45 வரை அதில் கலந்துவிட்டு, பயணத்தைத் தொடங்கினேன். வழமைபோல் மதியம் சாப்பிடாமல், முன்னாலுள்ள கடையில் பொல்ரொட்டிகளை வாங்கிக்கொண்டு, பஸ்ஸில் புறப்பட்டேன். இன்று பஸ்ஸில் ஏறிக்கொஞ்ச நேரத்தில் இருக்க சீற் கிடைத்தது..! இருந்தாலும் பயணம் கஷ்டமாக இருந்தது. கைவிரலில் பண்டேஜ் கட்டியிருந்தாலும், கட்டு தாங்கப்படுவதால் அதில் இருந்து இரத்தம் கசிந்துகொண்டே இருந்தது

மனித எதிர்பார்ப்பு..!

படம்
  பெண் குழந்தைகைப் பெற்ற பெற்றோரைப் பார்த்து சமூகம் சொல்லும் ஒரு கருத்து, வாரிசு இல்லை என்பதும், இறந்தால் கொள்ளி போட ஒரு ஆண் இல்லை என்பதும்..! இந்த வார்த்தைகளை, எனக்கும் கேட்கும்போது மனம் வலிக்கும். இந்தப்பூமியில் யாரும் நினைத்த மாதிரி வாழ்க்கை அமையும் என்று யாராலும் அடித்துக்கூற முடியாது. நாம் என்ன தான் முயன்றாலும் நடக்க வேண்டியது தான் நடக்கும். ஒரு சின்னக் குறைபாடு போதும், ஒரு குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்க..! நான் எனது தந்தைக்கு கொள்ளி வைக்க முடியவில்லை..! நாம் பிறந்த போது, 3 ஆண்களும் 1 பெண்ணும் என இருந்தபோது, பலரும்   சொன்னார்கள் அவர்களுக்கு என்ன..? ஆண்கள் இருக்கின்றார்கள் என்று..! ஆனால் கடைசியில் முக்கியமான கட்டங்களில் நாம் ஒன்றாக இருக்க முடியவில்லை. அம்மாவும் தங்கையுமே கஷ்டப்பட்டார்கள்..! அப்பா இறந்த போது, நான் கொழும்பில் இருந்தாலும் அந்நேரம் தலதா மாளிகைக்குண்டு வெடிப்பு நடந்ததால் விமானத்திற்கான கிளியரன்ஸ் (Clearance) தரமுடியாது என்றும் இரண்டு கிழமைகளுக்கு பிறகு, ஏதோ இறைவன் புண்ணியத்தால் வந்தது..! ஆண் பிள்ளைகள் இருந்தும், ஒரு ஆண் பிள்ளையால் கூடக்கொள்ளி வைக்க முடியவில்லை. இ

ஹிட் லிஸ்ட்..!

படம்
    அண்மையில் சிறுகவனக்குறைவால் ஏற்பட்ட சம்பவம் ஒன்றால் கைவிரலில் காயம் ஏற்பட்டது. அந்த வலி அதிகமாக முதல்,  யாழ்வந்து, மனைவி பிள்ளைகளின் உதவியுடன் மருந்தைக்கட்டியவுடன் தான், சற்று நிம்மதி பிறந்தது. அப்படியே கதிரையில் உட்கார்ந்தபடி ஒரு படத்தைத் தொலைக்காட்சியில் போட்டுப்பார்த்தேன். அந்தப்படம் தான் ஹிட் லிஸ்ட். படம் தொடங்கியது முதல் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதையும், பல திருப்பங்களுடன் பயணித்தது. கொரோனா காலத்தில் நடந்ததாகக் கதை சொல்லப்பட்டாலும், அதில் பல விடயங்கள் பல இடங்களில் நடந்த விடயங்களே..! அந்த விடயங்களைத் தொகுத்து, ஒரு அறிமுகமில்லாத விஜய் கனிஷ்கா என்ற ஒரு புது நாயகனை வைத்து,   ஜயர் பையன் போல கொலை என்றால் நடுங்கக்கூடிய அந்த இளைஞனை ஒரு ஆயுதமாக மாற்ற, அவனின் தாயையும், தங்கையையும் கடத்தி, ஒரு குறித்த இடத்தில் அடைத்து, அவர்களைக் கொடுமைப்படுத்துவதன் ஊடாக அந்த மென்மையான பையனை கொலைசெய்ய வைக்கின்றான் திரையில் தெரியும் ஒரு முகமூடி மனிதன்..! அவனைக்கண்டு பிடிக்க துப்பாக்கியுடன் அலைவதாக சரத்குமார் நடித்துள்ளார். இறுதியில் கொலைக்கான காரணத்தைப் பார்க்க, ஒரு   குட

சிங்கப்பூர் சலூன்..!

படம்
  ஆர்.ஜே.பாலாஜியின் படங்கள் என்றால் அதில் நிறையக்கருத்துக்கள் இருக்கும். அதை நிரூபிக்கும் வகையில் இந்தப்படமும் இருக்கின்றது..! பாடசாலையில் படிக்கும்   போதே சுன்னத் மற்றும் மொட்டை போட்டதற்காக வெறுக்கும் ஒருவர், பின்னர் அவர் செய்யும் வேலைகளைப்பார்த்து மயங்கி, அவர் பின்னே சென்று, சலூன் வேலையைப் பழகி, யாரும் குறை சொல்லக்கூடாது என்பதற்காக பொறியியலும் படித்து, ஆனால் வேலைக்கு சலூன் நடத்துவதே..! என்ற கதைக்களமே புதுசு. சாதிகளால் வகுக்கப்பட்ட தொழில்கள், தற்போது விருப்பத்தின் அடிப்படையில் அமைந்தால், இன்னும் சிறப்பாகவும், உலக அளவிலும் செய்து சாதிக்க முடியும் என்பதைக் காட்ட முயற்சித்துள்ளார்கள்..! இனிமேல் காலத்தில் ஒரு தொழிலைச் செய்யும் திறனே வெற்றியைக்கொடுக்கும். அடிப்படைக்கல்வி, ஆரம்பக்கல்வி, இரண்டாம் நிலைக்கல்வி, மூன்றாம் நிலைக்கல்வி எனக்கல்வி எல்லோருக்கும் தேவையானது என்று கருதுவது மடமைத்தனம்.   தற்போது பல இடங்களில் வீட்டுக்கல்விகளே வந்துகொண்டிருக்கின்றன..! கோவிலில் பூஜை செய்ய பிரமாணர்கள் தேவையில்லை என்பதை நிரூபிக்கவும், சைவ உணவை உண்டு, சமய ஆசாரங்களை முறையாகக் கடைப்பிடித்து, அதற்குரிய

ரசவாதி..!

படம்
    இன்று அரைநேரத்தோடு ஊருக்கு வெளிக்கிட்டதால் சற்று நேரம் அதிகமாக இருந்தது. பல நாட்களாகப் பார்க்க நினைத்த படங்களில் இந்தப்படமும்  ஒன்று. அதனால் பார்த்தேன். படம் என்னை முழுமையாக இழுத்துக்கொண்டது..! எனக்கு ஒரு படம் ஏதோவோர் விதத்தில் தொடர்ந்து பார்க்க வைத்தால், அந்தப்படம் கண்டிப்பாக விமர்சன ரீதியாக நல்ல படமாக அமையும். சில நேரங்களில் எமது மக்களின் பிடித்த நடிகர்கள் இல்லை என்பதால் வர்த்தக ரீதியில் தோல்வியடைந்திருக்கலாம். இந்தப்படத்தின் கதையே சற்று, உளவியலை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை, சிறுவயதில் கானும் சூழல் அதனை ஒரு வித பிறழ்வான மனநிலைகொண்ட மனிதனாகவும், பொலீஸ்   அதிகாரியாகவும் வரத்தூண்டுகின்றது. அதேவேளை அவனது மனநிலையில் ஏற்படும் தாக்கம் அவனை மிருகமாக மாற்றுகின்றது. யாரும் சந்தோசமாக இருப்பது அவனுக்குப் பிடிக்காமல் போகின்றது.   இப்படியான நிலையில் அந்த மிருகத்திடம் மாட்டும், நாயகன்,   கைதி பட முக்கிய வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ், அவனிடம் இருந்து விடுபட்டு வரப்போராடுவது தான் கதை மையம். அவர் சிறப்பாக நடித்துள்ளார். அவரது தனித்துவமான குரல் தெளிவில்லாமல் இருப்பது எனக்கு குறையாக

ஊழியர் பற்றாக்குறை..!

படம்
    தற்போதைய காலத்தில் நிறுவனம் பரபரப்பாக இயங்கவேண்டிய சூழலில் இருக்கின்றது..!  நேற்று யாழில் இருந்து வரும்போதே, சிக்கல்கள் ஆரம்பித்துவிட்டன..! ஒரு ஊழியர் தனது பாட்டி இறந்துவிட்டார் என்பதால் தன்னால்  வரமுடியாது என்றும் லீவு கேட்டும் இருந்தார்.  அவருக்கு ஒருவாறு அனுமதி வழங்க, காலையில் இன்னோர் ஊழியர் சுகவீனம் என்று லீவு கேட்க, அவருக்கும்  அனுமதிக்க, இன்னோருவர்  எனது பதிவாளரிடம் லீவு சுகவீன லீவு பெற்று நிற்க, இன்றைய வேலைகளை எமது கல்விசார் ஊழியர்கள் ஒருவாறு சமாளித்து, செய்துமுடித்தார்கள். இன்று தலைமையகத்தில் முகாமைத்துவ உதவியாளர்களின் புது நியமனம் தொடர்பாகத் தகவல்   ஒன்று கிடைத்தது. எமது ஊழியர்கள் எமக்கும் ஒரு முகாமைத்துவ உதவியாளர் வேண்டும் என்று கோரினார்கள். நானும், அவர்களின் ஆசைக்காக தலைமையகத்திலுள்ள முக்கிய அதிகாரிகளுக்கு போன் எடுத்தால்   சரியான பதில்   இல்லை. திரும்ப மாலையும் எடுத்துவிட்டு, விட்டுவிட்டேன். இடையில் மாணவர்கள் தமது ஒப்படைப்புள்ளிகளில் இருக்கும் குறைகளை நிவர்த்திப்படுத்தச் சொல்ல அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, மரண வீட்டிற்கும் போய்விட்டு வர, பாதுகாப்பு ஊழியர்கள

காவல் பணி தொடங்கல்..!

படம்
  நேற்று எமது காவல் பணியாளர்கள் தமது கடமைக்கு வராமல் பணியைப் புறக்கணித்தார்கள்..! இன்று அதனை இடைநிறுத்தி தமது பணியை மேற்கொண்டார்கள்..! இதனால் நான் கொஞ்சம் நிம்மதியடைய   முடிந்தது. பொதுவாகப் பல நடைமுறைகள் ஒவ்வொரு நிறுவனங்களிலும் அந்த அந்தச் சூழலுக்கு ஏற்ப பின்பற்றப்படுகின்றன..!   ஆனால் அவை சரியானதா என்ற கேள்வி எப்போதும் எழுப்ப வேண்டும். குறிப்பாகத்தவறுகள் இருந்தால் அவற்றைத் திருத்திக்கொள்ளலாம். சரியாக நடந்தால், அவ்வாறே தொடர்ந்து செல்லலாம். இங்கு சில விடயங்களில் சரியான தீர்மானங்கள் எடுக்காமல் அவரவர்கள் தமது சுய நலன்களுக்காக எடுக்கும் தீர்மானங்கள், இறுதியில் சரியான நிலைப்பாட்டில் இருப்பவருக்கே அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன..! அரச நிறுவனங்களில் கடைப்பிடிக்கவேண்டிய ஸ்தாபன விதிக்கோவைகளை சரியாக கடைப்பிடிப்பதுடன், அங்குள்ள ஊழியர்களுக்கும் அவற்றின் தன்மைகளைப் புரியவைக்க வேண்டும். சிலவேளைகளில் தமது சுயநலன்களுக்காக ஊழியர்களை பயன்படுத்திய உயர் அதிகாரிகளை சரியான முறையில் கவனித்து, காலத்திற்கேற்ப இடமாற்றங்களைச் செய்து மக்களின் சேவையில் பாதிப்புக்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களு

முடிவு வந்தது..!

படம்
  என்னைப்பொறுத்தவரை நான் முயற்சியை மட்டும் கொடுக்க விரும்புவேன். பலனைப்பற்றி அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. என்னால் இயன்ற முயற்சியை கொடுக்க, எந்தக்கஷ்டம் வந்தாலும், எந்த நட்டம் வந்தாலும் தவறுவது இல்லை. சில சமயம், அந்த முயற்சிக்கான பலனை அறுவடை செய்தீர்களா என என்னை வினாவினால், அதற்கான பதிலை நம்பிக்கையுடன் கூறமுடியாது..! நான் நல்லவன் என்பதை மாத்திரமே சொல்ல முடியும். எனக்கான முடிவுகளைத் தருபவர்கள் அப்படியானவர்களாக இருக்க வேண்டும் என்று அசைப்படலாமே தவிர உண்மையாக எப்படியிருக்கின்றார்களோ அவர்களே அறிவர். அல்லது இறைவனே அறிவார்..!   யாழில் இருந்து இடமாற்றம் பெற, நான் கேட்ட கோரிக்கையின் தீர்ப்பு இன்று 185ஆவது கல்விசார் மத்திய கூட்டத்தில் வெளிவந்தது..! அந்த முடிவு என்னைக் கவலைப்படுத்தவில்லை. மாறாக சந்தோசப்படுத்தவும் இல்லை. இறைவனின் விருப்பம் இப்படியாக இருக்கின்றது என்பதை மட்டும் உணரவைத்தது..! இயற்கையும் அதற்கு அனுகூலமாக இருப்பது புரிந்தது..! இருந்தாலும் நேர்மைக்கும், உண்மைக்கும் ஏன் மதிப்பு குறைகின்றது..? என்ற கேள்வி மட்டும் ஏழாமல் இல்லை.   ஒரு காரியம் நடக்கின்றது என்றால் அதற்குப

பாதுகாப்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு..!

படம்
    எமது நிறுவனத்தில் இரண்டு சேவைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கான ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒரு தனியாரிடம் ஏலம் மூலம் வழங்கப்பட்டள்ளது. இந்த தனியார் நிறுவனத்தின்  ஏலக்கோரிக்கை அரசிற்கு இலாபமாகவும், பணியாளர்களுக்கு பாதிப்பாகவும் அமைந்தததால், ஒப்பந்தம் மாறும்போது, பலர் சேவையைவிட்டு விலத்தினார்கள். வேறுவழியில்லாமல் சில ஊழியர்கள் புதிய நிறுவனத்தில் இணைந்து செயற்பட தயக்கத்துடன் சம்மதித்தார்கள்..! நானும் அவர்களுக்கு இறுக்கமாகச் சொல்லிவிட்டேன் உங்களுடைய சம்பளப் பிரச்சனைகளை என்னுடன் கதைக்கக்கூடாது என்றும், உங்கள் நிறுவன அல்லது கம்பனியின் தலைவருடன் கதையுங்கள்  என்றும்..! அதனால் கடந்த சில மாதங்கள் என்னுடன் அவர்களது சம்பளப்பிரச்சனைகளை அவர்கள் கதைக்கவில்லை. அதேநேரம் கம்பனியும் அவர்களுக்குரிய சம்பளத்தை சரியான தருணத்தில் கொடுப்பதில்லை. நேற்று, ஒரு மரணச்சடங்கிற்கு சென்றுவிட்டுவரும்போது இந்தச்சிக்கல் எனக்குச் சொல்லப்பட்டது..! நான் அதற்கான தீர்வுகளை எட்ட செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளையும் செய்தேன். எனது பணிப்பாளர் நாயகத்துடனும் கதைத்தேன். அவர்

பஸ் நடத்துனர்..!

படம்
  இந்தக்கிழமை யாழ்ப்பாணம் போகாமல் நிற்க முதலில் தீர்மானித்தாலும் பின்னர் வெள்ளிக்கிழமை நெருங்க நெருங்க மனம் மாறி இறுதியில் போவோம் என்ற எண்ணம் வலுத்துவிட்டது. வழமைபோல் கடமைகளைச்செய்து, கன்ரீனிலும் சமோசா பார்சல் ஒன்றையும் எடுத்துக்கொண்டு, மாலைக்குறுலீவையும் எடுத்துக்கொண்டு பஸ் தரிப்பு நிலையம் வந்து பஸ்ஸிற்கு காத்திருந்தேன். வழமையாக எனது நேரக்கணிப்பீடு தவறுவது கிடையாது. நான் கணிக்கும் நேரத்திற்கு அமைவாக பஸ் வந்துசேர்ந்துவிடும். என்னுடன் அந்த பஸ் தரிப்பு நிலையத்தில் மேலும் சில மனிதர்களும் காத்திருந்தனர்.   அவர்கள் பஸ்ஸை எதிர்பார்க்கும் அதேவேளை அந்தப்பகுதியில் உள்ள ஒரு கோவிலைப்பற்றியும், அதன் சக்திபற்றியும் பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். அதிலும் குறிப்பாக நம்பிக்கையோடு, அந்தக்கோவிலை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது போல் பேசிக்கொண்டார்கள். அவர்களில் ஒரு வாலிபன் சாவகச்சேரியில் இருந்து,   அந்தக்கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு எம்முடன் யாழ்வரக் காத்திருந்தார்..! பஸ் சற்றுத்தாமதத்துடன் வந்தது. வழமைபோல் கூட்டம் அதிகம். அதுமாத்திரமன்றி, இந்த பஸ் வழமையான பஸ்ஸைவிட சின்னது..! சரியாக இருப

கருடன்..!

படம்
  சில கதைகள் வழமையான   பாணியில் இருந்தாலும்   பார்க்கும் போது ஏதோவோர் விதத்தில் ஈர்க்கும். அப்படிப்பட்ட படமாகவே இந்தப்படம் உள்ளது..! படத்தில் நாயகன் சூரி தான் என்றாலும் அவரைக்கொண்டு சென்ற விதம் புதுமையாக இருந்தது. வழமையாக வரும் கோவில் பிரச்சனைகள் போன்ற கதை என்றாலும் வித்தியாசமாக சிந்தித்து காட்சிப்படுத்தியுள்ளார்கள். ஆக்ரோசமாக சூரி கதைக்கும் காட்சிகளிலும் உண்மை பேசும் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார்..! அதுமாத்திரமன்றி, சண்டைக்காட்சிகளில் அவரின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது..!   சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி போன்ற ஹீரோக்கள் இருந்தாலும் சூரியின் நடிப்பு கச்சிதமாக இருந்ததே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். நாய் மாதிரி இருந்த ஒரு அநாதையை மனிதனாக மதித்து கௌரவித்த ஒருவனை, விசுவாசத்திற்காக அவன்சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, இறுதியில் தனது போக்கு பிழையென்பதை உணர்ந்து, மனிதனாக மாறியிருக்கும் ஒரு மிருகத்தை கொல்லவேண்டிய சூழலுக்குள், அந்த விசுவாசி மாட்டுவதே கதை..! வழமை போல் சசிக்குமார், சமுத்திரக்கனி மற்றும் உன்னி முகுந்தன் போன்றவர்களின் நடிப்பு பாரா

எமது நிறுவனக் கார் ..!

படம்
    நீண்டகாலமாகத் திருகோணமலை உயர்தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கார் பாவனையில் இருக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் பணிப்பாளர்கள் தமக்கான கார்களை தனியாக வைத்திருப்பதுடன், அதற்கான சலுகைகளையும் பெற்றுக்கொள்வதே..! இருந்த போதிலும், அந்தக்கார் அலுவலக பாவனைகளுக்குப் பயன்படுத்த முடியும். அதற்கும் நிரந்தர சாரதி இல்லாத காரணத்தால், சாத்தியப்படாமல் செல்ல, பல மாதங்களாக அந்தக்கார் அழகுக்கு மட்டும் எமது வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..! நான் வந்து 6 மாதத்திற்கு மேலாக   அதனைத் திருத்த முயன்றும், அதற்கான   மேலிட அனுமதிகள் கிடைக்காத காரணத்தால், அதனைச் செய்யமுடியவில்லை. சும்மா ஒரு அரச சொத்தைப் பயன்படுத்தாமல் வீணடிப்பது என்பதும் மக்களுக்குச் செய்யும் துரோகம்..! மக்கள் பணம் விரயமாவதாகவே நான் கருதுவேன். எனது நிறுவன விடயங்கள் தொடர்பான கூட்டத்தில், அந்தக்காரை எடுத்து, வேறு தேவைப்படும் ஒரு நிறுவனத்திற்கு வழங்கும்படி கோரியிருந்தேன்.   கடந்த சில வருடங்களுக்கு முன்னரே முன்னைநாள் பணிப்பாளரும் இதே கோரிக்கையை அப்போதே முன்வைத்திருந்தார். என்ன காரணமோ தெரியவில்லை..! அந்தக்கார் பயன்படுத்தவும் இல

பொய் கூறல்..!

படம்
    நான் அண்மைய காலங்களில் பொய் சொல்லுவதைத் தவிர்த்து வந்தேன். என்னால் இயன்றவரை அவ்வாறே தொடர்ந்து இருப்பதற்காக முயன்று வந்தேன். சில சமயம், ஏதாவது சிக்கலான சூழல் வரும்போது, ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு பேசாமல் போயிருக்கலாம் எனத்தோன்றும். இருந்தாலும் எவ்வாறு அந்தப்பொய்யை சொல்லாது விடலாம் என யோசிப்பேன்..! இன்று எனது நிறுவனத்திற்கு முன்னாலுள்ள ஒரு பிரபல வியாபாரி என்னிடம் ஒரு உதவி கேட்டார். “நான் என்ன..?” என்று கேட்க, தான் ஒரு லோன் எடுக்கவேண்டும். அதற்கு ஒருவர் சைன் பண்ண வேண்டும்.   “நீங்கள் செய்வீர்களா..?” என்றார்.. ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன்னர், இவ்வாறான சூழ்நிலையில் எமது ஊழியர் ஒருவருக்கு லோன் எடுக்க கையெழுத்துப்போட்டேன். இறுதியில் அவர் செலுத்தும்வரை வங்கி எனக்கு கடிதங்கள் மேல் கடிதங்கள் போட்டு எரிச்சலூட்டின..! அந்த நபரை எப்படியாவது அந்த லோனைக்கட்டி முடிக்கச்செய்து, அதற்கு கொஞ்சப்பணவுதவியும் செய்து, அதனைத் திரும்பப்பெற பல மாதங்கள் இழுத்தடித்து, கடைசியில், அவரை வைத்து கூலியாக சில வேலைகளைச்செய்து, அந்தப்பணத்தைப்பெற்று முடித்தேன். இந்த அனுபவத்திற்குப் பிறகு திருமலையில் என்னிடம்

நட்பின் துரோகம்..!

படம்
    பொதுவாக கற்பு என்பதை எம்மவர்கள் பெண்களிடம் மட்டுமே எதிர்பார்க்கின்றார்கள். அது தப்பு. அதனை ஆண்களிடமும் எதிர்பார்க்க வேண்டும். அது மாத்திரமன்றி, கணவன் -மனைவி பந்ததிற்கும் கற்பு உண்டு..! நட்பிற்கும் கற்புண்டு..! காதலிற்கும் கற்பு உண்டு..! இங்கு நான் சொல்லும் கற்பு என்பது ஒருவரை ஒருவர் மதிப்பதுடன், இவ்வாறான தொடர்பிலுள்ள ஒருவர் இன்னொருவரைக் கேவலப்படுத்தினால் அல்லது அந்த தொடர்பில் உண்மையில்லாமல் இருந்தால் அங்கே கற்பு இருக்காது. என்னைப்பொறுத்தவரை கற்பு என்பது உடல் சார்ந்த ஒரு விடயம் கிடையாது. மனமும், அறிவும், ஒழுக்கமும், உண்மையும் சார்ந்த விடயம். ஒருவர் நம்பிக்கையை இன்னொருவர் கெடுத்தால் அங்கே கற்பு இருக்காது. இது தான் நான் கற்பு என்பதற்கு எடுத்துக்கொள்ளும் விளக்கம். எனது நிறுவனத்தில் எத்தனையோ மாணவர்கள் படித்து நல்ல நிலைமைகளில் இருக்கின்றார்கள். இவர்களில் எத்தனையோ விதமான நட்புக்கள், காதல்கள், துரோகங்கள், பிரிவுகள் போன்றவற்றை பார்த்தும், வியந்தும் மற்றும் வெறுத்தும் கடந்து வந்துள்ளேன்..! காலங்கள் மாறிவருகின்ற வேளை பிள்ளைகளும் மாறி வருகின்றார்கள்..! தற்போது காதலிப்பது, ஒருவருடன்

காலம் கடக்க முன்னர் வந்த ஞானம்..!

படம்
  நேற்று எனது நண்பர் ஒருவர் எனது வீட்டிற்கு வந்து, அவரது மதியச்சாப்பாட்டை என்னுடைய சாப்பாட்டுடன் பங்கிட்டு உண்டு, வாழ்க்கையில் சில முடிவுகள் எடுக்கும் சூழல்களும், அவை எமது கட்டுப்பாட்டிற்கு அப்பால் சில காரணிகளால் நடாத்தப்படுவதாகவும் உணர்ந்தோம்..! இருந்தாலும் சில விடயங்களில் நீதி, நியாயங்கள் பார்த்தால் தற்போதைய அவசர உலகில் எம்மையாரும் மதிக்க முடியாத, கண்டுக்க முடியாத சூழலுக்குள் செல்ல வேண்டியிருக்கும். எனது வீட்டுச்சூழல் என்னை ஒரு வித வாழ்க்கைக்குள் பழக்கப்படுத்திவிட்டது. அதைத்தாண்டி சிந்தித்தால், பல சிக்கல்கள் ஏற்படும் என்பதற்காக பல நாட்கள் அமைதியாகவே இருந்துவிட்டேன். யாரையும் குழப்பக்கூடாது. யாருடைய மனங்களையும் இயன்றவரை காயப்படுத்தக்கூடாது என நினைத்து, எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல தியாகங்களைச் செய்துவிட்டேன். அதன் முக்கிய நோக்கம், “எனது கடமை..!”   என்று எடுத்துக்கொண்டேன். இப்படியாக வாழ்வு நகர்கையில், மகளின் வந்த பரீட்சை முடிவுகளையும், அதற்கான காரணங்களையும் ஆராயும்போது, எமது வாழ்வியல் முறைகளிலும் மாற்றங்கள் செய்யவேண்டி வருகின்றது..! சின்ன வயதிலே பொறுப்புக்களைக் கொடுப்பதும், தன்

பெரிய செலவு..!

படம்
  2006இல் திருகோணமலையில் எடுத்த எனது மோட்டர் பைக் கடந்த கிழமை செய்த பகீஸ்கரிப்பால் என்னால் பிரயாணத்தை இலகுவாகச் செய்யமுடியவில்லை..!   நேற்று இரவு அங்கிருந்து வந்ததும் மோட்டார் பைக்கைத் திருத்தும் கடையில் கொண்டுபோய் விட்டேன். அதற்கு அவர்கள் பெரிய பிரச்சனைபோல் இருக்கின்றது..! கடை பூட்டப்போகின்றோம். நாளை காலை வேளைக்கு வாருங்கள், பார்ப்போம் என்றார்கள். அதேபோல் இன்று காலை சொன்னமாதிரிச்சென்றேன். எஞ்சினின் சில பகுதிகளைக் கழட்டி வைத்துவிட்டு இவையெல்லாம் மாற்ற வேண்டும் என்றார்கள். வேறு வழியில்லையா என்று கேட்கும் போது, செய்துபோடலாம். அதனால் ரூபா.2000 அல்லது ரூபா.3000 குறையக்கூடிய வழியுண்டு. ஆனால், ஒரு மாதத்திற்கு நீங்கள் கவனமாக வண்டியை ஓட்டவேண்டும் என்று நிபந்தனை போட்டார்கள். புதிதாக வாங்கினால் இந்தப்பிரச்சனையில்லை   என்றார்கள். சரி, பரவாயில்லை, அந்தப்பகுதிக்குரிய பொருளைப்   புதிதாக வாங்கிப்பூட்டச்சொன்னேன். அவ்வாறே திருத்தி, மாலை 5.45இற்கு என்னை அழைத்தார்கள். செலவு மொத்தமாக   ரூபா.37,000 இற்கு முடித்தார்கள்..! நான் கேட்டதிற்கு இணங்க ரூபா.1000 ஐ குறைத்துவிட்டார்கள். சரி, செலவு வந்தால் செ