இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நன்றி கூறல்..!

படம்
  நாம் நினைக்காத பல விடயங்கள் நம் வாழ்க்கையில் வந்து சென்றுவிடும்..! அப்படியான ஒரு வாழ்க்கை கடந்த 12 ஆண்டுகள் வந்து சென்றது..! குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் என்பார்கள். அது போல்   எனக்கும் சில விடயங்கள்   அமைகின்றன..! கடந்த ஒரு வருடமாக பல விதமான மனக்குமுறல்களையும், சந்தோசங்களையும், சங்கடங்களையும் கடக்க வேண்டும் என்பதற்காக, இப்படியான Bloger பக்கங்களில் எழுதிவந்தேன்..! ஒரு வருடத்தில் 365 நாட்கள். லீப் வருடமென்றால் 366.   இந்தவருடம் இதுவரை 365 விடயங்கள் தொடர்பாக எழுதிவிட்டேன். இன்று 366 ஆவதாக என்ன எழுத என்று யோசிக்கும் போது, இன்று நடந்த   ”நன்றி   கூறும்..” நிகழ்வு தான் எண்ணத்தில் வந்தது..! நான் எனது   நன்றிகளை எமது ஊழியர்களுக்குத் தெரிவித்து, என்னில் இருக்கும்   குறைகளைக் கேட்கும்போது அவர்கள் கூறிய விடயங்கள் பெரும்பாலும் நல்லதாகவே இருந்தன..! இருந்தாலும் சில விடயங்களில் இன்னும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து, இன்னும் சிறந்த நிர்வாகியாக   வர ஆலோசனை வழங்கினார்கள்.   அதற்கு நன்றி கூறுவதுடன் அவற்றை இயன்றவரை கடைப்பிடிக்க முனைவேன். தவறுகளைத் தவிர்க்கவும், சரிகளைத் தொடரவும் 2024

இறுகப் பற்று..!

படம்
    மனிதன் விலங்காக இருந்தபோது இருந்த நிம்மதியை, அறிவைப் பெற்றபோது இழந்துவிட்டான்..! இங்கு அறிவு என்பது எமது கல்வித்திட்டங்களும், சமூகமும் வழங்கும் அறிவைச் சொல்கின்றேன். உண்மையான அறிவு இருந்தால் வாழ்க்கை மிக இலகுவாக இருக்கும். ஒரு குடும்பத்தில் இருக்கும் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம் இந்த அறிவுகளில் இருக்கும் வேறுபட்ட நிலைகள்..! இருவரும் ஒரே மொழியைப் பேசினாலும், புரிதல் ஏற்படாமைக்கு, அதைவிட இன்னும் முக்கியமான, உணர்வு ரீதியிலான புரிந்துணர்வில் இருக்கும் குறைபாடே..! மூன்று ஜோடிகளும், அவர்களுக்குள் ஏற்படும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் என்று படம் ஒரு பாடமாக நகர்கின்றது..! எனக்கு இவ்வாறான பாடங்கள் மிகவும் பிடிக்கும். இதற்காக தான் நான் அலைகின்றேன்..! எந்தப் பிரச்சனை என்றாலும் அதனை நன்கு புரிந்து, அதற்கான தீர்வை வழங்க, சரியான வழிமுறைகளைப் பின்பற்ற, இந்த மாதிரியான படங்களில் இருந்து கிடைக்கும் அறிவு உதவும். இந்தப்படத்தில் ஒரு பெரிய ஆச்சரியத்தை, இந்தக்கதை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது..! எனது வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களும் இந்தப்படத்திற்குள

சொன்ன வார்த்தை பலித்தது..!

படம்
  திருகோணமலைக்கு போக நான் சம்மதித்ததற்கு உரிய காரணங்களை எமது நிறுவன ஊழியர்கள் சிலருக்குத் இன்று தெரியப்படுத்தினேன். இன்னும் கடிதம் வரவில்லை. வந்ததன் பின்னரே உண்மையான நிலை புரியும். இருந்தாலும் கடந்த காலங்களோடு இன்று வரை நடக்கும் சம்பவங்களை நினைக்க ஒரே ஆச்சரியமாக இருக்கின்றது. 2009 இல் யுத்தம் முடிந்த காரணத்தாலும், வாடகை வீட்டில் நான் இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட சில அசௌகரியங்களாலும், எனது அலுவலகத் தலைமைக்கும் எனக்கும் இடையேயான சில முரண்பாடுகளாலும், யாழ் உயர்தொழில்நுட்ப நிறுவனத்திற்குச் செல்ல இடமாற்ற விண்ணப்பத்தைப் போட்டேன். விளைவு 2010 இலே யாழ் வரக்கூடியதாக நிலமை இருந்தது. எனக்குப் பதிலாக யாழில் இருந்தும் ஒருவர் சேவை மூப்பு அடிப்படையில் இடமாற்றப்பட்டிருந்தார்.   இதற்கு நான் என்ன செய்ய முடியும்..? எல்லோரும் வேலை வேண்டும் என்பதால் கிடைக்கும் இடத்திற்குச் செல்வதும், பின்னர் வாய்ப்பு வந்தால் சொந்த இடங்களுக்குத் திரும்புவதும் வழமை என்ற விதத்தில் தான் செயற்பட்டேன்.   ஆனால் யாழில் எனக்குப்பதிலாக இடமாற்றப்பட்டவர் 10 வருடங்களுக்கு மேல் சேவையாற்றியவர் என்ற அடிப்படையிலே இடமாற்றம் நடந்துள்ளத

அடுத்த வாழ்க்கை..!

படம்
  சில நாட்கள் வாழ்க்கையில்   திருப்பு முனைகளை ஏற்படுத்தும்..! அந்த வகையில் இன்றைய நாள் எனக்கு ஒரு முக்கிய நாள். ஆம். இன்று தான் அடுத்த ஒரு வாழ்க்கைக்கு இறைவன் வழி விட்ட நாள். இன்று மதியம் எனது இடமாற்றத்திற்கான கடிதத்தை பார்த்து, அதனை உறுதிப்படுத்திக்கொண்டு, மற்றவர்களுக்கும் அனுப்பினேன். அத்துடன் நிறைய வேலைகள் முடிக்கவேண்டியிருந்ததால் நிமிர முடியவில்லை. மாலை ஒரு சிறுவர் கழக நிகழ்வில் பேச அழைத்திருந்தார்கள். முதலே நிச்சயப்படுத்திக் கொண்டதால், அதனைத் தவிர்க்க முடியவில்லை. வெறுத்துக்கொண்டே சென்றேன். ஆனால் அங்கு எமது மக்களில் மிகவும் பிரபலமான இரண்டு சாதனைத் தாய்களை கண்டு மிரண்டேன். அவர்களுடன் கதைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தன.   எனது பேச்சில் அவர்களை வாழ்த்தி, அவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க இறைவனை வேண்டியதுடன், அங்குள்ள பிள்ளைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி, அவர்களின் சேவைகளுக்கு மக்களின் சார்பாக நன்றி கூறியதுடன், வருங்காலத்தில் அந்தச்சிறார்கள் சிறந்த மனிதர்களாக வர வாழ்த்தி, எனது உரையை முடித்தேன். இரண்டு தாய்களும் எனது பேச்சைப் பாராட்டினார்கள்..! அது மனதிற்கு இத

மீண்டும் இடமாற்றம்..!

படம்
  அண்மையில் இடமாற்றம் தொடர்பாக நடந்த கூட்டத்தில் இடமாற்றம் கேட்ட பலரின் இடமாற்றங்கள் நிறுத்தப்பட்டன. அதனால் எனக்கு வரக்காத்திருந்த இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அம்மா சொன்னது பலித்துவிட்டது என நினைத்தேன். பின்னர், பதவி முன்னேற்றம் தொடர்பான நேர்முகப்பரீட்சை நடந்தது. அப்போது எனது நிலையை ஒத்த பதவிக்கான நேர்முகத்தேர்வும் நடந்தது. அதில் யாராவது ஒருவர் எனது இடத்திற்கு வந்தால் நான் இடமாற்றம் பெறவேண்டிய சூழல் வரும்.   அதுமாத்திரமன்றி, இடமாற்றத்தில் தவறுகள் இருந்தால் மேன்முறையீடு (Appeal) செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. எனது இடத்திற்கான கோரிக்கை வலிப்பெற்றது. அந்த வகையில், நான் எனது சேவைக்காலத்தை முடித்த படியால் வெளியேறத்தயாரானேன். எனது நிலைப்பாட்டை அறிந்து,   பணிப்பாளர் நாயகம் கேட்டதால், என்னால் எந்த மறுப்பும் சொல்ல முடியவில்லை. இன்று காலை எனது   வேலையும், வீட்டிலுள்ள நடைமுறைகள் தொடர்பாகவும் மனைவி, பிள்ளைகளிடம் குறைப்பட்டேன்..! ஏதோ வெறுப்பான சூழலில் இருப்பது போல் உணர்வதாகவும், ஏதாவது செய்து இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும் அவர்களுடன் கதைத்தேன். சிறிது நேரத்தில் நல்ல மழை வந

பணிப்பாளர் நாயகத்தின் சங்கடம்..!

படம்
  இன்று பதுளை பணிப்பாளர் எனக்கு போன் எடுத்து பணிப்பாளர் நாயகம் எடுத்த முடிவு தொடர்பாக “ஏதாவது குறையாக நினைக்கின்றீர்களா..?” எனக்கேட்டார். எனது நண்பர் என்ற வகையில் என்னுடன் அவர் கதைக்கச் சொன்னதாகவும் கூறினார். திருகோணமலைப் பணிப்பாளரின் சூழலைப் புரிந்துகொண்டு நடக்கக் கேட்டுக்கொண்டார். இவ்வாறாக நேற்று பணிப்பாளர் நாயகம் கேட்ட விடயத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக கதைத்தார். “நான் முன்பே சொல்லி விட்டேன்..” எனது நிலைப்பாட்டை..! பணிப்பாளர் நாயகம் எங்கு போகச்சொன்னாலும், அவருக்கு கீழ் வேலைசெய்யும் உத்தியோகஸ்தர் என்ற வகையில், அங்கு போவேன். என்னால் இயன்ற சேவையை அங்கு ஆற்றுவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும் எனக்குப் பிடித்த சில இடங்களையும் சொல்லியிருந்தேன். அவை தற்போது சாத்தியப்படாது என்பதைப் புரிய வைத்து, திருகோணமலையை ஏற்கச்சொன்னார். தரம்1, தரம் 2 என்று நிறுவனங்களைப் பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அதனால் அவர் சொன்னதை எதிர்க்க எனக்கு எந்த வார்த்தைகளும் வரவில்லை. நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டேன். இதையே பதுளைப் பணிப்பாளருக்கும் சொன்னேன். மதியம் பணிப்பாளர் நாயகம் சில வாட்ச

ஓடாத கடிகாரங்கள்..!

படம்
  காலை சற்று வேளைக்கே விழித்துவிட்டேன்..! பல யோசனைகள் வந்தன..! இடமாற்றம் பெற்று செல்லும்போது, எப்படி நடக்க வேண்டும்..? எங்கு இருக்க வேண்டும்..? தொடர்புகளை எப்படிப் பேணவேண்டும் ..? எனப்பலவாறாக மனம் ஓடிக்கொண்டிருந்தது..! கண்மூட முடியாமல் புரண்டு புரண்டு படுத்தேன். நேற்று இரவு பார்த்த ”இறுகப்பற்று..” படத்தின் சில காட்சிகளும் நினைவுக்கு வந்தன..! இன்று திருவெம்பாவைக்கடைசிப் பூஜை. மனைவியின் தலையில் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அவரே தர்ப்பைபோட வேண்டும். நான் வழமையாக அவ்வாறான விடயங்களுக்கு முன்நிற்பதில்லை. வேலைப்பளுவால் அதனை நினைத்தும் பார்ப்பதும் இல்லை. பாவம், மனைவி எல்லாவற்றிற்கும் தனியாகவே போராட வேண்டியிருக்கின்றது. வருகின்ற கிழமை இடமாற்றம் பெற்று தூர இடம் போனால், இன்னும் சிரமப்படவேண்டிய சூழல் இருக்கும். ஆகவே கிட்ட இருக்கும் சந்தர்ப்பங்களிலாவது, அவருக்கு உதவ முடிவு செய்தேன். வேலைக்கு முதலில் குறுகிய லீவு சொல்லிப் பின்னர், கால தாமதமாக, அரைநாள் லீவு சொன்னேன். நீண்ட நாட்களுக்குப் பின்னர் எனது ஊர் கோவிலுக்குப் போனதில் திருப்தி..! அதைவிட மனைவி மற்றும் மாமியாருக்கு உதவியது திருப்தி..! இன்று

ரெய்டு..!

படம்
  பொதுவாக விக்ரம் பிரபு நடித்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதற்கு காரணம் அவரது தாத்தா சிவாஜி மற்றும் தந்தை பிரபு..! இருவரது படங்களும் முன்பு   விரும்பிப்பார்ப்பது வழமை. இந்தியாவில் இருந்த காலத்தில் சிவாஜியின் படங்களை தேடித் தேடிப் பார்ப்பேன். எந்த சிறிய தியேட்டர் என்றாலும் அவரது நடிப்பிற்காகப் போவது என்பது என்னால் மாற்ற முடியாத ஒரு குணமாக முன்பு இருந்தது. எனது திருமண வருடத்தில் சிவாஜி இறந்துவிட்டார்..! அதன்பிறகு அவரது படங்கள் பார்ப்பது குறைந்துவிட்டது. தற்போது வேறுபட்ட கதைக்களங்களில் நடிக்கும் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர். அந்த வகையில் இந்தப்படத்தைப் பார்த்தேன். ஆரம்பத்தில், வில்லன்களை எல்லாம் ஒரேயடியாகப் போட்டுத்தள்ளுவது போல் காட்சிகள் வந்தன. பின்னர் அவர்கள் திரும்ப   திரும்ப உயிருடன் வருவது போல் காட்சிகள் வந்தன..! பிறகு தான் கதையே புரிந்தது..! அதற்கு இடையில் பிரதான வில்லனையும் கொன்றது போன்ற ஒரு காட்சி வந்தது. பின்னர் அது யாரோ ஒருவருடைய கனவு போல் அந்தக்காட்சி வந்தது. இவ்வாறு படத்தில் பல குழப்பங்கள் அடிக்கடி வந்தன. பின்னர் அந்தக்குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக, மறைய படம் பா

அம்மா சொன்னது..!

படம்
  திருவெம்பா என்றால் சிறுவயதில் அதிகாலை 4.00 மணிக்கு நித்திரையில் இருந்து எழுந்து, வீதியில் பல இளைஞர்களுடன் சேர்ந்து, திருவெம்பாவை பாடல்கள் பாடிக்கொண்டு ஊராட்களை நித்திரைவிட்டு எழுப்புவதும், அவர்களில் சிலர் தரும் தேநீர் மற்றும் சுவையான வடை, சுண்டல் போன்ற ஏதாவது தின்பண்டங்களுமே தற்போது நினைவிற்கு வருகின்றது..!   சிறுவயதில் அதிகம் கோயிலுக்குப் போனதாலோ என்னவோ வளர்ந்த பிறகு அது மிகவும் குறைந்துவிட்டது..! இன்று மாசியப்பிட்டியிலுள்ள கண்ணகை அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் எமது 7வது திருவெம்பா பூஜை நடந்தது. வழமையாக எனக்கு அடுத்த தம்பியே இந்த விடயத்தில் ஞானம் உள்ளவர். கோயில் போய் அனைத்துக்கடமைகளையும் செய்வார். அம்மாவும் கூடச்செல்வார். இன்று ஞாயிறு என்பதால் எனக்கு விடுமுறை. அதனால் நானும் போகவேண்டிய சூழல் வந்தது. அம்மாவின் 80வது பிறந்த நாளை நேற்று இரவு ஓரளவிற்கு கொண்டாடினோம். அம்மாவிற்கு விருப்பமில்லை என்றாலும் எனது வற்புறுத்தலுக்கு உடன்பட்டு, ஏற்றுக்கொண்டார். காலை 8.00 மணிக்கு அம்மாவையும், தம்பியின் மகனையும் ஏற்றிக்கொண்டு கோயிலுக்கு வெளிக்கிட்டேன். தம்பி நான் வெளிக்கிட முதலே சைக்கிள

ஸ்கந்தபுரம்

படம்
  அயல் வீட்டு நண்பரின் தந்தை இறந்த நாளிற்குப் போக முடியாது போனதால், இன்று அவருடைய 31ம் நாளிற்குப் போக, முதலே முடிவு செய்து வைத்திருந்தேன். கடந்த சில வாரங்களாக அலுவலகத்தில் அதிக வேலை இருந்ததால் ஊர் வேலைகளை கவனிக்க முடியவில்லை. இவ்வாறு தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் எமக்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நினைப்பு வந்தது..! இந்தப்புரிதல் 50இற்குப் பிறகு தான் வந்துள்ளது. அந்தியேட்டி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஸ்கந்தபுரம் என்ற கிராமத்தில் என்பதால், அதற்காக அதிகாலையே ஆயத்தமானேன்.   காலை 8.00 மணியளவில் நானும், மனைவியும், அயல்வீட்டு நண்பரின் மாமனாரும், மாமியாரும் எனது காரில் வெளிக்கிட்டோம். போகும் போதே பல விடயங்களைக் கதைத்துக்கொண்டு போனதால் நேரம் போனது தெரியவில்லை. கிளிநொச்சி கனகபுரம் ஊடாக அக்கராயன் செல்லும் பாதையில் சென்றோம். அந்தப்பகுதியில் பாதை கொஞ்சம் சரியில்லை என்றாலும் முதல் முறை என்பதால், அதனை ரசித்துக்கொண்டே சென்றேன். அந்த ஊர்களே மிகவும் ரம்மியமாகவும், மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை ஊட்டியபடியும் இருந்தது. பாதைகள் வளைந்து வளைந்து செல்வதால், கூகுள் மப்பின்   உதவியுடன் சென்று இருந்தாலும் இடைய

மழையில் சிரமதானம்..!

படம்
  நேற்று லீவு எடுத்து வீட்டில் சிரமதானம் செய்தேன். ஆனால் காலை 10.00மணிக்குப் பிறகு மழை வந்துவிட்டது..! அத்தோடு எல்லாம் சரி..! இன்றும் அரச அதிபர் சொன்னதற்கு ஏற்ப அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுடன் சிரமதானம்   செய்தோம்.   நேற்றுப்போல் இன்றும் மதியத்திற்கு பின் ஒரே மழை தான்..! நுளம்பைக்கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சி, பேருக்காகச் செய்தது போல் அமைந்துவிட்டது..! மாலை பெய்த மழையால் அலுவலக   வளவுகள் எங்கும் நீர் பரவிக்காணப்பட்டன..! வருட இறுதி, வந்துவிட்டதால் பல வேலைகள் சேர்ந்து விட்டன. இன்று சம்பள நாள்.    அதனை முதலில் முடித்துவிட்டு, ஏனைய சில வேலைகளையும், வெளிப்   பல்கலைக்கழகம் ஒன்றுடன் தொடர்புபட்ட பிரமுகர் ஒருவருடன் சில கலந்துரையாடல்களையும், அவர்களின் கற்கை நெறிகளை மாணவர்களுக்கு காட்ட ஏற்பாடும் செய்து, அவரை மகிழ்வுடன் அனுப்பி வைத்தேன். அதன்பின்னர், மாலை பொறியியல் துறை இருக்கும் நிறுவனத்தலைவர்களுடனும், சிரேஷ்ட விரிவுரையாளர்களுடனும்   Google meet இல் கூட்டம் வைத்து பல விடயங்களைக் கலந்துரையாடி சில முடிவுகளை எடுக்கத் தீர்மானித்தோம். வழமையாக Zoom இல் வைப்பேன். இம்முறை அந்தச்செயலி, வேலைசெய்

லீவு..!

படம்
  பொதுவாக நான் லீவு எடுப்பது குறைவு. இறுதியாகத் தொடர்ந்து லீவு தானே எடுக்கப்போகின்றோம். அதனால் இப்போது இயன்றவரை எல்லா நாளும் வேலைசெய்ய வேண்டும் என்று நினைப்பேன். கடந்த இரண்டு கிழமை தொடர் வேலைகளாலும், மழையாலும் பல வீட்டு வேலைகள் இழுபட்டுக்கொண்டிருந்தன. நான் வீட்டிலும் எனது வேலைகளை யாரிடமும் கொடுக்க விரும்புவதில்லை.   அதேபோல் அவரவர்கள் அவர்களது வேலைகளைச் சரியாகச் செய்யவேண்டும் என்று நினைப்பவன். இப்போது எனது வேலைகளையே ஒழுங்காகச் செய்ய முடியவில்லை..! அதனால் இன்று, தனிப்பட்ட காரணத்தின் நிமித்தம் ஒருவரை மாற்று ஏற்பாடாகச் செய்துவிட்டு லீவு எடுத்து நிறைய வேலைகள் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டேன். குறிப்பாக அம்மாவீட்டிற்கு போகவேண்டும் என்றும், வங்கி அலுவல்கள் பார்க்க வேண்டும் என்றும் நினைத்தேன்.   காலை வானமும் அதற்கு ஒத்துவருவதாக இருந்தது. ஒருவாறு உடுப்புக்களை வோசிங்மெசின் உதவியோடு தோய்தேன். முன்பக்கம் மழையால் அசிங்கமாக இருந்தது..! முற்றத்தில் நின்ற நெல்லிமரம் நன்றாகக் காய்த்து வீதியில் போறவர்களை கவர்ந்து இழுத்தது..! அவர்களுக்கு, அம்மரத்தைத் தானமாக வழங்கிவிட்டு, நான் சுத்தப்படுத்த

கொலைப் பழி..!

படம்
  இன்று ஞாயிற்றுக்கிழமை. வெள்ளி மற்றும் சனி DG   வந்ததால் அவரோடு மெனக்கிட வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் பல வேலைகள் வீட்டில் சேர்ந்துவிட்டன. முருங்கைக்காய் விருப்பத்தில் பல முருங்கை மரங்களை வீட்டில் வைத்திருந்தேன். மழைகாரணமாக அவற்றில் தற்போது காய்கள் இல்லை. அதனால் மரங்களைக் கவனிக்க வில்லை. இந்தநிலையில் இன்று மரங்களைப் பார்க்கும் போது பல இடங்களில் மசுக்குட்டிகள் இருந்தன. வீட்டில் ஒருவரும் அவற்றைக் கவனிக்கவில்லை. மனைவி பிள்ளைகளே அதிகம் வளவில் உலாவுவது வழமை. நான் வேலை காரணமாகவும், தொடர் மழை காரணமாகவும் வளவுக்குள் சில நாட்கள் தொடர்ந்து இறங்கவில்லை. உடனடி வேலையாக மூத்த மகளைக்கூட்டிக்கொண்டு, பழைய துணிகளைத் தடிகளில் கட்டி, கழிவு ஓயிலையும் அவற்றின் மேல் ஊற்றிக் கொழுத்தி, மசுக்குட்டிகளைக் கொன்றேன். ஆயிரக்கணத்தில் கொன்று,   பெரிய கொலைப்பழியையும் பெற்றுக்கொண்டேன். நான் மசுக்குட்டிகளைக்கொல்லப் போக பல முறை மழை வந்து தடுத்தது..! என்ன செய்வது என்று விளங்கவில்லை..? அவற்றைச் சகித்துப்போக நாம் ஒன்றும் சாமியார் அல்ல..! மசுக்குட்டி மயிர் பட்டாலே உடலில் கடி எழும்பும். இன்று, ஊழியர் ஒருவரின் தந்தை

ஜப்பான்..!

படம்
  வழமையாகக் கார்த்தியின் படங்கள் என்றால் நான் விரும்பிப் பார்ப்பேன். வேறுபட்ட கதைகளில் நடிப்பது அவரது வழமை..! சில படங்கள் நன்றாக இருக்கும். சில படங்கள் படுமோசமாகவும் இருந்துள்ளது..! இந்தப்படத்தை திரையில் பார்க்க விரும்பினேன். ஆனால் படம் பற்றி வந்த விமர்சனங்கள் மிக மோசமாக இருந்ததால் தியேட்டரிற்கு செல்லவில்லை. அதனால் இம்முறை தீபாவளியே ஒரு மாதிரி டல்லாகவே இருந்தது..! படம் வெளிவந்து ஒரு மாதம் தாண்டிவிட்டது..! OTT தளமான Netflix இலும் வந்துவிட்டது..!   வேலையால் வீடு, வரும்போது ஒரு ஜப்பான் பட CDஜ வாங்கி வந்தேன். பின்னர் இரவு போட்டுப்பார்த்தேன். படம் பராவாயில்லை. ஆனால் படத்தில் ஹீரோக்கு எய்ட்ஸ் என்பதும், கடைசியில் ஹீரோ இறப்பதும், கதாநாயகி ஓரிரு காட்சிகளோடு காணாமல் போவதும், பாடல்கள் ஒன்றையேனும் குறைந்த அளவிலாவது காட்டவில்லை என்பதும் ஒரு சலிப்பை ஏற்படுத்திவிடுகின்றது. யூடியூப்பில் பார்த்தவை கூட படத்தில் இல்லை என்பது மிகப்பெரிய குறையாகத் தெரிந்தது..! வழமையாக 2019இல் பேசப்பட்ட கொள்ளையன் முருகனின் கதை என்றாலும் எடுத்தவிதமும், காட்டப்பட்ட சம்பவங்களும் வித்தியாசமாக இருந்தன. கொள்ளையனைச் சாட்டி

”முகாமைத்துவ நேரம்..!”

படம்
  இன்று சனிக்கிழமை.   நேற்று இரவு வீடு வந்ததே 11.00 மணி தாண்டியிருக்கும். காலை போட்ட உடுப்பைக்கழட்ட 13 மணித்தியாலங்கள் தாண்டிவிட்டது..! ஒரே களைப்பு..! அப்படியே பாயைப் போட்டு, உறங்கச்சென்றேன். எனது பாயில் படுத்து உறங்கினால் தான் எனக்கு நிம்மதியான நித்திரை வரும்..! கட்டில்கள் எல்லாம் சும்மா பெருக்குத் தான் இருக்கின்றன..! படுப்பது மிக மிகக் குறைவு..! இரவு 12.00 இற்குக்கிட்ட படுத்தாலும், அடுத்தநாள் அதிகாலை 3.00 மணிக்கே எழுந்துவிட்டேன். தலைமையகத்தில் இருந்து வந்தவர்களை வலம்புரியின் கீழுள்ள துளசி என்ற விடுதியில் தங்க வைத்திருந்தேன். நுளம்புகள் காரணமாக விடுதி மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டது. அவர்கள் நித்திரை கொண்டார்களோ தெரியவில்லை..? நான் விரைவாக எழுந்ததால், விரைவாகக் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, மிக விரைவாகவே காலை 7.30 மணிக்கு வலம்புரியில் நிற்கக்கூடியதாகச் சென்றேன். அவர்களும் சிறிது நேரத்தில் வந்தார்கள். காலை உணவு அனைவருக்கும் அங்கேயே வழங்கினேன். பின்னர் அலுவலகம் வந்து, கல்வி சாரா மற்றும் போதனாசிரியர்களுக்கான கூட்டத்தை நடாத்திவிட்டு, முகாமைத்துவ நேரம் என்னும் இலத்திரனியல் புத்தகம்   வெள

பணிப்பாளர் நாயகம் யாழ் விஜயம்..!

படம்
    கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே எமது தலைமையகத்திற்கு புதிதாக பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர், இலங்கைக்கல்வி அமைச்சில் பல வெளிநாட்டு நிதித்திட்டங்களை முன்னெடுக்கும் முக்கிய பொறுப்பில் பணிப்பாளராக இருக்கும் சுஜிவா லெவான்கமகே என்பவர் எமது நிறுவனத்தையும், அதன் வசதி வாய்ப்புக்களையும், நிறுவன மாணவர்களையும் சந்திக்கவேண்டும் என்பதையும் பல முறை என்னிடம் கூறியுள்ளார். பல முறை online meeting ஊடாக இந்த விடயத்தை நினைவுபடுத்திக்கொண்டே வந்தார். அத்துடன்  எனது காலம் முடிவடைந்ததையும், திருகோணமலையில் இருக்கும் பணிப்பாளர் யாழ் வரமுயல்வதாகவும் சொன்னார். நீங்கள் இருவதும் கலந்து, அது தொடர்பான முடிவைத் தரும்படியும் பலமுறை கூறியுள்ளார்..! நான் அளித்த பதில், நீங்கள் சொல்வதை நான் கேட்பேன். நீங்கள் எங்கு போகச்சொன்னாலும் போவேன். எனக்கு எல்லாம் ஒன்று தான் என்று கூறியுள்ளேன்.  உங்களின் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப ஏதாவது நிறுவனத்தைத் கேட்கச்சொன்னார். அதன் பிறகு, தலைமையகத்தில் ஏதாவது இடம் இருந்தால் தரும்படி கேட்டேன். அதற்கான தருணம் தற்போது வரவில்லை என்ற

பல்லுக்கணக்கு..!

படம்
  நேற்று, எமது நிறுவனத்தில் நடந்த உணவுத் திருவிழாவின் போது வாங்கிய, சில தின்பண்டங்களைத் உண்ணும்போது ஒரு பல்லு இலேசாக வலித்தது. இது போதாது என்று ஞாயிறு என்பதால்   மதியம் கோழி இறைச்சியும் சோறும் உணவாக வந்தது..! அதனைச் சாப்பிட பல்லின் நிலமை இன்னும் மோசமானது. மனைவி பிள்ளைகளுடன் இரவுச்சாப்பாடாக இறைச்சியையும் பிட்டையும் உண்ணும் போது சற்று சுவை குறைவாக இருப்பதுபோல் தோன்ற, அன்று வாங்கிய மாசிபோட்ட காய்ந்த கட்டசம்பலையும் சேர்த்து உண்ணும்போது, மாசித்துண்டு பல்லுக்குள் மாட்டி ஒரு பல்லையே ஆட வைத்துவிட்டது..!   இறைச்சி சாப்பிட்ட சுவையை விட பல்லு நோவால் பட்ட அவதி கூட..!   எனது நாக்கு எந்நேரமும் அந்தக் குறித்த பல்லையே தடவிக்கொண்டிருந்தது. இரவு முழுக்க அது தொடர்ந்தது. இன்று காலையும் அதேமாதிரியே இருந்தது. பல்லைக் குறட்டால் பிடுங்கட்டா எனத்தோன்றியது. மகள் தடுத்துவிட்டாள். “நரம்புகள் பழுதாகிவிடும், டொக்டரிடம் காட்டுங்கள் அல்லது சற்றுப்பொறுமையாக நோவை சகித்துக்கொள்ளுங்கள் ” என்றாள். சரி என்று பொறுத்துக்கொண்டேன். இன்று நிறைய வேலைகள் இருந்தன. அனைத்தையும் இயன்றவரை முடிக்க நினைத்தேன். மழைவேறு இடையிடையே பெய்